நம்மை எழுப்பும் வரைத்
தூங்கவிடும் அன்னையின் அன்பு...
பிடித்ததை வாங்கிக் கொடுத்து
கஷ்டம் அறியா வண்ணம்
வளர்க்கும் தந்தையின் அன்பு...
என்னை எவ்வளவு வேண்டுமானாலும்
இரசித்துக் கொள் என்று
தன் அழகைக் காட்டும்
காலை மலரின் அன்பு...
என்னைப் பிடிக்கவில்லை என்றாலும்
உன்னைப் பற்றிக் கொண்டு
உன்னை நனைப்பேன் என்று
அடம் பிடிக்கும் மழையின் அன்பு...
பொழுது சாயும் நேரம்
அழையா விருந்தாளியாய் வந்து
வருடிவிட்டுச் செல்லும்
இளந்தென்றலின் அன்பு...
இரவு ஜாமத்தில்
ஜன்னல் வழியாய்
என் கண்களுக்குக் களிப்பூட்டி
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவைக்கும்
விண்மீன் கூட்டத்தின் அன்பு...
எல்லாவற்றையும் விட
என்னிடம் இருந்து விடைபெறத் துடிக்கும்
அவளின் அன்பு...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக