புதன், 6 மே, 2020

பணமோ பொருளோ இல்லா உலகு...

பணம் இல்லா உலகு....

பொருளைத் தேடா உலகு....

ஆசை கொள்ளா உலகு....

ஏமாற்ற நினைக்கா உலகு...

அன்பைப் புரிந்து கொள்ளும் உலகு...

சந்தேகம் கொள்ளா உலகு...

அரவணைக்கும் உலகு...

ஆறுதல் கூறும் உலகு...

புறணி பேசா உலகு...

புரிந்து கொள்ளும் உலகு...

அழகில் ஆசை இல்லா உலகு...

ஜாதி பார்க்கா உலகு...

மதம் தெரியா உலகு...

மண் வாசனை  இரசிக்கும் உலகு...

மலரில் மகிழ்ந்திடும் உலகு...

இயற்கையைப் போற்றிடும் உலகு...

உன் இயல்பை இரசித்திடும் உலகு...

மழலைச் சிரிப்பை  இரசித்திடும் உலகு...

மற்றவரை மதிக்கும் உலகு...

நேரம் செலவிடும் உலகு...

நொந்து கொள்ளா உலகு...

சாதிக்கத் தூண்டும் உலகு...

சாதி வெறி ஏற்றா உலகு...

என்னில் களித்திடும் உலகு...

எங்கென்று கூறுங்கள்...

அந்த உலகைக் காண வேண்டும்!!!


இனியபாரதி. 

கருத்துகள் இல்லை: