பின்!!!
கனவில் கண்ட
அவளின் அழகும்
அவள் முகமும்
என்னைத் தூங்கவிடவில்லை...
படுக்கையில் புரண்டதைத் தவிர
வேறு ஒன்றும் செய்யவில்லை நான்...
அந்த இரவு
என் அலைபேசியின் அழைப்போசை...
யாரென்று எடுத்தால்...
என் தேவதையின் அழைப்பு...
ஆச்சரியம்!!!
நான் தூங்கவில்லை என்று அவளுக்கெப்படித் தெரியும்???
அழைப்பை ஏற்ற முதல் நொடி அவளிடம் இருந்து வந்தது...
"எனக்குத் தூக்கமே வரவில்லை...
அதனால் தான் உங்களை அழைத்தேன் என்று..."
இதுவும் ஒரு வகையான அன்பு போல...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக