செவ்வாய், 27 அக்டோபர், 2020

கடின உள்ளம்....

 அவன் இல்லையே என்று ஏங்கித் தவித்த அவளுக்கு ஆறுதலாய் இருந்தவைகள் வெகுசில.... 


அவளுக்கு எல்லாத் திறமைகள் இருப்பினும் இப்படித் திரிகிறாளே என்று பிறர் இட்ட சாபம்... 


கேவலமாய் நோக்கிய சில பார்வைகள்... 


உச்சி வெயிலிலும் இருளடைந்து தெரிந்த அருகாமைகள்.... 


இவை எப்படி ஆறுதல் தந்தன???


இவை எல்லாம் அவள் அடிமனதில் ஆழமாய் பதிந்திருந்த அவன் அன்பை

ஆணிவேரோடு பிடுங்கி எறிய

அவள் உள்ளத்தை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தன.... 


இனியபாரதி.

கருத்துகள் இல்லை: