யோசிக்காமல் வந்த பதில் "நீ" என்று...
அடுத்து...
"என்னைப் பிடிக்கும்" என்று சொல்லி விட்டு
அவள் கால் விரல் தரையில் இட்ட கோலம்
அவளைக் கட்டி அணைத்து
நீயும் நானும் வேறல்ல..
இதில் நீ, நான் என்று வேறு பிரிக்கிறாயா
என்று சொல்லத் தோன்றியது...
அடுத்து...
நாம் இருவரைத் தவிர
எனக்குப் பிடித்தவை
"புத்தகங்கள்" என்றாள்!!!
அந்த நொடி அவளைப் புத்தகம் போலத் தூக்கிப் படிக்க வேண்டும் போல் இருந்தது
தொடக்கம் முதல் இறுதி வரை...
அடுத்து...
என் பக்கத்து ஊர் பெரியவர் என்றாள்...
நான் அந்த ஊரை விட்டே காலி செய்தேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக