வியாழன், 7 மே, 2020

நாம் இருவருக்குமான உலகம்...

அதிகமாய் அன்பு வைத்தால்

அவதிப்படுவது அவன் மட்டும் தான்...

கடைசி வரைத் தன் நிலையை

உணர்த்த முடியா கையறு நிலை...

அன்பின் மிகுதியால்

அவளைத் தனக்குள் அடக்கிக் கொள்ள நினைக்கும் ஆணவம்...


மற்றவர்களின் அன்பை

உதாசீனப்படுத்தும் திமிர்...

யாரையும் கண்டு கொள்ளாமல்

எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்றிருப்பது...


கடைசியில்...

தனிக் கடலில் நீந்த மட்டும் தான் முடியும்....

இனியபாரதி. 


கருத்துகள் இல்லை: