(இன்றைய தலைப்பும் மகளினதே....)
முதலில் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் வலிகள் பற்றி ஒரு அலசல்...
1. பிறந்த இரண்டே நாட்களில்
அவள் முலைகளைக் கடித்து
தாய்க்குக் கொடுத்த வலி...
2. தந்தை கொஞ்சல் கேட்டு
பிஞ்சுக் காலால்
அவரை உதைத்து
அவருக்குக் கொடுத்த வலி...
3. சிறு வயதில்
உயிர் என்றும் உணராமல்
குட்டி எறும்புகளைக் கொன்று
அவற்றின் குடும்பத்திற்குக்
கொடுத்த வலி...
4. பள்ளிப் பருவத்தில்
நண்பர்களுடன் சண்டையிட்டு
பேசாமல் அவர்களுக்குக் கொடுத்த வலி...
5. கல்லூரிக் காலங்களில்
பெற்றோரிடம் பணம் கேட்டு
அவர்களைத் தொந்தரவு செய்து அழ வைத்த வலி...
6. திருமணத்தில் மணப்பெண் வீட்டில்
வரதட்சணை கேட்டு
அப்பெண்ணைக் கொடுமைப்படுத்தி
சித்திரவதை செய்த வலி...
7. குழந்தை பிறந்தவுடன்
அவள் அழகைத் தக்க வைக்க
தெரிந்த எல்லா வழிகளையும் சொல்லி
அவளைப் பின்பற்ற வைத்து
அவலம் செய்த வலி...
8. கடைசிக் காலத்தில்
துணை இல்லாமல் ஒன்றுமில்லை என்றாலும்
அவளின் இயலாமையை ஏற்றுக் கொள்ளாமல்
தவிக்க வைக்கும் வலி...
இதைப்போல் பல வலிகள்
நம் வாழ்க்கையில்
நம்மை அறியாமல்
மற்றவர்களுக்கு
நாம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம்...
நாளை மற்றவர்களால் நாம் உணரும் வலிகளைப் பார்ப்போம்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக