வெள்ளி, 5 ஜூன், 2020

கோபம் ஒரு வரமா?

கோபம் இருக்கும் இடத்தில்
குணம் இருக்கும் என்பார்கள்!!!

அப்போ...

கோபம் கொள்ளவில்லை என்றால்
குணம் இல்லை என்று தானே அர்த்தம்?

இதை எப்படி எடுத்துக் கொள்வது?

கோபப்படாமல் அமைதியாகப் பேசினால்
நல்லவன் என்கிறது உலகம்...

கோபத்தைக் காட்டினால் கோபக்காரன் என்கிறது உலகம்...

உண்மை என்னவென்றால்
கோபம் வந்தால் உடனே காட்டி விட்டு
அடுத்த வேலையை கவனிக்கத் தொடங்குவதால்
நமக்கு மன அழுத்தம் வராது...

கோபத்தைக் வைத்துக் கொண்டு 
நமக்குள் புளுங்குவதைவிட
அதை வெளிப்படுத்திவிடுவது சாலச்சிறந்தது...

இதனால் வரும் கோபக்காரன் பட்டம் பெருமையே!!!

இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: