செவ்வாய், 29 டிசம்பர், 2020

உணர வைத்தாய்...

அழகில் கர்வம் கொண்டேன்...
அழகிற்கு மதிப்பே இல்லை என்று உணர வைத்தாய்...


அறிவில் கர்வம் கொண்டேன்...
அது குறையவும் கூடும் என்பதை உணர வைத்தாய்...

பணத்தில் கர்வம் கொண்டேன்...
ஒருவேளைக்குக் கூட அதை உண்டு பசியாற்ற முடியாது என்பதை உணர வைத்தாய்...

செல்வத்தில் கர்வம் கொண்டேன்...
தேவைக்கு உதவாத அதுவும் வீணென உணர வைத்தாய்...

அன்பில் கர்வம் கொண்டேன்...
பிரிந்து சென்று அதுவும் பொய்யென உணர வைத்தாய்...

இனியபாரதி. 

திங்கள், 28 டிசம்பர், 2020

நல்ல பயணம்..

பல வண்ண நிறங்களில் தெருவிளக்குகள்...

பல வண்ண உடைகளில் மனிதர்கள்...

பல வண்ணங்களில் விற்பனையகங்கள்...

பல விதமான காட்சிகள்...

கடுமையான குளிர்காற்று...

ஒதுங்கக் கூட இடம் இல்லை...

வேகமான விரைகின்றன அவளின்  கால்கள்...

அவள் எதிர்காலத்தை நோக்கி...

இனியபாரதி. 

சனி, 26 டிசம்பர், 2020

கனாவும் காதலும்...

பாதிக் கனாவில் விழித்துக் கொண்டேன்...

பின்!!!

கனவில் கண்ட 

அவளின் அழகும்

அவள் முகமும்

என்னைத் தூங்கவிடவில்லை...

படுக்கையில் புரண்டதைத் தவிர

வேறு ஒன்றும் செய்யவில்லை நான்...

அந்த இரவு 

என் அலைபேசியின் அழைப்போசை...

யாரென்று எடுத்தால்...

என் தேவதையின் அழைப்பு...

ஆச்சரியம்!!!

நான் தூங்கவில்லை என்று அவளுக்கெப்படித் தெரியும்???

அழைப்பை ஏற்ற முதல் நொடி அவளிடம் இருந்து வந்தது...

"எனக்குத் தூக்கமே வரவில்லை...

அதனால் தான் உங்களை அழைத்தேன் என்று..."

இதுவும் ஒரு வகையான அன்பு போல...

எல்லோருக்கும் கிடைப்பதில்லை...

இனியபாரதி. 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

ஐம்புலன்களின் அழகியே....

என் அழகியே...

உன்னில் என் நிறைவைக் காண்கிறேன்...

உன்னில் என் தாய்மை உணர்கிறேன்...

உன்னில் என் துன்பம் மறக்கிறேன்...

நீ என் முதற்பொருள்...

நீயே என் எல்லாம்.

இனியபாரதி. 

புதன், 23 டிசம்பர், 2020

தெரிந்து கொள்...

கேளாமல்  கிடைத்ததால் என்னவோ

அவளின் அருமை கடைசி வரை

அவனால் உணரப்படவில்லை...

ஆனால்

அவளுக்கு அவன் மீதிருந்த அன்பும் குறையவில்லை...

அவனைப் பற்றிய நினைவும் அகலவில்லை...

அவன் நினைப்பதென்னவோ..

அவளும் மற்ற பெண்களைப் போல் தான் என்று...

காரணம்...

அவன் பழகிய பெண்கள் எல்லாம் அப்படித்தான்!!!


இனியபாரதி. 


செவ்வாய், 22 டிசம்பர், 2020

கவிதை வந்ததும்...

கவிதை வந்ததும்

காணாமல் போய்விட்டாள்

என் அழகுப் பதுமை!!!

வெட்கம் அவளை மட்டும் விட்டு வைத்ததா என்ன???

கவிதையின் வரிகளும்

அவள் வெட்கத்தைப் பற்றி பேசாமல் இல்லை...

புரியாமல் அவளும்...

புரிந்துவிட்ட நிலையில் நானும்...

இனியபாரதி. 

திங்கள், 21 டிசம்பர், 2020

கொடுக்காமலே இருந்திருக்கலாம்!!!

காலங்கள் கடந்தாலும்

அவள் கொடுத்த காயங்கள் மட்டும்

என்றும் அழியாது...

கொடுக்காமலே இருந்திருக்கலாம்

காயத்துடன் காதலையும் சேர்த்து...

இனியபாரதி. 


???

ஒருவரை நம்பி ஏமாறுவதை விட...

ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றுவது தான்

உச்சகட்ட "போலித்தனத்தின் வடிவம்..."


இனியபாரதி. 

அன்பை...

எங்கோ இருந்து கொண்டு

காட்டினேன் என் அன்பை...

அவளும் எங்கோ இருந்து கொண்டு

காட்டினாள் அவள் அன்பை....

"வேறு ஒருவனிடம்!!!"

இனியபாரதி.

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

ஒரு மாற்றம்...

என் அறையில் மாற்றம்...

என் உள்ள அறையின் எண்ணங்களில் மாற்றம்...

என் பாதைகளில் மாற்றம்...

என் வாழ்வில் மாற்றம்...

என்னை மேன்மைப்படுத்தவா?

இல்லை!!!

தனிமைப்படுத்தவா??

இனியபாரதி.

சனி, 19 டிசம்பர், 2020

தேடிய பாதை...

நீண்ட சாலை....

சாலை ஓரத்தில்...

பசேல் மரங்கள்...

மிதமான சாரல்....

குளிர்ந்த வானிலை...

மெல்லிய தென்றல்...

ஒரு கட்டத்தில் பிரியும் சாலை...

என் பாதை எது?

இனியபாரதி.


செவ்வாய், 1 டிசம்பர், 2020

கவிதையும் கனாவும்...

அவளுக்குத் தெரிந்த கவிதை எல்லாம்

ஒன்றே ஒன்று தான்...

கனாவில் வந்த அவனது திருஉருவம்...

இனியபாரதி. 

சனி, 28 நவம்பர், 2020

கருணை வேண்டி...

உன்னை மட்டுமே தேடினேன்...

வாழ்வே நீயென நினைத்தேன்...

அதிகம் சிரித்தேன்...

அதிகம் அழுதேன்...

அதிகம் ஆறுதல் தேடினேன்...

சற்று ஓய்வு கொண்டேன்...

திரும்பிப் பார்த்தேன்...

காத்திருந்தேன்...

கவலை கொண்டேன்...

காரணம் தேடினேன்...

மன உளைச்சல் அடைந்தேன்...

மன்னிப்பு வேண்டினேன்...

தியாகம் செய்தேன்...

மரணம் வேண்டினேன்...

எது எனக்குக் கிடைத்தது?

"உன் கருணையைப் புகழ!!!"


இனியபாரதி.

வெள்ளி, 27 நவம்பர், 2020

சென்று வா...

"சென்று வா" என்று உடனடியாக என்னால் சொல்ல முடியவில்லை என்றாலும்,

நீ செல்ல வேண்டிய தூரம்
அதிகம் என்பதால் சம்மதிக்கிறேன்...

காரணம்,

நீ என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கை மட்டுமே!!!

இனியபாரதி. 

அவள் என் காதலி...

கண்டும் காணாமல் செல்கிறேன்...

விருப்பத்துடன் எப்போதும் உன்னை நோக்கியதில்லை...

செல்லும் வழி எல்லாம் நீ இருந்தாலும் 
நான் தேட நினைக்கவில்லை உன்னை...

என்னை நீ அன்பு செய்கிறாயா என்று கூட எனக்குத் தெரியவில்லை...

நான் கண்டு கொள்ளாத போதும்,

எனக்காய் நீ இருக்கிறாய் என்ற ஒரு திருப்தி மட்டும் 

என்றும் என்னுடன்...

"என் இனிய மனம்"

இனியபாரதி. 


வியாழன், 26 நவம்பர், 2020

காரணமே இல்லாமல்...

காரணமே இல்லாமல் 

சண்டை எழும் போது

அதைத் தட்டிக் கழிப்பதை விட,

இனி சண்டை எழாமல் இருக்க

நான் என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்கலாம்!!!

இனியபாரதி. 


காதலும் கடலும்...

கடல் அமைதியில் அழகு இல்லை...

காதலும் அமைதியில் அழகு காண்பதில்லை...

கடல் இரசிக்க வைக்கும்...

காதலும் அதைப் போலவே...

கடல் கோபத்தில் கொந்தளிக்கும்...

காதலும் அப்படியே!!

கடல் காத்திருக்கும் காதலர்கள் வருகைக்காய்...

காதலும் காத்திருக்கும் காதலர்கள் புரிதலுக்காய்...

இனியபாரதி. 

திங்கள், 23 நவம்பர், 2020

மறுக்கப்பட்ட.... மறைக்கப்பட்ட...

அன்பில் ஆயிரம் வகை!!!

அதில்,

மறுக்கப்பட்ட அன்பு ஒரு வகை.

மறைக்கப்பட்ட அன்பு ஒரு வகை.

இவ்விரண்டிலும் வலி மட்டும்

"அந்த வலிமையற்ற ஒருவருக்கே!!!"

இனியபாரதி. 

சனி, 21 நவம்பர், 2020

சிறு துரும்பும்...

சிறு துரும்பு கூட

பல் குத்த உதவும்

என்பது பழமொழி.

சிறு துரும்பு

எல்லாவற்றிற்கும் உதவும்

என்பது புதுமொழி...

இனியபாரதி. 


வெள்ளி, 20 நவம்பர், 2020

இனிக்கும்....

அப்படி ஒரு இடம் கிடைக்குமா???

அப்படி ஒரு நாள் வருமா???

அப்படி ஒரு அதிசயத்தை நான் காண்பேனா???

அப்படி ஒரு வரலாறு உருவாகுமா???

தெரியவில்லை...

ஆனால்

எல்லாம் இனிக்கும்.

இனியபாரதி. 

வியாழன், 19 நவம்பர், 2020

உன் அழகுக்கு இணையுண்டோ?

தெவிட்டினால் அருந்த முடியாத

அமிர்தத்திற்குக் கூட

அளவு இருக்கிறது...

உன் அழகை வருணிக்க

வரையறையே இல்லை...

எங்கிருந்து பெற்றாய்?

உன்னைப் பெற்றவள் பாக்கியம் பெற்றவளே!!!

இனியபாரதி. 

புதன், 18 நவம்பர், 2020

இப்படியுமா?

காரணம் தெரியாமல் வந்தாலும்

சில நாட்களில் காரணம் தெரிந்து விடும்...

அந்தக் காரணமே 

இறுதி வரை நிலைத்து நின்று

வெற்றி பெறும்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 17 நவம்பர், 2020

காந்தமும் அவள் கண்களும்...

காந்தம் ஈர்க்கும்!!

அவள் கண்களும் ஈர்க்கும்!!!

காந்த ஈர்ப்பு விசைக்கான 

காரணம் அறிந்து கொண்டேன்...

அவள் கண்களின் விசைக்கான

காரணம் அறியத் துடிக்கிறேன்...

இனியபாரதி. 

திங்கள், 16 நவம்பர், 2020

அடியோ... கடியோ....

அடியும் கடியும் ஒன்று தான்...

அவள் அருகில் இருந்தும்

அவள் அருகில் இல்லாமலும்

காரணம் ஒன்று தான்

???

அவளுக்கு வலிக்கப் போவதில்லை!!!

இனியபாரதி. 

சனி, 14 நவம்பர், 2020

அன்பின் ஒளி...

காண்பதும்

கேட்பதும்

உணர்வதும்

சில வேளைகளில் தவறலாம்...

ஆனால்

அன்பால் நிறைந்திருக்கும்

அந்த உள்ளம்

என்றும் நிலைபெற்று

ஒளிர்ந்து கொண்டு இருக்கும்...

இனியபாரதி. 

வியாழன், 12 நவம்பர், 2020

அவளின் குளுமை...

அவள் தலைமுடி என்னை வருடிச் சென்றதில்லை...

அவள் கால்களின் மென்மை நான் அறிந்ததில்லை...

அவள் இமைக்கும் பொழுதை நான் இரசித்ததில்லை...

அவள் அணைப்பின் ஸ்பரிசம் நான் உணர்ந்ததில்லை...

ஆனாலும் அவள் தரும் குளுமை தணியவில்லை...

இனியபாரதி. 

புதன், 11 நவம்பர், 2020

தன் ஒளி...

அவளும் அப்படித் தான்....

தன் ஒளி எப்படி பயன்படுத்தப்பட்டாலும்

எல்லோருக்கும் சமமாக ஒளி கொடுப்பாள்...

இவளைப் போல...

இனியபாரதி. 

திங்கள், 9 நவம்பர், 2020

குழந்தை போல...

குழந்தை....


எதைப் பற்றியும் யோசிக்காது....

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கூட யோசிக்காது...

தன் அழகைப் பற்றி யோசிக்காது...

தன் அறிவைப் பற்றியும் நினைக்காது...

தன் செல்வச் செழிப்பைப் பற்றி சிந்திக்காது....

அது போல ஒரு வாழ்வு வேண்டும்...

இனியபாரதி. 

ஞாயிறு, 8 நவம்பர், 2020

பணம் இல்லாமல் ஒன்றுமில்லை....

வெற்றி 

தோல்வி

காதல்

அன்பு

பரிவு

கரிசனை

கௌரவம்

இன்னும் என்னென்னவோ கூட

பணத்தைக் கொண்டு தான் நிர்ணயிக்கப்படுகின்றன...

இனியபாரதி. 

சனி, 7 நவம்பர், 2020

அவள் மட்டும் தான் காரணம்....

சிறிது சிறிதாய் சேர்த்து வைத்த அன்பு...

அப்படியே அழிந்து போக அவள் மட்டும் தான் காரணம்...

அவளிடம் இருந்த எல்லாம் தவறு...

அவன் எதிர்பார்த்த எதுவும்

அவளிடம் இல்லாமல் இருந்ததும் தவறு...

இனியபாரதி.

வியாழன், 5 நவம்பர், 2020

அன்பு அம்பு...

அன்பு!!!

செய்வதெப்படி என்பது தெரியாது...

புரிந்து கொள்ளவும் தெரியாது...

நன்றாய் பதற்றமடையும்...

எதிலும் முடிவு எடுக்கத் தெரியாது...

கருணை காட்ட முடியாது...

காரணமும் கூற முடியாது...

கட்டுப்பாடு உண்டு...

கவலை இல்லை விட்டுச்சென்றாலும்...

கண்கள் கலங்கும் தேவையும் இல்லை...

இனியபாரதி.

புதன், 4 நவம்பர், 2020

இருந்து பார்க்கலாம்....

யாருடனும் பேசவோ பழகவோ கூடாது

என்று நினைக்கும் போதுதான்

உறவுகள் தேடி வரும்...

அவ்வாறு வரும் போது

விட்டுச் சென்ற உறவுகள்

கொடுத்த வலிகள்

நம்மிடம் வேறு யாரையும் அண்டவிடாது...

இனியபாரதி. 

கொடுமையா??? கொடூரமா???

பகைவரோ!!! நம்மைப் பழிப்பவரோ!!!

நமக்கு எதிராக இருக்கும் போது

கோபம் வருவதில்லை...

நம்மை அன்பு செய்வது போல்

நடித்துக் கொண்டு

நம்மை ஏமாற்றும் கொடியவர்களைத் தான்

என்ன செய்வது???

காலம் பதில் கூறும்..

இனியபாரதி. 

செவ்வாய், 3 நவம்பர், 2020

காற்றுக்குக் கிடைத்திருக்கிறது...

அவன் படுக்கையில்

அவனுடன் உறவாடும் 

அதிகாலைத் தென்றல்...

அவன் குளியலறை நீரில்

கரைந்திருக்கும் காற்று...

அவன் உணவில்

அவனுக்குள் செல்லும் காற்று...

அவன் செல்லும் இடமெல்லாம்

இருக்கும் காற்று...

எல்லாம் கொடுத்து வைத்திருக்கின்றன 

அவனுடன் இருப்பதற்கு!!!

இனியபாரதி. 

திங்கள், 2 நவம்பர், 2020

கருணையும் காதலும்....

கருணை என்பது

இல்லாத ஒருவருக்கு

என்னால் இயன்ற உதவி செய்வது....

காதல் என்பது

எத்தனை பேர் இருந்தாலும்

உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர்த்துவது...

இதில் பெருமை என்னவென்றால்...

காதல் என்று நினைத்தால்

அது கருணையாய் இருக்கும்...

கருணை என்ற இடத்தில்

காதலாய் இருக்கும்...

குழப்பம் யாரையும் விடுவதில்லை...

எல்லாவற்றையும் விட

தனிமையே சிறந்தது....

இனியபாரதி.  

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மயிலிறகுக் கண்ணழகா...

அழகுக்கு இலக்கணம்

மயில் இறகு...

அவன் கண்களும்

அதைப் போல் தான்...

இரண்டு மயில் இறகுகளை

அருகருகே வைத்தது போன்ற அவன் கண்கள்...

எப்படிப் பார்த்தாலும்

எவ்வளவு நேரம் பார்த்தாலும்

சலிப்பைத் தருவதே இல்லை...

இனியபாரதி. 

வியாழன், 29 அக்டோபர், 2020

கருவாச்சி...

தெளிவற்ற அவள் முகம்

தேடும் என் மனம்...

தீண்டலோ...

கொஞ்சலோ...

காயம் கொடுக்கவில்லை....

உன் அழகில் சிறிதும் குறைவு இல்லை...

நெஞ்சம் எல்லாம் நீயாக...

தேடி வந்தேன் தனியாக...

கேட்பதெல்லாம் ஒரு வரமே...

என் கருவாச்சி என்றும் என் சொந்தமே!!!

இனியபாரதி. 

செவ்வாய், 27 அக்டோபர், 2020

வாசம் குன்றிய மலரே!!!

 பிறர் தோட்டத்தில் பூக்கும் அழகிய மலரை விட

உன் தோட்டத்தில் பூத்த வாசம் குன்றிய மலரே

என்றும் உனக்குச் சொந்தம்!!!


இனியபாரதி. 

கடின உள்ளம்....

 அவன் இல்லையே என்று ஏங்கித் தவித்த அவளுக்கு ஆறுதலாய் இருந்தவைகள் வெகுசில.... 


அவளுக்கு எல்லாத் திறமைகள் இருப்பினும் இப்படித் திரிகிறாளே என்று பிறர் இட்ட சாபம்... 


கேவலமாய் நோக்கிய சில பார்வைகள்... 


உச்சி வெயிலிலும் இருளடைந்து தெரிந்த அருகாமைகள்.... 


இவை எப்படி ஆறுதல் தந்தன???


இவை எல்லாம் அவள் அடிமனதில் ஆழமாய் பதிந்திருந்த அவன் அன்பை

ஆணிவேரோடு பிடுங்கி எறிய

அவள் உள்ளத்தை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தன.... 


இனியபாரதி.

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பதிலன்பு...

அவள் அன்பு கோபமாய் இருந்தால்
என் அன்பு மெளனமாய் இருக்கும்...

அவள் அன்பு சந்தேகப்பட்டால்
என் அன்பு சமாதானப்படுத்தும்...

அவள் அன்பு பேசாமல் இருந்தால்
என் அன்பு அவளைப் பற்றியே சிந்திக்கும்...

அவள் அன்பு கர்வம் கொண்டால்
என் அன்பு காத்திருக்கும்...

அவள் அன்பு காயப்படுத்தினால்
என் அன்பு கண்ணீர் சிந்தும்...

அவள் அன்பு உண்மை கொடுத்தால்
என் அன்பு உயிரைக் கொடுக்கும்...

இனியபாரதி. 

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அவள் விழிகள் மட்டும் போதும்...

அவள் இருவிழிகளும்

அடிக்கடி என்னையே பார்ப்பது போன்ற உணர்வு...

அது உண்மையா!!! உணர்வா!!!

என்று உணர முடியாத அளவிற்கு!!!

இனியபாரதி.

புதன், 21 அக்டோபர், 2020

அளவே இல்லை...

அவளின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை...

தன்னைப் போல் தன்னவனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம்
அவளை வேறு யாருடனும் அண்ட விடவே இல்லை...

இனியபாரதி.

அவளின் பூஞ்சோலையில்...

அவளது பூஞ்சோலையில் பூத்த

அந்த மலருக்கு மட்டும்

அவள் மீது அளவுகடந்த பிரியம்

அந்த மலரை 

அவள் பறிப்பதும் இல்லை...

இரசிக்காமல் இருப்பதும் இல்லை...

வாடவிடுவதும் இல்லை...

யார் கண் பட்டதோ!!!

வழிபோக்கன் பறித்துச் சென்றுவிட்டான்...

இனியபாரதி. 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது...

'நன்றி' என்று

ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது...

அந்த நன்றிக் கடனுக்காகவே

நான் வாழ்கிறேன்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

அள்ளித் தந்தவைகள்...

கேளாமல் அவள் அள்ளித் தந்தவைகளில் சில...

1. அன்பு

2. பொறுமை

3. அரவணைப்பு

4. ஆறுதல்

5. புன்சிரிப்பு

6. பேச்சு

இவைகளை எல்லாம் தோற்கடித்தது

அவளின் சில மணிநேர "மெளனம்"

இனியபாரதி. 

வியாழன், 1 அக்டோபர், 2020

எல்லாம் கற்பனையே....

அவளுக்கு உன் மீதிருந்த அன்பு...

உன் மீது காட்டிய அக்கறை...

உன்னைப் புகழ்ந்தது....

உன்னை அரவணைத்தது...

எல்லாம் கற்பனையே!!!

நிஜம் அல்ல...

இனியபாரதி.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

என்னவன் அழகு...

தூர இருந்து இரசிப்பது ஒரு அழகு என்றால்,
மிக அருகிருந்து இரசிப்பது ஒரு அழகு தான்...

தொட்டு இரசிப்பது ஒரு அழகு என்றால்,
தொடாமல் இரசிப்பது ஒரு அழகு தான்...

வார்த்தைகளால் வருணிப்பது ஒரு அழகு என்றால்,
மெளனமாய் பார்த்துக் கொண்டே இருக்க வைப்பதும் ஒரு அழகு தான்...

இனியபாரதி. 

சனி, 19 செப்டம்பர், 2020

குட்டி குட்டி இதயங்கள்...

குட்டி குட்டி இதயங்கள் ஆயிரம் இருந்தாலும் அழகு...

குட்டி இதயம் சிரியவற்றையே யோசிக்கும்...

அதன் சிரிப்பு உண்மை...

அதன் அழுகை அர்த்தமுள்ளது...

அதன் அன்பு அளவிட முடியாதது...

இறைவா... குட்டி இதயம் தாரும்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வாழ்வின் இனிமையே...

 அவளின் அழகு கன்னக் குழிகளும்

கண் இமைகளும் மட்டும் தான் அழகென்று நினைத்தேன்... 


அவளின் சின்னஞ்சிறு செயல்கள் கூட...

என்னை மெய்சிலிர்க்கச் செய்யும் தருணங்கள்...

என் வாழ்வின் இனிமையை இன்னும் கூட்டுகின்றன... 


இனியபாரதி. 

வியாழன், 17 செப்டம்பர், 2020

காதல் வரம்.....

வரம் ஒன்று கேட்கிறேன் உன்னிடம்....

நீ இல்லை என்னாது கொடுப்பாய் என்பது எனக்குத் தெரியும்...

நீ வரும் போது இருக்கும் உன் அழகிய சிரிப்பில்
பாதியை எனக்குக் கொடுத்துவிடு...

அந்தச் சிரிப்பை நீ மறுமுறை வரும்வரைக் கவனமாய் கையாள்வேன்...

இனியபாரதி. 


புதன், 16 செப்டம்பர், 2020

ஜே ஜே சில குறிப்புகள்....

ஜே ஜே சில குறிப்புகள்....

ஜே ஜே படத்தைப் பார்த்த பின் 
படிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம்...

நீண்ட வருடங்கள் இடைவெளிக்குப் பின்
மறுபடியும் மனதில் முளைத்தது...

நமக்குத்தான் ஆறுதல் தர..

ஆற்றுப்படுத்த அமேசான் உள்ளதே...

வாங்கிவிட்டோம்...

அறையே அழகாய் உள்ளது போன்ற ஒரு உணர்வு...

நேரம் கொடுத்து படிக்கலாமே!!!

இனியபாரதி. 

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

பரிதாபம்...

காலை எழுந்தவுடன்

உற்சாகம் தர

நானாய் உன்னை வந்து சேர்கிறேன்...

எப்படியும் என்னைத் தூங்க வைக்க

நீ சந்திரனை அனுப்பி விடுகிறாய்!!!

இது என்ன நியாயம்?

இனியபாரதி. 

திங்கள், 14 செப்டம்பர், 2020

ஊமைப் பூ...

நான் நடந்து செல்லும் அவ்வழியில் தான் அவளும் நிற்கிறாள்....

அழகுப்பதுமை பால் அபிக்ஷேகம் செய்யப்பட்டது போல் நிறம்...

குட்டி இடை...

நளின நடை...

பார்த்தாலே பரவசம் தான்...

ஆனால் ஊமைப் பெண்ணாய் இருப்பது மட்டும் தான் அவள் குறை போல!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

கண்கட்டி வித்தை...

கலகம் ஏதும் செய்ததில்லை

அவள் காலடி பிடித்து முத்தமிட...

தானாக வந்தவள்...

தகவல் சொல்லாமல் சென்று விட்டாள்...

Oh Baby பரிதாபங்கள்...


இனியபாரதி. 

சனி, 12 செப்டம்பர், 2020

இப்படி எல்லாமோ???

இப்படி எல்லாம் நடக்குமா என்று

நான் எதிர்பார்த்ததே இல்லை... 

அனுபவம்...

அருமையான ஆசான்...

வெளியே செல்... கடல் கடக்கப் பழகு...

இது மட்டும் அல்ல...

இன்னும் நிறைய கற்றுக் கொள்வாய்...

இனியபாரதி. 

திங்கள், 7 செப்டம்பர், 2020

நேரம் அறியாமல்...

இரவா பகலா என்று கூட யோசிக்காமல்

நீ நினைக்கும் போதெல்லாம்

அவளை அழைக்கலாம் என்று

உன்னால் ஆணித்தரமாக

சொல்ல முடிந்தால்

அவள் தான் உனக்காகக் காத்திருப்பவள்...

இனியபாரதி. 

சனி, 5 செப்டம்பர், 2020

அவளைக் குறிக்கும்...

அவளைக் குறிக்கும் வேறு சில பெயர்கள் மிகவும் அழகானவை...

அதில்...

அழகியும் அடங்கி இருக்கிறது...

அவளது புனைப் பெயர்களைக் கேட்கவே ஒரு நாள் வேண்டும்...
அதற்கு அவனும் அருகில் இருக்க வேண்டும்...

இனியபாரதி. 

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

போதும் என்ற மனம்...

போதும் என்ற மனம் எப்போது வரும்?

என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று நான் நினைக்கும் போது...

எனக்கு எல்லாம் இருப்பது போன்ற ஒரு உணர்வு...

ஆனாலும்...

போதும் என்று நிறுத்திக் கொள்ள முடியவில்லை!
"உன் அன்பு கிடைக்காததால்...."

இனியபாரதி. 

வியாழன், 3 செப்டம்பர், 2020

அன்புடன்...

அன்பு எப்போதும் இருக்கும்...

அதைக் காட்டும் விதம் தான் மாறும்...

அதற்காக அன்பில்லை என்றால்

எல்லாம் முடிந்துவிடுமா என்ன?

இனியபாரதி. 

புதன், 2 செப்டம்பர், 2020

அவளுடன்..

அவள் கொடுத்த பரிசுப்பொருட்கள்
அவளை அடிக்கடி நினைவூட்டினாலும்...

அவளுடன் இருந்த பொழுதுகளை நினைவூட்ட
பரிசுப்பொருட்கள் தேவை இல்லை...

இனியபாரதி. 

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

கருவிழியும் கதை பேசும்...

அவள் சொல்லைக் கேட்டுக் கொண்டே

அவள் கண்கள் என்னை நோக்கும் அழகை

நான் ரசிக்கும் போது

என்னுள் எழும் சிலிர்ப்பு

என்றும் அடங்காது...

அவள் கண்களே கதை பேசும்....

இனியபாரதி. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

என்ன நிறமோ?

அவளுக்குப் பிடித்ததெல்லாம்
கருமை நிறம் என்பதால்
எல்லாவற்றையும் கருப்பாய் மாற்றினேன்...

என் இதயத்தையும் சேர்த்து...

இனியபாரதி. 

சனி, 29 ஆகஸ்ட், 2020

அந்தக் குழி...

அந்தக் கன்னக் குழியில் விழுந்த நான்

எழவே இல்லை...

காரணம்...

அது ஆழமான படுகுழி...

இனியபாரதி. 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காரணமறியா புன்னகை....

வழக்கம் போல் எல்லாம் நடக்கும்...

ஆனால்...

பேச்சில் ஒரு மாற்றம்...

நடையில் ஒரு மாற்றம்...

சிந்தனையில் ஒரு மாற்றம்...

அழகில் ஒரு மாற்றம்...

சிரிப்பில் ஒரு மாற்றம்....

இது தான் காதல் போல...

இனியபாரதி. 

புதன், 26 ஆகஸ்ட், 2020

கனவு கலையாமல் இருக்க...

அவள் கனவு கண்டாள்...

அவன் அதை நிறைவேற்றினான்...

கனவு காண்பதும் சுகம்...

அதை நிறைவேற்றி வைப்பது அதைவிட சுகம்...

ஒருவேளை...

காலம் மாறலாம்...

எல்லாம் மாறலாம்...

அவள் அன்பு மட்டும் என்றும் மாறாது...

இனியபாரதி. 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

எதிர்நோக்கு...

நம்பிக்கை 

எதிர்நோக்கு

என்று பல வார்த்தைகள்

நம் காதில் விழுந்தாலும்

ஏதோ ஒரு திசையை நோக்கி

நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது

என்று நினைக்கும் போது

சற்று வருத்தமாகத் தான் உள்ளது...

இனியபாரதி. 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காலம் ஒரு கோலம்...

எப்படியோ கடத்தி விடலாம் 
என்று நினைத்தாலும்
நான் இப்படித்தான் நகர்வேன் என்று
அன்னநடை போடும்
இந்தக் காலம்
ஏன் சித்திரவதை செய்கிறது
என்று தெரியவில்லை...

இனியபாரதி. 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

அவசியம் எனில்...

மிகவும் அவசியம் எனில்
என்னை அழை...

நான் உனக்காக நேரம் செலவழிக்க அல்ல...
என் வாழ்க்கையை செலவழிக்க...

இனியபாரதி. 

சனி, 22 ஆகஸ்ட், 2020

கிளிப் பிள்ளை...

சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை...

அது எப்படி?

தனக்குப் பிடித்தவர் எது சொன்னாலும் செய்வதைப் போல்...

இனியபாரதி. 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

அவன் மட்டும் போதுமே...

ஒன்றும் இல்லை என்று சொன்னாலும்
அவள் முகத்தைப் பார்த்தே
அவள் மனம் அறியும் அவன்
அவளை எப்போதும் காயப்படுத்தாமல்
இருக்கத் தான் நினைப்பான்!!!

இனியபாரதி. 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

என்ன என்று?

யாருக்கும் சந்தேகம் வராமல்

ஒருவரை அன்பு செய்வதும்...

யாரும் அறியாத படி

ஒருவரை அன்பு செய்வதும்...

யார் முன்பும் அன்பு செய்வதைக்

காட்டிக் கொள்ளாமல் இருப்பதும்...

யாரை அன்பு செய்கிறோம் என்பதையே

சில நேரங்களில் மறந்து விடுவதும்...

மனித குணம் என்று தான் நினைக்கிறேன்...

இனியபாரதி. 

புதன், 19 ஆகஸ்ட், 2020

கவிதை சொல்லும் கண்கள்...

கண்கள் மட்டும் பேசும் மொழி காதல்... 

அது யாரோ இருவருக்கு வருவது அல்ல...

ஜென்மம் பல கடந்தாலும் 
அந்த ஒரு உணர்வு வரும் இருவர் மட்டுமே
என்றும் சேர்ந்து வாழ முடியும்...

இனியபாரதி.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கொஞ்சம் பொறு...

கொஞ்சம் பொறு...

கொஞ்சம் பொறு...

என்று எல்லாவற்றிலும் பொறுமையாய் இருந்தது போதும்...

உனக்கான நேரம் இது...

புகுந்து விளையாடு...

இனியபாரதி. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சாபம் பலிக்குமா?

பிறர் நமக்கு இட்ட சாபம் பலிக்காது என்று நாமே முடிவு செய்துவிடுகிறோம்....

காரணங்கள் கூட பல கூறலாம்...

என்னைச் சொல்ல அவன் என்ன யோக்கியனா?

நான் நல்லவன்...எனக்கு எந்த சாபமும் பலிக்காது...

இவை பொய்யோ உண்மையோ... 

சில நேரங்களில் அந்த அயோக்கியன்கள் கூறும் வார்த்தைகள் கூட பலித்து விடுகின்றன...

இனியபாரதி. 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தனிமைக் காதலி...

செல்லும் இடத்திற்கு எல்லாம்

எல்லோரையும் அழைத்துச் செல்ல முடியாது.

ஏதோ ஒரு இடத்தில் அவர் நம்மைப் பிரிந்து தான் ஆக வேண்டும்...

அப்படி ஒரு சூழலில்,
நாம் தனிமைப்படுத்தப்படும் உணர்வு
மேலோங்கி நிற்கும்...

அதற்கு... 
தனிமையைப் பழக்கி வைத்துக்கொள்வது நல்லது...

இனியபாரதி. 

சனி, 15 ஆகஸ்ட், 2020

உறக்கம் தேவையோ?

இன்றைய நாட்களில் பெரும் கொடுமையாய் இருப்பது

இந்த உறக்கம் இன்மை தான்...

ஆனால்...

இரவு நேர விழிப்புகள் மனதிற்கு ஒரு அமைதியையே தருகின்றன...

பின் ஏன் இதை யாரும் விரும்புவதில்லை???

மெளனமான நேரம்...

பலவற்றை எண்ணி எண்ணி குழம்பிய
மனதை ஆற்றவே இந்த இரவு நேரம்... 

சகா பாடலுடன்...

இனியபாரதி. 

சமையல் ஒரு கலை அல்ல... வரம்...

யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பதைப் போல்...

யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் என்ற என் எண்ணம் தவறானது...

அது ஒரு வரம்...

என் அம்மாவின் சமையல் கண்டு வியந்ததுண்டு...

கேரளாவின்  பல வகை உணவுவகைகளின் பெயர்களைக் கேட்டே வியந்ததுண்டு...

இவை எல்லாம் சுலபமாக எனக்கும் வந்து விடும் என்றிருந்தேன்...

ஆனால்... இந்த வரத்தைப் பெற
பொறுமை மிகவும் அவசியம் போல!!!

சரிபடுமா? 

மனைவிகளின் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான் போல???

இனியபாரதி. 

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

காதல் மட்டுமே...

தன் செல்லம்மா மீது மட்டுமே

காதல் கொண்டு

தன் மனைவி, தன் பிள்ளைகள்

என்று நினைத்திருந்தால்

பாரதி எப்படி சுதந்திர உணர்ச்சி பொங்கும்

பாடல்களைப் பாடி இருப்பார்??

அன்பு.. அருகிருந்து கொடுப்பதில்லை என்று நினைத்துவிட்டான் போல!!!

மேலே சென்றதும் வருந்தி இருப்பான்...
எதையும் அனுபவிக்காமல் 
வந்துவிட்டேனே என்று!!!

இனியபாரதி. 

திருப்தியில்...

கடற்கரை ஓரம்

அவர்களின் அன்புப் பரிமாற்றத்தை

இரசித்தபடி

தூங்கச் சென்றது

நடுநிசி நிலா!!!


இனியபாரதி. 


வியாழன், 13 ஆகஸ்ட், 2020

இருக்கலாம்...

வைரமாகவே இருந்தாலும்

ஜொலிப்பதும்

ஜொலிக்காமல் இருப்பதும்

வாங்கித்தந்தவரின்

மனத்தைப் பொருத்துத் தான்...

இனியபாரதி. 

ஊதா...

ஊதா நிறம் எனக்குப் பிடிக்கும்...

காரணம் உனக்குத் தெரியாது...

ஏனென்றால்

நீ இரசித்தது நிறத்தை அல்ல....

அதற்குள் ஒளிந்திருந்த மகரந்தத்தை!!!

இனியபாரதி.


அழகிய இம்சை...

கொட்டிக் கொண்டிருக்கும் 

மழையின் சாரல்

முழுதாய் முகத்தில் படவில்லை என்றாலும்

அதன் ஈரப்பதம் 

அவள் முகத்தில் ஏற்படுத்திய

சிறு சிறு திவலைகள்

அவள் முகத்தை முத்தமிடவே அழைக்கின்றன!!!

இனியபாரதி. 

புதன், 12 ஆகஸ்ட், 2020

யார் குற்றம்?

தென்றல் காற்றடித்து வலிக்கிறதென்றால்

குழந்தையின் குற்றமா?

தென்றலின் குற்றமா?

இனியபாரதி. 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இனி இடமில்லை...

என் வழிப் பயணத்தில்
நேராக நான் சென்று கொண்டிருக்கும் போது...
என்னை வழியிலேயே நிறுத்துபவரோ,
என் மீது மோதும்படி வருபவரோ
என் இலக்கு அல்ல...

என் குறிக்கோள்
என் லட்சியம்
என் நினைப்பு
எல்லாமே
நேராக இருந்தால் 
நான் அடைய வேண்டிய இடத்தை
அவரே காட்டுவார்!!!

இனியபாரதி. 

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

எதிர்பார்ப்பு...

களைத்து ஓய்ந்தவள்

எதிர்பார்ப்பு

அவளின் ஓய்விற்காக அல்ல...

அவளின் அடுத்த முயற்சிக்காக!!!

இனியபாரதி.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பரவசம் பலவிதம்....

நான் ஆரம்பத்தில் இருந்து எழுதியவற்றை வாசித்துக் கொண்டிருந்தேன்... இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள 'பரவசம்' கவிதை ஏப்ரல் 2014 அன்று நான் எழுதியது... 

நான் எழுதியதில் இரசித்தது... 


உங்களுக்காக... 


பரவசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பார்த்தாலே பரவசம் படம் தான் உடனே ஞாபகத்திற்கு வரும். அந்தப்படத்தில் நாயகனும், நாயகியும் பார்வையாலேயே பேசிக்கொள்வார்கள்.  இதனால் தான் படத்தின் தலைப்பு, "பார்த்தாலே பரவசம்".

சிலருக்கு சிலரது குரலைக் கேட்டால் பரவசம். 

சிலருக்கு மழையில் நனைந்தால் பரவசம்.

சிலருக்கு ரயிலில் பயணம் செய்தால் பரவசம்.

சிலருக்கு சன்னல் ஓரம் பரவசம்.

சிலருக்கு காலைத் தூக்கம் பரவசம்.

சிலருக்கு மாலை நடைப்பயிற்சி பரவசம்.

சிலருக்கு வானவில் பரவசம்.

சிலருக்கு பாடும் போது பரவசம்.

சிலருக்கு ஆடும் போது பரவசம்.

சிலருக்கு சிரிக்கும் போது பரவசம்.

சிலருக்கு காதலி/காதலனைப் பார்க்கும் போது பரவசம்.

சிலருக்கு பிரிந்து சென்ற மகனை/மகளைப் பார்க்கும் போது பரவசம்.

சிலருக்கு இரவில் நிலவைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்குப் பணத்தைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு நகைகளைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்குப் பாடல் கேட்டால் பரவசம்.

சிலருக்கு பாடம் படித்து முடித்ததில் பரவசம்.

சிலருக்குத் தேர்வு முடிந்ததில் பரவசம்.

சிலருக்குத் தோழனை/தோழியை நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் பரவசம்.

சிலருக்குப் புத்தகம் வாங்குவதில் பரவசம்.

சிலருக்கு காதலைச் சொல்லி விட்டதில் பரவசம். 

சிலருக்கு நடிகர்/நடிகையைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு வேலை கிடைத்ததில் பரவசம்.

சிலருக்கு வெளிநாடு சென்றால் பரவசம்.

சிலருக்கு உணவைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு மழையைப் பார்த்தால் பரவசம்.

சிலருக்கு சுற்றுலா சென்றால் பரவசம்.

சிலருக்கு பொம்மை வாங்குவதில் பரவசம்.

பரவசம் பலவிதம்....

நானும் பரவசப்பட்டேன், 'தெருவில் விற்ற கோழிக்குஞ்சுகளில் இரண்டை வாங்கி என் கைகளில் ஏந்திக் கொண்டு நடந்தபோது...'
நீங்கள் எப்போது பரவசப்பட்டீர்கள்?
பகிரவும்...

இனியபாரதி.

ஆசை இல்லை...

பணம் சேர்க்க ஆசை இல்லை...

பொருள் சேர்க்க ஆசை இல்லை...

அழகுபடுத்திக் கொள்ள ஆசை இல்லை...

ஆடைகள் வாங்கிக் குவிக்க ஆசை இல்லை...

நெடும்பயணம் ஆசை இல்லை...

அழகிய மாளிகை ஆசை இல்லை...

வேற்று இன்பம் ஆசை இல்லை...

உன் "அன்பு மழையில் நனையும் ஆசை" மட்டும் இன்னும் தணியவில்லை...

இனியபாரதி. 

சனி, 8 ஆகஸ்ட், 2020

புதிரானவள்...

ஒருநாள் ஆசீர்வாதமாய் இருந்தவள்
மறுநாள் சாபமாய் மாறிப் போகிறாள்...

ஒருநாள் பேரழகியாய் தெரிந்தவள்
மறுநாள் அசிங்கமாய் தெரிகிறாள்

ஒருநாள் காதலியாய் தெரிந்தவள்
மறுநாள் யாரோ ஒருவர் போல் ஆகிறாள்

ஒருநாள் என்னவள் என்று சொல்லத் தூண்டியவள்
மறுநாள் எனக்கு நீ வேண்டவே வேண்டாம் என்றாகிறாள்

ஒருநாள் நீ இல்லாமல் நான் இல்லை என்று எண்ண வைத்தவள்
மறுநாள் நீ இல்லாமலே கடைசி வரை என்னால் வாழ முடியும் என்றாகிறாள்

"அவள்"

என்றும் ஒரு புதிரானவள்...

இனியபாரதி. 

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வேண்டாம் என்றால் விட்டுவிடு...

சில நாட்களிலோ

சில மாதங்களிலோ

ஒரு நட்பில் விரிசல் விழும் போது

அதைச் சரிசெய்ய பாடுபடத் தேவை இல்லை!!!!

ஒன்று நமக்கு வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால்
மீண்டும் அதன் பின்னால் சென்று வீணாக நேரத்தை வீணடிக்காதே!!

உன்னுடைய எதிர்காலம் உனக்கானது!
அதை நீ தான் உருவாக்க வேண்டும் என்று ஜெய் சொன்னார்...

அவர் சொன்னால் எல்லாம் நன்றாய்த் தான் தெரிகிறது!!

வாழ்க்கையில் பயன்படுத்துவது தான் கடினமாக உள்ளது!

இனியபாரதி.

புதன், 5 ஆகஸ்ட், 2020

எல்லாம் எனதே...

அவனுக்கான

நேரம்...

அன்பு...

அக்கறை...

பாசம்...

பகிர்வு...

பரஸ்பரம்...

பரிசுப் பொருட்கள்...

இரசிக்க வேண்டிய விசயங்கள்...

பயணங்கள்...

அறுசுவை உணவுகள்...

எல்லாம் எனதே....

இனியபாரதி. 


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கூண்டுக்குள் அடைபடா பறவை...

கூண்டுக்குள் இருக்கும் பறவையை விட
வெளியில் அலைந்து திரியும் பறவைக்கு
பொறுப்பு அதிகம்...

இனியபாரதி. 

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கருவிழி இரண்டும்....

கருவிழிகள் இரண்டும் என்றும் பொய் சொல்லியதில்லை...
உன் பயம் எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் முக்காடிட்டுக் கொண்டுள்ளாய் போல!!!

கண்கள் பேசும் வார்த்தைகள் சீக்கிரம் புரிய வைத்துவிடும்
நமக்குண்டான சுபாவத்தை!!!

இதற்காக எந்தக் கல்லூரிக்கும் சென்றுப் பயிலத் தேவையில்லை!!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

மயில் இறகு போல...

அவனுடனான உறவு மயில் இறகு போல...

மயிலுடன் இருந்தாலும் சரி...

கீழே விழுந்தாலும் சரி...

அழகு தான்!!!

இனியபாரதி. 

சனி, 1 ஆகஸ்ட், 2020

புதுக் கதை....

அன்பு நண்பர்களே....

வணக்கம்....

நான், நாளை முதல் ஒரு தொடர்கதை எழுத முடிவு செய்தேன்...

என்ன தலைப்பு எடுத்து எழுதலாம் என்று யோசித்த போது, பெரும்பாலும் காதல் கதைகள் தான் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால், அதையே என் கதையின் மூலமாகக் கொண்டு உள்ளேன்...

இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்!

பொன்னி மற்றும் வண்டு... 

மேலும் அறிய என் blog யைத் தவறாமல் படிக்கவும்...


இனியபாரதி. 

வெள்ளி, 31 ஜூலை, 2020

அதிகப் பற்று...

அவன் மீது பற்று கொள்வதற்கு முன்பே
உன் மீது அவ்வளவு பற்று கொண்டிருந்தேன்!!

எப்படி உன்னை விட்டுப் பிரிந்திருப்பேன்?

நாளை முதல் ஒரு புதுப்பொலிவுடன்...

அன்புத் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்...

இனியபாரதி.

செவ்வாய், 21 ஜூலை, 2020

குழப்பம் இல்லாமல்...

குழப்பம் குழப்பம் தரலான்

ஆனால்

குழப்பம் தருபவன்

ஒன்றும் தர மாட்டான்!!!!

நீயாக குழம்பிக் கொள்ளாதே...

அருகிருப்பவரையும் குழப்பி விடு...

இனியபாரதி. 


திங்கள், 20 ஜூலை, 2020

உறக்கத்திலும் உறைந்து இருப்பவள்...

இதயம் வெவ்வேறு...

சிந்தனை வெவ்வேறு...

ஆனால் எண்ணம் மட்டும் எப்படி ஒன்று போல் இருக்கும்?

 நாள் முழுவதும் என் அருகிருந்து எனக்குக் கற்றுக் கொடுக்கிறாய்!!

உறக்கத்தில் கூட நீ தான் உறைந்து இருக்கிறாய் என்று எண்ணும் போது,

என்னுள் ஆணிவேராய் மாறிப் போன
உன் அன்பை எண்ணி வியக்கிறேன்!!!

இனியபாரதி.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

ஆசை தீர...

ஆசை தீர அவளை ஆரத்தழுவ வேண்டும்

இன்று மட்டும் அல்ல...

ஆயுள் முடியும் வரை!!!

இனியபாரதி. 

சனி, 18 ஜூலை, 2020

ஒன்றும் இல்லை..

"ஒன்றும் இல்லை" என்பது,

எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்....


"ஒன்றும் இல்லை" என்று
மருத்துவமனைக்குச் சென்ற மூதாட்டியிடம் சொல்லும் போது மகிழ்ச்சி...

"ஒன்றும் இல்லை" என்று
பரிசோதித்து விட்டு கணவனிடம் சொல்லும்
மனைவியின் முகத்தில் வருத்தம்...

"ஒன்றும் இல்லை" என்று
என்று அம்மா சமையல் அறையின் உள்ளே இருந்து குரல் எழுப்பும் போது வேதனை...

ஒன்றும் இல்லை...

தாக்கத்தை ஏற்படுத்தும்!!!!

எனக்கு ஒன்றும் இல்லாத ஒன்று 
உனக்குப் பெரிதாகத் தெரியலாம்...

உனக்குப் பெரிதாய்த் தெரியும் ஒன்று
எனக்கு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்...

வாழ்க்கையில் பல விசயங்கள் புதிராகவே இருக்கும்...

அதில் இதுவும் ஒன்று...

வாழ்க வளமுடன்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 17 ஜூலை, 2020

அடிமை!

அடிமைப்படுத்த நினைப்பவன் ஒருநாளும் ஆள முடியாது...

அடிமையாக இருப்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது...

இனியபாரதி. 

வியாழன், 16 ஜூலை, 2020

ஒருவழிப்பாதை...

திக்குத் தெரியாத ஒரு வழிப் பாதையில்

தடதட சத்தம் கூட

தவிக்க வைக்கும் சத்தம் தான்!!

இனியபாரதி. 

புதன், 15 ஜூலை, 2020

வேப்பிலைச்சாறு...

எனக்குப் பிடிக்காத ஒன்று

நீ செய்யும் போது

அது மிகவும் பிடிக்கிறது...

இந்த வேப்பிலைச் சாற்றைப் போல்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 14 ஜூலை, 2020

வெண்மை நிறமா? மணமா?

வெண்மை...

என்னை அசத்திய நிறம்...

ஒரு அழகான அடர்ந்த மலைப்பகுதி

மழை பெய்து முடிந்த மாலை வேளை...

ஒரு வெள்ளைப்புறா 

வானுக்கும் மண்ணுக்கும் நடுவில்

உல்லாசமாய் அலைந்து திரிகிறது...

அதைத் தூரத்தில் இருந்து ரசிக்கிறது ஒரு வண்ண மயில்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 12 ஜூலை, 2020

எதுவும் முடியும்...

தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதென்று

நொந்து கொண்ட உள்ளம்

தவிக்கும் போது

அசரீரியின் குரல் இவ்வாறு.....

உன்னால் மறுபடியும் இணைய முடியும்!!!

இனியபாரதி. 

சனி, 11 ஜூலை, 2020

அருவி போல்...

அருவி போல் கொட்டும் அவன் அன்பு

அவளை நனைத்துச் செல்லும் போது

நனைவது அவள் உடல் மட்டும் அல்ல

அவள் மனமும் தான்...

அவனுக்கு கொட்ட ஆசை...

அவளுக்கு நனைய ஆசை...

விசித்திரமான உறவு இந்தக்காதல்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 10 ஜூலை, 2020

புன்னகை...

கர்வம் கொண்ட அவளின்

புன்னகை மட்டுமே

என்னைக் கர்வம் கொள்ள வைக்கிறது...

அவள் என்னவள் என்பதால்!!!

இனியபாரதி. 

வியாழன், 9 ஜூலை, 2020

அவளுக்குப் பிடித்த அவன்!!!

உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்ட அடுத்த நொடி 
யோசிக்காமல் வந்த பதில் "நீ" என்று...

அடுத்து...

"என்னைப் பிடிக்கும்" என்று சொல்லி விட்டு
அவள் கால் விரல் தரையில் இட்ட கோலம்
அவளைக் கட்டி அணைத்து
நீயும் நானும் வேறல்ல..
இதில் நீ, நான் என்று வேறு பிரிக்கிறாயா
என்று சொல்லத் தோன்றியது...

அடுத்து...

நாம் இருவரைத் தவிர
எனக்குப் பிடித்தவை 
"புத்தகங்கள்" என்றாள்!!!
அந்த நொடி அவளைப் புத்தகம் போலத் தூக்கிப் படிக்க வேண்டும் போல் இருந்தது
தொடக்கம் முதல் இறுதி வரை...

அடுத்து...

என் பக்கத்து ஊர் பெரியவர் என்றாள்...

நான் அந்த ஊரை விட்டே காலி செய்தேன்!!!

இனியபாரதி. 

புதன், 8 ஜூலை, 2020

இருந்தால் என்ன?

உன்னைப் பற்றிய நினைப்பே
இல்லாத போது
என்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாய்!!!

உன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் போது
என்னைப் பற்றித் துளி கூட நினைக்காதிருந்தாய்!!!

உன்னைப் பற்றி நினைத்தும் நினைக்காமல் இருப்பது போல் நடிக்கும் போது
என்னைப் பற்றி நீயும் நினைப்பது போல் நடித்து நினைக்காமல் இருந்தாய்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 7 ஜூலை, 2020

ஏணி மட்டும் போதுமா?

ஒரு ஏணிப்படியை மட்டும் பிடித்துக் கொண்டு மேல ஏற நினைத்தது
அவன் முட்டாள்தனம்...

எப்படி ஏணி மட்டும் முக்கியம் என்று நினைத்த அவனால்
நிலத்தின் உறுதியைப்
பார்க்க முடியாமல் போனது?

இனியபாரதி. 

திங்கள், 6 ஜூலை, 2020

கொடை வள்ளல்..

என்றும் என்னால் இயன்ற அளவு

நீரைத் தருகிறேன்.

அதைத் தங்கமென நினைத்து

வீட்டில் சேமித்து வைத்துக் கொள்!!!

வானம்

இனியபாரதி. 


ஞாயிறு, 5 ஜூலை, 2020

அவள் ஒரு நிழல்...

பசுந்தோகை விரித்து

அசைந்தாடிக் கொண்டிருந்த

அவளின் நிழலில்

இளைப்பாறிய அவனும் அவளும் சேர்ந்து பாடிய பாடல்...

"தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணம்மோ!!!"

இனியபாரதி. 




காணாமல் போன கருங்கயிறு...

யாரும் கண் வைக்காமல் இருக்க

பொத்திப் பொத்தி வைத்து...

எங்கு சென்றாலும்

உடன் எடுத்துச் சென்று...

வழிபோக்கனுடன் பணிக்கும் போது

தொலைத்து விட்டான்

அவன் "பொக்கிஷத்தை"!!!

இனியபாரதி. 

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்...

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்"

என்றொரு பழைய பாடல் இருக்கிறது...

அதை ஒத்த இன்றைய எனது தலைப்பு

"கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்..."

நாம் கேட்கும் அனைத்தும்
கிடைத்து விடும் பட்சத்தில்
நாம் ஆண்டவனை நினைக்க மறந்து விடுகிறோம்...

நமக்கு கஷ்டங்களைக் கொடுத்து
உனக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன் என்று உணரச் செய்கிறார்!!!

கஷ்டங்களையும் நண்பனாய் ஏற்றுக் கொள்கிறேன்... 
என் நண்பனின் பல குணங்கள் என்னில் வெளிப்படும்... 

இனியபாரதி. 

சனி, 4 ஜூலை, 2020

வலித்தாலும் ஏற்றுக் கொள்ளும்...

காவியம் படைக்கும் காதல் கதையைக் கொண்டவன்...

கண் சிமிட்டலில் அவளை அடக்கி வைத்தவன்...

காமம் இல்லாக் காதல் செய்தவன்...

கண்ணீர்த் துளிகளை முத்தக் கரைசல் ஆக்கியவன்...

கவலை இல்லாமல் சுற்றித் திரிந்தவன்...

எல்லா அழகின் உருவாய் இருந்தவன்...

வலி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும்!!!

இனியபாரதி.

வெள்ளி, 3 ஜூலை, 2020

அன்புள்ள!!! மதிப்பிற்குரிய???

யாரும் அன்பாக அழைக்கப்பட ஆசைப்படுவார்களா?

மதிப்பாக நடத்தப்பட ஆசைப்படுவார்களா?

என்னைப் பொறுத்தவரை என்னை அன்பாக நடத்தினால் போதும் என்பது என் எண்ணம்...

இன்று ஒரு நிகழ்வு...

என் கல்லூரி ஆசிரியருக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டும்... நானும் புலனம் மூலமாகத் தகவலைத் தெரிவிக்க முற்பட்டேன்...

அன்பான ஆசிரியர் அவர்களுக்கு... என்று டைப் செய்து அனுப்பியும் விட்டேன்... 

அனுப்பிய இரண்டொரு நிமிடங்களில் அவரிடம் இருந்து ஒரு குரல் பதிவு என்னை வந்தடைந்தது...

அதில் அவர் குறிப்பிட்டிருந்தது...

நீங்கள் ஆசிரியரை "அன்பான" என்று அழைத்தால், ஆசிரியர் மாணவரிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறாரா? என்று எல்லோரும் நினைப்பார்கள்... எப்போதும் மதிப்பிற்குரிய என்று தான் எழுத வேண்டும் என்று அனுப்பி இருந்தார்...

என் கேள்வி என்னவென்றால்!!

ஆசிரியர் மாணவருக்கு இடையே உள்ள உறவு 

மதிப்புள்ளதாக இருக்க வேண்டுமா?

அன்பானதாக இருக்க வேண்டுமா?

நான் புரிந்து கொண்ட விதம் தவறா??

அன்பு தவறென்றால் மாற்றிக் கொள்கிறேன்..

என் ஆசிரியைக்காய்!!!

மதிப்பிற்குரிய!!!

இனியபாரதி. 

உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள...

iniyajeni3@gmail.com

வியாழன், 2 ஜூலை, 2020

கறை நல்லது... குறை நல்லது...

கறை நல்லது விளம்பரம்

மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது

அன்னையர்கள் மத்தியில்!!!

குறை நல்லது என்பது

இந்தக் கறையைப் போலத் தான்!!!

குறை இருக்கும் இடத்தில் தான்

அந்தக் குறையைத் திருத்திக் கொள்ள 

பக்குவம் பிறக்கும்...

குறை நல்லது!!!

குறையை எடுத்துச் சொல்லும்

நல்லவர்கள் இருப்பதும் நல்லது!!!

இனியபாரதி. 

புதன், 1 ஜூலை, 2020

ஜுன் போனால் ஜூலை காற்றே...

ஜுன் மாதம் முடிந்து

ஒருவழியாக ஜூலைக்கு

அடியெடுத்து வைத்தாயிற்று!!!

ஒரு மாதம் கழிவதற்கு

இவ்வளவு நாட்களா என்றே 

எண்ணத் தோன்றி விட்டது!!!

ஜூலை பிறந்த இந்த நன்னாளிலே

நம்மிலும் தீமைகள் குறைந்து

நன்மைகள் உண்டாக 

இறைவனைப் பிரார்த்திப்போம்...

இனியபாரதி. 

செவ்வாய், 30 ஜூன், 2020

கடற்கன்னி ஆசை...

கடற்கன்னி என்ற வார்த்தையை

எனக்கு அறிமுகம் செய்தவள்...

அதிலும் கடற்கன்னியைக் காண்பிக்கிறேன் 

என்று ஆசை காட்டியவள்...

கடற்கன்னி என்றும் என் மனதில்

கனவுக்கன்னியாய்!!!

இனியபாரதி. 

திங்கள், 29 ஜூன், 2020

என்றும் இனிமை...

அவள் அருகில் இருக்கும்

ஒவ்வொரு நொடியும்

அவன் உணரும் ஒன்று

"இனிமை"

அவள் அருகில் இல்லாமல்

அவன் மனம் உணரும்

ஒவ்வொரு நொடியும்

"தனிமை"


இனியபாரதி. 


ஞாயிறு, 28 ஜூன், 2020

கானல் நீர்... காணாமல் போகும் நீர்...

கானல் நீர் என்பது

நம் கண்முன் தோன்றும்

பிரம்மை எனத் தெரிந்தும்

அதைக் கானல் 'நீர்' என்று அழைக்கிறோம்...

அன்பு கூட அப்படித்தான்!!

அன்பு என்ற பெயரை வைத்துக் கொண்டு

'அன்பு' காட்டாமல் இருந்து விடும்...

இனியபாரதி. 


சனி, 27 ஜூன், 2020

கடந்து போனாலும்...

சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை
அவன் நிலை அறிய!!!


சொல்லாமலும் புரியும்
அவன் மனம்!!!

இருந்தாலும் ஏற்க மறுக்கும்
அவள் உள்ளம்!!!

இவை எல்லாம் கடந்து போனாலும்
உறுதியாய் இருக்கும் அவன் நெஞ்சம்!!!

இனியபாரதி. 


வெள்ளி, 26 ஜூன், 2020

அழகு...

என் மனதும் ஏனோ

என்னிடம் இல்லை...

வேண்டியே விரும்பியே

மாட்டிக் கொண்டேனே!!!

அழகான பாடல் வரிகள்!!!

வியாழன், 25 ஜூன், 2020

களவும் கற்று...

ஒருவகையான களவு கொள்ள 

ஆசை கொண்ட அவனுக்கு

நிதானமாய்

கற்றுத் தருகிறாள்

அந்த வித்தையை!!!

களவும் கற்று மற!!! 

இனியபாரதி. 

புதன், 24 ஜூன், 2020

எல்லாம் இருக்கும்...

கடினம் என்று மறுக்காமல்

விடாமுயற்சியுடன்

மேற் கொள்ளும் ஒவ்வொன்றிலும்

நம்பிக்கை இருக்கும்....

இனியபாரதி. 

செவ்வாய், 23 ஜூன், 2020

தன்னைத் தந்து...

தன்னைத் தந்து

தாயகம் காக்கும்

நம் இராணுவ வீரர்கள்

என்றும் பாதுகாப்புடன் வாழ

அனைவரும் ஒன்றுகூடி

இணைந்து வேண்டுவோம் இறைவனிடம்!!!!

இனியபாரதி. 

திங்கள், 22 ஜூன், 2020

கற்றுக் கொள்..

தேவைப்படும் இடங்களில்

கற்பித்தலும்

தேவை இல்லாத இடங்களில்

கற்றலும் தேவை...


இனியபாரதி. 

ஞாயிறு, 21 ஜூன், 2020

அழகு...

அவன் கொடுக்கும் 

வலிகளைத் தாங்கிக் கொள்ளும்

சக்தி ஒரு அழகு!!!

அவன் கோபப்படும் போது

எரிச்சல் அடையாமல் 

பதில் சொல்வது ஒரு அழகு!!!

அவன் அன்பைப்

புரிந்து கொண்டாலும்

அப்பப்போ புரியாமல் இருப்பது போல்

நடிப்பது அழகு!!!

இனியபாரதி. 

சனி, 20 ஜூன், 2020

சந்திப்பு...

கொஞ்சம் தாமதம் கொண்டதால்

அவளைப் பார்க்க முடியாமல்

இருந்த தருணம்...

சண்டையிட்டுக் கொண்டதால்

அவளிடம் நேராகப்

பேச முடியாத தருணம்...

கொஞ்சல் கேட்டு

வெட்கமடைந்து முகத்தை

மூடிக் கொண்ட தருணம்...

எல்லாம் அவன் சந்திப்பில்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 19 ஜூன், 2020

கடமையைப் போற்று...

கடமையைக் கண் எனப் போற்றி

அதைக் கடைபிடித்து வந்தால்

உன் வாழ்வில்

நிச்சயம் முன்னேற்றம் வரும்!!!


இனியபாரதி. 

வியாழன், 18 ஜூன், 2020

சந்தேகம் எல்லாம்...

அவன் சந்தேகம்

நீண்டது என்பது

அவளுக்குத் தெரிந்திருந்தும்

பொறுமையாய் பதில் சொல்ல

அவளால் மட்டுமே முடியும்!!!

இனியபாரதி. 

புதன், 17 ஜூன், 2020

அவள் புலமை...

அவளின் புலமை அறிந்து

வியந்து பாராட்டாமல்

இருக்க முடியவில்லை...

அவள் என்றும் ஒரு ஞானி தான்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 16 ஜூன், 2020

சிந்தனையும் கருத்தும்...

என் மனம் ஏதாவது ஒன்றை எண்ணிக் கொண்டிருக்கும் போது

என் கை ஏதோ ஒரு வேலையைச் செய்கிறது...

என் கை செய்யும் வேலைக்கு என் கண்கள் ஒத்துழைப்புத் தருவதில்லை....

இப்படிக் கட்டுப்பாடற்று அதது
தன் இஷ்டத்திற்கு இருக்க
என் உடல் என்ன பொம்மையா???

இனியபாரதி. 

திங்கள், 15 ஜூன், 2020

கருணை மழை...

பெய்யும் என்று எதிர்பார்த்து

வறண்டு கிடக்கும் நிலம்

அண்ணாந்து பார்த்து

ஆவலாய் இருக்கும் நொடி

இந்தக் கருணை மழைக்கான வருகை!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 14 ஜூன், 2020

நீரும் நெருப்பும்....

சேர்ந்து இருக்கும்

அவளும் அவனும்

நீரும் நெருப்பும் போல் இருந்தால் 

வாழ்க்கை எப்படி இருக்கும்?


அன்பு இருக்கும் அவளிடம்
அடிமைத்தனம் இருக்கும் அவனிடம்

பாசம் இருக்கும் அவளிடம்
பாசாங்கு இருக்கும் அவனிடம்

இப்படிப் பல இருக்கும் இருவருக்கும்...

அவள் நீராய் இருக்கும் போது
அவன் பனிக்கட்டியாய் மாறி
அவளை இறுக்கிவிடுதலே சால்பு...

இனியபாரதி. 

சனி, 13 ஜூன், 2020

உணர்கிறேன்...

கரும்பு இனிக்கும் என்பதை
நான் சுவைக்கும் போது தான் உணர்கிறேன்...

அன்பு அழகு என்பதை
உன்னுடன் இருக்கும் போது தான்
உணர்கிறேன்....

இனியபாரதி. 

வெள்ளி, 12 ஜூன், 2020

நானும் என் அழகும்...

அவள் முகம் பார்த்துத் தான்
என் அழகை உணர்ந்து கொள்கிறேன்...

அவள் அன்பை உணர்ந்து தான்
என் அன்பின் ஆழம் அறிகிறேன்...

அவள் அக்கறையை நினைத்துத் தான்
எனக்கு அவள் மீதான பொறுப்பை உணர்கிறேன்...

நான் என்னை அறிய...

அழகும்

அறிவுமான

அவள் தேவை...

இனியபாரதி. 

வியாழன், 11 ஜூன், 2020

இருக்கும் இயக்கம்...

தினமும் தொடரும் 

அவளின் பயணம்

ஒரு அழகான பூஞ்சோலையின் வழி....

இனியபாரதி. 

புதன், 10 ஜூன், 2020

தென்றல் வந்தால்...

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணம்மோ!!!

அழகிய பாடல்....

தென்றல் தீண்டும் நேரம்
தேன் இனிமை போல்
அசைந்தாடிக் கொண்டிருக்கும் 
அழகிய மரம்!!!


இனியபாரதி. 

செவ்வாய், 9 ஜூன், 2020

குறைக்க இயலா அன்பு...

இது மட்டும் தான் என்று முடிவெடுத்த பிறகு
வேறு ஒன்றைப் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை...

அதுபோன்ற எண்ணம் கனவில் கூட நிகழா வண்ணம்
கவனம் கொள்கிறான் அவன்...

ஆனால்...

அவள் மனம் மட்டும் எப்படி கல் போல் இருக்கும் என்பதில்
ஆச்சர்யம் அவனுக்கு!!!


இனியபாரதி. 




திங்கள், 8 ஜூன், 2020

காணாமல் கண்ட...

படைப்பு முழுவதும் சுற்றிவிட்ட மகிழ்வு...

அவள் பெயர் சொல்லும் போது!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 7 ஜூன், 2020

காத்திருந்தால்... எதிர் பார்த்திருந்தால்...

எதையும் இழக்கத் துடிக்கும் மனம்

யாரையும் பொருட்படுத்தாது...

இழந்து விட்ட மனம்

எதையும் தேடி அலையாது...

இழக்க மாட்டேன் என்ற நம்பிக்கையில்

தினமும் காத்திருக்கும் மனம் மட்டுமே

எதிர் பார்த்து பார்த்து

தன் வாழ்வையே இழந்து விடும்...

இனியபாரதி. 

சனி, 6 ஜூன், 2020

இதுவும் கடந்து போகும்...

சில நேரங்களில்

தனிமையின் வாட்டுதலை விட

வேறு ஒன்றும் துக்கம் தருவதாய் இருக்காது....

மன நிம்மதி அற்றுப் போதல்...

குழப்ப மனநிலை...

தூக்கம் சரியாக வராமை...

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் பயணம் தொடர்கிறது!!!

இனியபாரதி. 

வெள்ளி, 5 ஜூன், 2020

கோபம் ஒரு வரமா?

கோபம் இருக்கும் இடத்தில்
குணம் இருக்கும் என்பார்கள்!!!

அப்போ...

கோபம் கொள்ளவில்லை என்றால்
குணம் இல்லை என்று தானே அர்த்தம்?

இதை எப்படி எடுத்துக் கொள்வது?

கோபப்படாமல் அமைதியாகப் பேசினால்
நல்லவன் என்கிறது உலகம்...

கோபத்தைக் காட்டினால் கோபக்காரன் என்கிறது உலகம்...

உண்மை என்னவென்றால்
கோபம் வந்தால் உடனே காட்டி விட்டு
அடுத்த வேலையை கவனிக்கத் தொடங்குவதால்
நமக்கு மன அழுத்தம் வராது...

கோபத்தைக் வைத்துக் கொண்டு 
நமக்குள் புளுங்குவதைவிட
அதை வெளிப்படுத்திவிடுவது சாலச்சிறந்தது...

இதனால் வரும் கோபக்காரன் பட்டம் பெருமையே!!!

இனியபாரதி. 

வியாழன், 4 ஜூன், 2020

காட்டிக் கொள்ளா அன்பு....

அவள் அருகில் இருப்பது மிகவும் பிடித்திருந்தும்
அவள் இருப்பது பிடிக்காதது போல் நடிக்கும் அவன் கோபம்!!!

அவள் யாரிடம் பேசினாலும் கோபப்படாதது போல் நடித்துவிட்டு
உள்ளுக்குள் அவர்கள் மீது எழும் எரிச்சல்!!!

அவள் பார்ப்பது, கேட்பது என்று எல்லாமுமே அவன் தான் என்று நினைக்க வைக்க வேண்டும்!!!

ஆனால் அது எப்படி என்று தான் அவனுக்குத் தெரியவில்லை!!!

இனியபாரதி. 

புதன், 3 ஜூன், 2020

பொறுமையின் சிறப்பு....



நான் நினைத்த எதுவும் உண்மை இல்லை என்று அறிந்தவுடன்
கதறி அழுது என் தவறை உணரத் தோன்றுகின்றது... 

நான் இவ்வளவு நாட்கள் முட்டாளாய் இருந்ததை எண்ணி!!!

நான் ஏன் அடிமையாய் இருந்தேன்?

நான் ஏன் அடிமையாய் இருக்கிறேன்?

நான் ஏன் அடிமையாய் இருக்க வேண்டும்?

எனக்குள் ஒரு உந்துசக்தியைக் கொடுத்த என் அன்பு!!!

நானும் என்னை மாற்றிக் கொண்டு

எதையும் பொறுமையாய் சாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 2 ஜூன், 2020

அன்பு மட்டுமே...

உலகில் பல போராட்டங்களைச் சந்திக்கும் இந்த உள்ளம்
கடைசியில் தேடுவது என்னவோ
அன்பு மொழிகளைத் தான்...

இனியபாரதி. 

திங்கள், 1 ஜூன், 2020

நலமா!!!

நீ நலமா என்று ஆயிரம் உறவுகள் விசாரிக்கும்...

நீ நலமாய் இருக்கிறாய் தானே என்று
உன் குடும்பம் விசாரிக்கும்...

உன் நலனைக் குறித்த விசாரணையை
உன்னால் மட்டுமே செய்ய முடியும்...

'உள்ளம்'

இனியபாரதி. 


ஞாயிறு, 31 மே, 2020

கடக்கும் நாட்கள்....

கொரோனா கொரோனா என்று
மார்ச்சில் ஆரம்பித்த நாம்
இரண்டு மாதங்களைக் கடந்து விட்டோம்...

ஆரம்பத்தில் மிகுந்த பயம்...
இருவேளைக் குளியல்...
சத்தான உணவு
என்று நாட்கள் சென்றன...

போகப் போக பழைய நடைமுறையே புழக்கத்தில் வந்து விட்டது...

இதில் மிகவும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை என்று தான் நான் சொல்வேன்...

விவசாயி கூடத் தன் காய்கறிகளை தெருவில் சென்று விற்று விடலாம்...

பள்ளிக்குச் செல்லாமல் ஆசிரியர் எப்படித் தன் மாணவர்களைச் சந்திப்பது?

Online வகுப்பு என்று ஆரம்பித்து ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியது தான் மிச்சம்.

இறைவா... 
நாங்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்...
நாங்கள் மீண்டும் பழைய நிலையை அடைய ஜுன் மாதமாவது எங்கள் மீது கருணை புரியும்...

இனியபாரதி. 

உணர முடியா...

உணர முடியா தூரத்தில்
மலரும் பனியும்

இனி இணைவது கடினம் தான்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 29 மே, 2020

உன் பொறுப்பு...

நீ மகிழ்ச்சியாகவோ

துக்கமாகவோ

சோர்வாகவோ

நம்பிக்கையுடனோ

இருப்பது உன் கையில் தான் உள்ளது....

உன் வேலைகளை ஒருபோதும் தள்ளிப் போடாதே...

நாளை முடிக்க வேண்டிய வேலை என்றால்
நேற்று முன்தினமே முடித்திருக்க வேண்டும்....

இப்படி வேலை செய்வது மிகவும் கடினம் தான்...

ஆனால்... ஒரு முறை முயற்சித்துப் பார்... 
உன் வாழ்வில் பல வெற்றிகள் குவியும்...

சோர்வோ கலக்கமோ வர வாய்ப்பில்லை....

இனியபாரதி. 

வியாழன், 28 மே, 2020

அழகிய வாழ்வு...

இறைவன் கொடுத்த
இந்த
அழகிய
இனிய
அன்பு நிறைந்த
வாழ்க்கையை
நாமும்
இரசித்து ருசித்து
மனமகிழ்ச்சி உடன் 
வாழ்வோம்!!!

இனியபாரதி. 

புதன், 27 மே, 2020

அதிசய அன்பு...

காலைக் கதிரவனின் ஒளி
நம்மை எழுப்பும் வரைத்
தூங்கவிடும் அன்னையின் அன்பு...


பிடித்ததை வாங்கிக் கொடுத்து
கஷ்டம் அறியா வண்ணம்
வளர்க்கும் தந்தையின் அன்பு...

என்னை எவ்வளவு வேண்டுமானாலும்
இரசித்துக் கொள் என்று
தன் அழகைக் காட்டும்
காலை மலரின் அன்பு...

என்னைப் பிடிக்கவில்லை என்றாலும்
உன்னைப் பற்றிக் கொண்டு
உன்னை நனைப்பேன் என்று
அடம் பிடிக்கும் மழையின் அன்பு...

பொழுது சாயும் நேரம்
அழையா விருந்தாளியாய் வந்து
வருடிவிட்டுச் செல்லும்
இளந்தென்றலின் அன்பு...

இரவு ஜாமத்தில்
ஜன்னல் வழியாய்
என் கண்களுக்குக் களிப்பூட்டி
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைக்கும்
விண்மீன் கூட்டத்தின் அன்பு...

எல்லாவற்றையும் விட
என்னிடம் இருந்து விடைபெறத் துடிக்கும்
அவளின் அன்பு...

இனியபாரதி. 

செவ்வாய், 26 மே, 2020

அன்பளிப்பு...

அவள் கொடுக்கும்
ஒரு குட்டி ரோஜா மலர் கூட
மிகப் பெரிய பரிசு தான் எனக்கு!!!

இனியபாரதி. 

திங்கள், 25 மே, 2020

மலர் செண்டு...

பலவகைப் பூக்களின் தொகுப்பு
நமக்குப் புத்துணர்ச்சி ஊட்டி
அனுதினமும் நம்மை மகிழ்விக்கின்றன!!!

எல்லாம் ஒரே வகைப் பூவாய்
எல்லாம் ஒரே நிறமாய் இருந்தால்
இரசிப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும்!!!


அதைப் போலத் தான்...
ஆண்கள் மட்டுமோ...
பெண்கள் மட்டுமோ...

இருந்தால் இவ்வுலகில் மகிழ்ச்சி இருக்காது...

ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் போது தான்
குடும்பம் என்ற மலர் செண்டு மணம் வீசும்...

So we conclude that there is no master. We are slaves to each other. 

இனியபாரதி. 

ஞாயிறு, 24 மே, 2020

வண்ணமான எண்ணம்...

வண்ணத்துப்பூச்சியின் நிறத்தை
ஒரு வண்ணத்திற்குள் அடக்கி விட முடியாது...

உன் எல்லையையும் ஒரு கோடு வரைத்து 
அடக்கி விட முடியாது...

நீ எல்லையற்றவன்...

உன் முடிவு உன்னால் மட்டுமே முடிவு செய்யப்படும்...

இனியபாரதி. 

சனி, 23 மே, 2020

ஓசை கேட்டு...

அவள் பேசுவது கூடத் தெரியாது
ஆனால்...
அவன் மட்டும் பதிலளிப்பான்
ஒரு மணி நேரமாய்!!!

அலைபேசிக் கொஞ்சல்கள்!

இனியபாரதி.


வெள்ளி, 22 மே, 2020

அவள் என்ற மாயை...

கொஞ்சம் பிடிக்கும் என்று ஒதுக்கி விட்டால்
நான் என்ன செய்ய???

நீயே உலகம் என்று நினைக்கும் அவனை நினைக்காமல்
தவிக்க விட்டுச் செல்கிறாயே?

உன் கவலையும் தவிப்பும்
அவனுக்குக் கிடையாதா?

உன்னைப் பிரிந்த ஏக்கம் 
அவனுக்கு இருக்காதா?

ஒன்று
முழுவதும் கொடு...
இல்லை 
விலகிச் செல்...

மாயை என்று எண்ணி 
உன்னை மறக்க நினைப்பான் அவன்!!!

இனியபாரதி.




வியாழன், 21 மே, 2020

கனவின் விளிம்பில்...

பலகோடி இளைஞர்கள்
வேலை இல்லாமல் தவிப்பது
எதிர்பாராமல் நடந்த விபரீதம் எனினும்...

நாமும் எதிர்பார்த்து காத்திருப்பதை விடுத்து...

எதிர் காலத்தை வெல்ல
நிகழ் காலத்தில் துணிவுடன் வீறுநடை போடுவோம்....

இனியபாரதி. 

புதன், 20 மே, 2020

குறும்புகள்...

எனக்குப் பிடிக்காது என்பதற்காகவே
அவள் செய்யும் சிறு சிறு குறும்புகள்

சில நாட்கள் கழித்து சிந்தித்தால்
சிரிப்பு தான் வரும்

அழகாய் கூர்ந்து நோக்கும் அவள் கண்கள்
அன்பாய் அள்ளிப் பருகும் அவள் உதடுகள்

சண்டையில் வாடிப் போவதோ
அவளின் குட்டி இதயம் தான்!!!


இனியபாரதி. 


செவ்வாய், 19 மே, 2020

நேர்மறை எண்ணங்கள்...

உன்னைச் சுற்றி எப்போதும்
நேர்மறை எண்ணங்கள் கொண்ட
உறவுகளையே வைத்துக் கொள்...


அவர்களின் எண்ணங்கள்
உன் எண்ணங்களுடன் சேரும் போது
இன்னும் வலுப்பெறும்...

உன் எண்ணங்கள் மட்டும் அல்ல
உன் வாழ்க்கையும்....


இனியபாரதி. 

திங்கள், 18 மே, 2020

வலி 2

பிறர் நமக்குக் கொடுக்கும் வலி....

நாம் தற்கொலை செய்து கொண்டால் கூட
இரண்டு நிமிட வலி...

நாம் கொலை செய்யப்பட்டால் கூட
இருபது நிமிட வலி...

நாம் விபத்தில் மரணித்தால் கூட
இரண்டு மணி நேர வலி...

மேற்சொன்ன வலிகளைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். 

ஆனால்
நாம் இவ்வுலகில் இருக்கும் வரை
மற்றவர்கள் கொடுக்கும் வலியை
வரையறை செய்ய முடியாது!!!

இனியபாரதி. 

சனி, 16 மே, 2020

வலி...

வலியைப் பற்றி எனது கருத்து...

(இன்றைய தலைப்பும் மகளினதே....)

முதலில் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் வலிகள் பற்றி ஒரு அலசல்...

1. பிறந்த இரண்டே நாட்களில்
அவள் முலைகளைக் கடித்து
தாய்க்குக் கொடுத்த வலி...

2. தந்தை கொஞ்சல் கேட்டு
பிஞ்சுக் காலால் 
அவரை உதைத்து 
அவருக்குக் கொடுத்த வலி...

3. சிறு வயதில்
உயிர் என்றும் உணராமல்
குட்டி எறும்புகளைக் கொன்று
அவற்றின் குடும்பத்திற்குக்
கொடுத்த வலி...

4. பள்ளிப் பருவத்தில்
நண்பர்களுடன் சண்டையிட்டு
பேசாமல் அவர்களுக்குக் கொடுத்த வலி...

5. கல்லூரிக் காலங்களில்
பெற்றோரிடம் பணம் கேட்டு
அவர்களைத் தொந்தரவு செய்து அழ வைத்த வலி...

6. திருமணத்தில் மணப்பெண் வீட்டில்
வரதட்சணை கேட்டு
அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தி
சித்திரவதை செய்த வலி...

7. குழந்தை பிறந்தவுடன்
அவள் அழகைத் தக்க வைக்க
தெரிந்த எல்லா வழிகளையும் சொல்லி
அவளைப் பின்பற்ற வைத்து
அவலம் செய்த வலி...

8. கடைசிக் காலத்தில்
துணை இல்லாமல் ஒன்றுமில்லை என்றாலும்
அவளின் இயலாமையை ஏற்றுக் கொள்ளாமல்
தவிக்க வைக்கும் வலி...

இதைப்போல் பல வலிகள்
நம் வாழ்க்கையில்
நம்மை அறியாமல்
மற்றவர்களுக்கு 
நாம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம்...

நாளை மற்றவர்களால் நாம் உணரும் வலிகளைப் பார்ப்போம்...

இனியபாரதி. 

வெள்ளி, 15 மே, 2020

சிந்தனை...

இறைவன் நமக்கு அருளிய 

மிகப் பெரிய வரம் என்றே சொல்லலாம்...

உன் சிந்தனை தெளிவாகும் போது

உன் வாழ்க்கை தெளிவாகும்...

உன் நேர்மறை எண்ணங்கள்

உன் சிந்தனைக்கு உரமாகும்...

நீ வலுப்பெறும் போது

உன் சிந்தனை வலுப்பெறும்...

உன் சிந்தனை வலுப்பெறும் போது

உன் வாழ்க்கை வளமாகும்...

(என்னை எழுதத் தூண்டிய மகளுக்கு நன்றி!!!)

இனியபாரதி. 

வியாழன், 14 மே, 2020

இனிது இனிது...

இனிது இனிது

ஒரு மலராய் வாழ்தல் இனிது...

ஒரு மழலையின் சிரிப்பாய் இருப்பது இனி பது...

இயற்கையில் ஒரு பனித்துளி இனிது...

அன்பில் நம்பிக்கை இனிது...

நட்பில் நாணயம் இனிது...

பிறருடன் நல்ல நட்பு இனிது...

வறியவருக்கு இரங்குதல் இனிது...

இனிது மட்டும் விரும்பும் இனியவருக்கு பரந்த மனம் இனிது...

இனியபாரதி. 

புதன், 13 மே, 2020

மெளனம்...

பல சந்தர்ப்பங்களில் 

நம் கோபம் தான்

நமக்கு நடக்கும் கெட்டவைகள் அனைத்திற்கும் 

காரணமாய் இருக்கும்...


தீடீரென்று வரும் அக்கோபம்

எப்படி வந்ததென்றே

சில நிமிடங்கள் கழித்து தான்

யோசிக்கத் தோன்றும்...

ஆனால்...

அந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு

நம்மை நிரூபிப்பது கடினம்...

கோபம்...

நம் பலவீனம்...

பலவீனத்தைப் பலமாய் மாற்றத் தேவையான நல்ல மருந்து

மெளனம் மட்டுமே!!!

இனியபாரதி. 




செவ்வாய், 12 மே, 2020

முக்கியக் குறிப்பு...

அன்பு வாசகர்களே...

வணக்கம்.

என் வலையில் பூக்கும் ஒவ்வொரு பூக்களும்
என் எண்ணங்களும் கற்பனைகளுமே...

என் வாழ்க்கையையோ அல்லது 
பிறரைப் புண்படுத்தும் நோக்கத்திலோ
எழுதப்படுபவை அல்ல...
என் எண்ணங்கள், அன்றாடம் தோன்றும் சிந்தனைகள் மட்டும் தான் என் எழுத்துக்குக் காரணம்... 

யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை...

இனியபாரதி. 




குயிலைப் போல்...

குயிலின் குரல் எப்படியோ
நம்மை வசீகரித்து விடுகிறது...

அது எந்தவொரு பள்ளிக்கும் சென்றிருக்காது
பாடக் கற்றுக் கொள்ள!!!

அதற்குக் கூட தெரியாது
என்னால் இவ்வளவு அழகாக குரல் எழுப்ப முடியுமா என்று...

என் மனமே...

உன் அருமை சில நேரம்
உனக்குக் கூடத் தெரியாமல் இருக்கலாம்...

கலங்காமல்...
உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை
உன் முழு மனதுடன் செய்...

இனியபாரதி. 

திங்கள், 11 மே, 2020

அன்புப் பெற்றோர்களே...

அன்புப் பெற்றோர்களே...

இவ்வுலகில் ஒப்பீடு செய்ய 
எவ்வளவோ விசயங்கள் உள்ளன...

ஒப்பீடு செய்யுங்கள்...

உங்கள் பிள்ளையின் கடந்த காலத்தை விட நிகழ் காலம் சிறந்ததாய் இருக்கிறதா என்று...

உங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கிறதா என்று...

உங்கள் பிள்ளைக்கு அன்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறதா என்று...

ஒப்பீடு செய்யாதீர்கள்...

உங்கள் பிள்ளையின் வருமானத்தை
உங்கள் உறவுக்காரரின் பிள்ளையின் வருமானத்துடன்...

உங்கள் வசதியை
மற்றவரின் வசதியுடன்...

உங்கள் பிள்ளையின் திறமைகளை
மற்ற பிள்ளைகளுடன்...

நல்ல பிள்ளை இருக்கும் போது உங்களுக்குத் தொந்தரவாகத்தான் தெரியும்...

இல்லாத போது உணர்வீர்கள் அதன் வலியை!!!

உங்களைப் போல் அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணருங்கள்!!!

இனியபாரதி. 







ஞாயிறு, 10 மே, 2020

அன்னையர் தினம்...

பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து

வேதனைகள் கடந்து

ஒரு உயிரை உலகிற்கு கொடுப்பவள் மட்டும் தாய் அல்ல...

உனக்கு ஒன்று என்றவுடன்
தவித்துப் போகும் தந்தை...

உன்னைக் கண்ணுக்குள் வைத்துக்
காத்துக் கொள்ளும் அண்ணன்...

உன்னால் முடியாத நேரங்களில் உடனிருந்து பார்த்துக் கொள்ளும் தங்கை...

நீ அவனது இரண்டாவது தாய் என்று எண்ணி வாழும் தம்பி...

எப்போது அழைத்தாலும் 
உன் கொஞ்சு குரல் கேட்டு மகிழும் அத்தை...

உனக்காக நான் இருக்கேன் என்று
அடிக்கடி உணர்த்தும் நண்பர்கள்...

அப்பப்போ வந்து போகும் உறவுகள்...

எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில்
நமக்குத் தாயாய் இருந்திருக்கலாம்...

இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கை அமைந்த ஒவ்வொருவரும் தன்னையே தாயாகப் பாவித்துக் கொள்வதில் தப்பில்லை...

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...

இனியபாரதி. 

நெடும் பயணம்...

தனிமை ஒரு சாபம் அல்ல... 

அது ஒரு வரம்...

நம்மில் இதயம் இரண்டில்லை..

ஏன் தெரியுமா?

அது தனிமையிலேயே சுகம் கண்டு கொள்ளும்...

நமக்கு மூளை கூட இரண்டில்லை...

ஏன்?

தனியாக இருந்து நம்மை ஆளும் சக்தி அதற்குண்டு...

ஒரே ஒரு ஆசை கொண்ட ஒரு தனி இதயம் துடிக்கின்றது...

ஒரு நெடும் பயணத்திற்காய்!!!

தனி ஒரு பயணம்...

அதுவே அந்த இதயத்தின் கடைசி பயணமாக!!

இனியபாரதி. 








சனி, 9 மே, 2020

செல்லம்மா ஏன் அழற?

பாரதி படம்....

எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்...

பாரதியின் இதழ் பட்ட செல்லம்மா...

அழுதுகொண்டே அறைக்குள் நுழைகிறாள்...

இங்கு

கனவு களைக்கப்பட்டது பாரதிக்கா?

செல்லம்மாவிற்கா?

இனியபாரதி. 

வெள்ளி, 8 மே, 2020

மாற்றத்திற்கான ஆறு நாட்கள்...

மாற்றம் வரும் அரசியலில்

மாற்றம் வரும் ஏழ்மையில்

மாற்றம் வரும் குணங்களில்

மாற்றம் வரும் வாழ்க்கையில்...

காத்திரு... மாற்றத்திற்காய்...

இனியபாரதி.  

மகிழ்ந்திரு...

உன் உள்ளம் பறிபோனதா

உன் பணம் கையை விட்டுச் சென்றதா

கவலை கண்களை நனைக்கிறதா

மனம் கடினமாய் மாறிவிட்டதா

காதல் கசப்பாய் தெரிகின்றதா

அறிவுரைகள் ஆறுதல் தருகின்றனவா

கலங்காதே!!!

மகிழ்ந்திரு...

இனியபாரதி. 

வியாழன், 7 மே, 2020

நாம் இருவருக்குமான உலகம்...

அதிகமாய் அன்பு வைத்தால்

அவதிப்படுவது அவன் மட்டும் தான்...

கடைசி வரைத் தன் நிலையை

உணர்த்த முடியா கையறு நிலை...

அன்பின் மிகுதியால்

அவளைத் தனக்குள் அடக்கிக் கொள்ள நினைக்கும் ஆணவம்...


மற்றவர்களின் அன்பை

உதாசீனப்படுத்தும் திமிர்...

யாரையும் கண்டு கொள்ளாமல்

எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்றிருப்பது...


கடைசியில்...

தனிக் கடலில் நீந்த மட்டும் தான் முடியும்....

இனியபாரதி. 


புதன், 6 மே, 2020

பணமோ பொருளோ இல்லா உலகு...

பணம் இல்லா உலகு....

பொருளைத் தேடா உலகு....

ஆசை கொள்ளா உலகு....

ஏமாற்ற நினைக்கா உலகு...

அன்பைப் புரிந்து கொள்ளும் உலகு...

சந்தேகம் கொள்ளா உலகு...

அரவணைக்கும் உலகு...

ஆறுதல் கூறும் உலகு...

புறணி பேசா உலகு...

புரிந்து கொள்ளும் உலகு...

அழகில் ஆசை இல்லா உலகு...

ஜாதி பார்க்கா உலகு...

மதம் தெரியா உலகு...

மண் வாசனை  இரசிக்கும் உலகு...

மலரில் மகிழ்ந்திடும் உலகு...

இயற்கையைப் போற்றிடும் உலகு...

உன் இயல்பை இரசித்திடும் உலகு...

மழலைச் சிரிப்பை  இரசித்திடும் உலகு...

மற்றவரை மதிக்கும் உலகு...

நேரம் செலவிடும் உலகு...

நொந்து கொள்ளா உலகு...

சாதிக்கத் தூண்டும் உலகு...

சாதி வெறி ஏற்றா உலகு...

என்னில் களித்திடும் உலகு...

எங்கென்று கூறுங்கள்...

அந்த உலகைக் காண வேண்டும்!!!


இனியபாரதி. 

செவ்வாய், 5 மே, 2020

மண் வாசனை... மன வாசனை...

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில்

செம்மண் சூழ்ந்த நிலப்பரப்பில்

திடீரெனப் பெய்யும் மழை

தரும் வாசம்

மனதைக் கவர்ந்து இழுக்கும்...

அந்த வாசம் தான் 

அவள் மனத்தின் வாசமும்!!!

இனியபாரதி. 

திங்கள், 4 மே, 2020

காந்த விழி அழகி....

அந்தக் காந்த விழி தான்

இன்னும் என்னைக் கட்டி 

வைத்துக் கொண்டு

இடமும் வலமும்

திரும்ப முடியாமல்

என்னைப் படுத்துகிறது!!!

இந்தப்பாடு பிடிக்கவில்லை என்றில்லை...

என்னை நானே 

மறந்து விடுவேனோ

என்ற பயம் மட்டும் தான்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 3 மே, 2020

நிறைவளிக்கும் அன்பு...

தனக்காய் காத்திருக்கும் அன்பை

புரிந்து கொள்ளும் அன்பு அபூர்வம்

புரிந்து கொண்ட அன்பை

ஏற்றுக் கொள்ளும் எண்ணம் அபூர்வம்

ஏற்றுக் கொண்ட அன்பை

துண்டிக்காமல் இருப்பது அபூர்வம்

துண்டிக்காத அன்பை

இறுதி வரை அன்பு செய்தல் அபூர்வம்...


இனியபாரதி. 



சனி, 2 மே, 2020

பாடல் எழுத ஆசை...

அழகான பாடல் வரிகள்

இயற்ற ஆசை!!!

அந்த ஆசைக்கு

உயிர் கொடுக்க வரும்

அந்தக் காட்சிகளை

மனதில் உள் வாங்கிக் கொண்டு

ஆழமாய் சிந்திக்க ஆசை!!!

அந்தச் சிந்தையின்

பயனாய் எழும்

என் வரிகளைக் காண ஆசை!!!

இனியபாரதி. 


கானல் நீராகும் கனவுகள்....

கனவு மட்டுமே கண்டு கொண்டு

வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்

அப்படி இருக்க வேண்டும் 

என்று நினைப்பது

ஒரு அழகான கானல் நீர் 

போன்று தோன்றும்...

அந்தக் கானல் நீரை

உயிர் தரும் நீராக மாற்றுவது

உன் உழைப்பில் தான் உள்ளது!!!

நன்றி அன்பு!!!

இனியபாரதி. 

வெள்ளி, 1 மே, 2020

தொழிலாளர்களுக்கு...

தொழிலாளர்கள்

உழைப்பாளிகள்

மற்றவரின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள்

எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்...

எப்படியும் இருக்கலாம் என்ற முதலாளித்துவ நாட்டில்

ஒவ்வொரு தொழிலாளியின் நிலையும் கேள்விக்குறி தான்...

இத்தினத்தைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு,
நமக்காக வேலை செய்யும் தொழிலாளிகளைக் கொண்டாடுவோம்...

நாடு முன்னேறும்!!!

எல்லோரின் வாழ்வும் செழிக்கும்!!!

இனியபாரதி. 

வியாழன், 30 ஏப்ரல், 2020

நாம்!!!

இப்படியும் ஒரு நாள் செல்லும்

என்று என்னையும் உணர வைத்த

என் இனியவளே!!!

நாம் அருகிருந்து 

செய்யும் ஒவ்வொரு நன்மையும்

நம்மை மேன்மேலும் 

வளம் பெறச் செய்யும்!!!

இனியபாரதி. 

புதன், 29 ஏப்ரல், 2020

அன்பு...

அன்பு என்ற வார்த்தையும்...

அன்பு என்ற வாழ்க்கையும்...

கடினம் தான்...


மூன்றெழுத்து என்றாலும் இதன் வலு அதிகம்....


கோபத்தைக் குறைக்க...

சண்டை போடாமல் இருக்க...

சந்தேகத்தைத் தவிர்க்க...

அன்பு செய்து வாழ...

கற்றுக் கொடுத்த அன்பு...

இனியபாரதி. 

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

நலம் வாழ...

இந்த நாட்களில் மிகவும் வேதனைப்பட வைக்கும் விசயம்...

குடும்பத்திற்காய் 
தெருத் தெருவாய் சுற்றி
தேநீர் விற்கும் நிலை
ஒரு அப்பாவிற்கு!!!

காரணம்...

அன்றாடக் கூலி வேலை...
இப்போது வேலையும் இல்லை...
பணமும் இல்லை...

குடும்பத்தைக் காப்பாற்ற பெற்றோர் எடுக்கும் சில முடிவுகள்!!!

நாம் நன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை இப்போதாவது உணருங்கள் பிள்ளைகளே!!!


இனியபாரதி.  

திங்கள், 27 ஏப்ரல், 2020

தாமரை நிறம்...

அவளின் நிறம் என்னவென்று
என்னால் இன்றுதான்
வரையறை செய்ய முடிகிறது...

அவள் தாமரை மலரின் இதழ் நிறத்தை ஒத்திருப்பாள்..

முழு மலரான அவளைத் தாங்கும் பாதங்கள்
பச்சை பசேலென எங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கும்...

இனியபாரதி. 

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

கனத்த இதயம்...

இதயத்தின் அளவு நம் ஒரு கைப்பிடியாம்...

இந்த ஒரு கைப்பிடி அளவுள்ள

இதயத்தில்

எத்தனை எத்தனை எண்ணங்கள்???

மனப் போராட்டங்கள்???

கசப்புகள்???

சண்டைகள்???

முரண்பாடுகள்???

இதை எல்லாம் நினைக்காமல் இருக்க

இதயம் இல்லாமல் இருந்தால் தான் முடியும் போல!!!

அல்லது

குட்டி இதயத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விடலாம்...

இனி பிரச்சனையே வராது!!!


இனியபாரதி. 

சனி, 25 ஏப்ரல், 2020

மகிழ்ந்து களிகூரு...

இன்று எனக்காக கொடுக்கப்பட்ட வசனம்... 

யோவேல் 2:21

"ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்."

ஆம்...

அவர் என்றும் நன்மையான காரியங்களை மட்டுமே தன்னை நம்பி இருக்கும் பிள்ளைகளுக்குச் செய்வார்.... 


இன்று எனக்கு....

நாளை உனக்கு....

கஷ்டப்பட்டாலும் கைவிடாமல் காக்கிறார்!!!

இனியபாரதி. 

தலை ஆகும் நேரம்...

நீ வாலாகாமல் தலையாக

மாறப்போகும் நேரம் 

வெகு தொலைவில் இல்லை...

உன் விடாமுயற்சி

உன் வெற்றிக்கு வித்திடும்!!

அத்தோடு நின்று விடாதே!

உன் எல்லை வானத்தைப் போன்றது!

கற்றுக் கொண்டே இரு...

கற்றுக் கொடுத்துக் கொண்டே இரு...

வாழ்த்துகள் பாரதி...

இனியபாரதி. 

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

தாழ்ச்சி, தேடல், மனம் மாறுதல்...

தாழ்ச்சி

மற்றவர்களை விட நான் தான் உயர்ந்தவன், எனக்குத் தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதை மட்டும் கேளுங்கள், என்னிடம் தான் எல்லாம் உள்ளன என்ற தற்ப்பெருமையை அகற்றுதல்....



தேடல்

நான் போலியானவர்களுக்கும், போலிக்கும் இடம் கொடுக்காமல், மெய்யான ஒன்றிற்குள் மட்டும் என் மனத்தைச் செலுத்துதல், அதன் மீது மட்டும் நாட்டம் கொள்ளுதல்...


மனம் மாறுதல்

என் இயலாமையால் நான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி, அவற்றை விட்டுவிட என் மனதுள் ஒரு தீர்மானம் எடுத்து, அதன்படி வாழ்தல்...

கற்றுத் தந்த ஐயனுக்கு நன்றி!!!


இனியபாரதி. 

கனிவு மனம்...

அவள் மனம் மிகவும் கனிவுடையது...

பூ போல் மென்மையானவள்...

தினமும் குலுங்கிக் கொண்டிருக்கும் அவள் கிளைகள்..

அவள் வேரின் மணம் விலை மதிப்பில்லா வாசனைத் திரவியம்...

அவளின் ஒவ்வொரு உறுப்பும் ஒருவிதம்...

கற்றுக்கொள்ள அவளிடம் பல...

அவளே என்றும் எனக்கானவள்...

இனியபாரதி. 

வியாழன், 23 ஏப்ரல், 2020

இளைப்பாறுதல்‌ தரும் அருமருந்து...

தவிப்புகள் பல இருக்கலாம்

நீ மகிழ்ந்திருக்க ஏதாவது ஒரு வழி இருக்கும்

உன்னைச் சுற்றித் தேடும் மகிழ்ச்சியை 

உன்னில் தேடு

உன்னை விட வேதனையுறும் ஒருவரைப் பார்க்கும் போது

உன் வேதனை ஒன்றும் இல்லை என்று தோன்றும்

உன் மகிழ்ச்சியை உன்னிடம் மட்டும் தேடிப் பெற்றுக் கொள்!!!

இனியபாரதி. 

புதன், 22 ஏப்ரல், 2020

சமுத்திரக் கனியாகு...

எங்கிருந்தோ பிறக்கும் ஊற்றுகள்

நதி கடந்து 

மலை கடந்து

நிலம் கடந்து

தான் சந்திக்கும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திச் செல்கின்றன...

அவை பிறப்பு ஒரு சரித்திரம் அல்ல...

அவற்றின் முடிவோ 
அந்தச் சமுத்திரத்தையே பெருமை கொள்ளச் செய்கின்றன!!!

அப்படியே உன் வாழ்வும் அமையட்டும்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் புறக்கணிப்பு

இன்று எப்போதும் போல் நாள் சென்றாலும்... நான் கற்றுக் கொண்ட மூன்று விசயங்கள்...

மன்னிப்பு

ஒப்புரவு

புறக்கணிப்பு

1. நமக்குத் துரோகம் செய்பவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வது.

2. மன்னித்த நம் உறவுகளுடன் ஒப்புரவு ஆவது.

3. நம்மைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசும் போது அவற்றைப் புறக்கணிப்பது.

நன்றி ஐயா!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கடல் கடந்து...

கடல் கடந்து வாணிபம் செய்து
பொருள் ஈட்டினான்
அன்றைய தமிழன்...

கடல் கடந்து காதல் செய்து
பொருள் ஈட்டுகிறான்
இன்றைய தமிழன்...

இனியபாரதி. 

சனி, 18 ஏப்ரல், 2020

கருப்பு...

எனக்கும் உனக்கும் பிடித்த ஒரே நிறம்...

நம் அன்பின் அடையாளம்...


இனியபாரதி. 

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கரையும் நெருப்பு...

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு

கொஞ்ச நேரத்தில்

சுடரொளியை இழந்து விடுகிறது...


அப்படித்தான்...

இப்போது பிரகாசமாய் இருக்கும்

உன் காதலும்

இருக்கும்!!!

அதனால் இப்போதே உசாராகிக் கொள்!!!

இனியபாரதி. 




வியாழன், 16 ஏப்ரல், 2020

அடிக்கடித் திட்டு வாங்கும் அன்பு...

சில நேரங்களில நமக்குப் பிடிக்காத உறவு

பல நேரங்களில் மிகவும் பிடித்த உறவு

அடிக்கடி சண்டைகள் வரும்

நாம் தான் அவரைத் திட்டுவோம்

அவர் வாயில் இருந்து வருவதெல்லாம்

"என் மகன்... என் மகன்..."

பல நேரங்களில் அவ்வன்பை உணராத நான்

கயப்படுத்தினேன்...

மருந்தாக ஒருநாளும் இருந்ததில்லை...

ஆனால்!

எனக்கு ஒரு தலை வலி என்றால்

உடனே மருந்தகம் தேடி ஓடுவது

அவரது கால்கள் மட்டுமே!!!

Love you daddy!!!


இனியபாரதி.