என் அன்பு மெளனமாய் இருக்கும்...
அவள் அன்பு சந்தேகப்பட்டால்
என் அன்பு சமாதானப்படுத்தும்...
அவள் அன்பு பேசாமல் இருந்தால்
என் அன்பு அவளைப் பற்றியே சிந்திக்கும்...
அவள் அன்பு கர்வம் கொண்டால்
என் அன்பு காத்திருக்கும்...
அவள் அன்பு காயப்படுத்தினால்
என் அன்பு கண்ணீர் சிந்தும்...
அவள் அன்பு உண்மை கொடுத்தால்
என் அன்பு உயிரைக் கொடுக்கும்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக