செவ்வாய், 12 மே, 2020

குயிலைப் போல்...

குயிலின் குரல் எப்படியோ
நம்மை வசீகரித்து விடுகிறது...

அது எந்தவொரு பள்ளிக்கும் சென்றிருக்காது
பாடக் கற்றுக் கொள்ள!!!

அதற்குக் கூட தெரியாது
என்னால் இவ்வளவு அழகாக குரல் எழுப்ப முடியுமா என்று...

என் மனமே...

உன் அருமை சில நேரம்
உனக்குக் கூடத் தெரியாமல் இருக்கலாம்...

கலங்காமல்...
உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை
உன் முழு மனதுடன் செய்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: