வேதனைகள் கடந்து
ஒரு உயிரை உலகிற்கு கொடுப்பவள் மட்டும் தாய் அல்ல...
உனக்கு ஒன்று என்றவுடன்
தவித்துப் போகும் தந்தை...
உன்னைக் கண்ணுக்குள் வைத்துக்
காத்துக் கொள்ளும் அண்ணன்...
உன்னால் முடியாத நேரங்களில் உடனிருந்து பார்த்துக் கொள்ளும் தங்கை...
நீ அவனது இரண்டாவது தாய் என்று எண்ணி வாழும் தம்பி...
எப்போது அழைத்தாலும்
உன் கொஞ்சு குரல் கேட்டு மகிழும் அத்தை...
உனக்காக நான் இருக்கேன் என்று
அடிக்கடி உணர்த்தும் நண்பர்கள்...
அப்பப்போ வந்து போகும் உறவுகள்...
எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில்
நமக்குத் தாயாய் இருந்திருக்கலாம்...
இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கை அமைந்த ஒவ்வொருவரும் தன்னையே தாயாகப் பாவித்துக் கொள்வதில் தப்பில்லை...
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...
இனியபாரதி.
2 கருத்துகள்:
அருமையான பதிவு
நன்றி...
கருத்துரையிடுக