சனி, 8 ஆகஸ்ட், 2020

புதிரானவள்...

ஒருநாள் ஆசீர்வாதமாய் இருந்தவள்
மறுநாள் சாபமாய் மாறிப் போகிறாள்...

ஒருநாள் பேரழகியாய் தெரிந்தவள்
மறுநாள் அசிங்கமாய் தெரிகிறாள்

ஒருநாள் காதலியாய் தெரிந்தவள்
மறுநாள் யாரோ ஒருவர் போல் ஆகிறாள்

ஒருநாள் என்னவள் என்று சொல்லத் தூண்டியவள்
மறுநாள் எனக்கு நீ வேண்டவே வேண்டாம் என்றாகிறாள்

ஒருநாள் நீ இல்லாமல் நான் இல்லை என்று எண்ண வைத்தவள்
மறுநாள் நீ இல்லாமலே கடைசி வரை என்னால் வாழ முடியும் என்றாகிறாள்

"அவள்"

என்றும் ஒரு புதிரானவள்...

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: