திங்கள், 31 டிசம்பர், 2018

எதையோ தேடி...

எதையோ தேடித் தான் இந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கின்றது...

அந்தத் தேடல் முடிவது நம் இறப்பில் தான்...

அப்படி இடையில் கிடைக்கும் செல்வங்கள்

நம்முடன் இருப்பது போல் இருந்தாலும்...

நமக்கு மகிழ்ச்சி அளிப்பது இல்லை!!!

ஏன் இந்த வாழ்க்கை என்று யோசிக்க ஆரம்பிக்கும் நேரம்...

நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும் ...

இப்படியே துன்பங்களை அனுபவிப்பது தான் தேடலோ? வாழ்க்கையோ??

இனியபாரதி.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

புதுவருடத் தீர்மானங்கள் ...

இந்த வருடம் முழுவதும் என்னுடன் இருந்து, என்னை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி!!!

இந்த வருடத்தில் நான் எடுத்த இரண்டு தீர்மானங்கள்...

1) ஒருநாள் கூடத் தவறாமல்  வலைப்பதிவு இடுவது...

2) நான்கு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்வது...

இவை இரண்டும் என் வாழ்வில் நிகழ, எனக்கு அருள் புரிந்த இறைவனுக்குப் புகழ்!!!

2019 - ஆம் ஆண்டும் என் வலைப்பூவை அலங்கரிப்பதைத் தொடர வேண்டும்....

இந்த வருடம் புதிதாக ஒரு  முயற்சி....

தினமும் பதினைந்து நிமிடங்கள் ஆழ்நிலைத் தியானம் செய்ய வேண்டும்...

கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம்... பார்க்கலாம்....

கடந்த இரண்டு வருடங்களாக என் வலைப்பூவை அலங்கரிக்க எனக்கு உதவியாக இருந்த என் நண்பர்கள், வாசகர்கள், உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்...

இனியபாரதி.

சனி, 29 டிசம்பர், 2018

அணியும் பேசும்...

அவளின் கொலுசு சத்தம் கேட்கும் போதெல்லாம்

என் தாயின் ஞாபகம் வருகின்றது...

என்று தந்தை தன் பிஞ்சின் கொலுசு சத்தம் கேட்டு சொல்லும் போது...

பெண்ணானவளும்

அவளின் ஒவ்வொரு அணியும்....

அவளைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கின்றன...

இனிய பாரதி.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

பேசிப் போன வார்த்தை எல்லாம்...

அவளிடம் இருந்து
நான் திருடி வந்தது

பொன்னையோ

பொருளையோ அல்ல...

அவள் பேசிப் போன வார்த்தை எல்லாம் கோர்த்து
பரிசாய்க் கிடைத்த
நான் இயற்றிய அந்தக் காவியத்தை!!!

இனியபாரதி.

வியாழன், 27 டிசம்பர், 2018

இன்னிசையாக...

அவளின் நினைவுகள் என் மனதில் நீங்காமல் இருக்கக் காரணம்...

அவள் எனக்காக விட்டுச் சென்ற இன்னிசை மட்டும் தான்...

அது தான் என்னைத் தினமும் தாலாட்டுகிறது... அவள் சார்பாக!!!

இனியபாரதி.

புதன், 26 டிசம்பர், 2018

காயம் ஆற...

சிலர் கொடுத்த காயங்கள் ஆற சில நாட்கள் ஆகலாம்...

அந்த சில நாட்களில் புது உறவுகள் கிடைக்கலாம்...

அந்தக் காயம் ஆறி, இந்த உறவின் பிரிவின் காயம் ஆறாமல் இருக்கும்...

அந்த நாட்களில் இன்னொரு புது உறவு வரும்...

இப்படி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வாழ்க்கையும் விதியும்...

புரியவில்லை தானே??? அது தான் எனக்கு வேண்டும்...

நாளை பார்க்கலாம்!!!

இனியபாரதி.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிறப்பின் மகிழ்ச்சி...

மழலையாய் மண்ணில் வந்த நாள் நாம் எல்லோரும் சிறப்பாய்க் கொண்டாடும் ஒரு நாள்...

சில நேரங்களில் அந்நாள் கூட கசப்பான அனுபவங்களைத் தரும்...

நாம் எந்த நோக்கத்திற்காய் இம்மண்ணில் வந்தோம் என்பது சில நேரங்களில் புரியாத புதிராகவே இருக்கிறது....

யாருக்கும் பயன்படாமல்...

எந்த வேலையும் செய்யாமல்...

ஏன் இருக்கிறேன் என்ற எண்ணம் கூட எழலாம்...

அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இப்போதே அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்!!!

நம் பிறப்பு நமக்கு மட்டும் அல்ல...

நம்மைச் சுற்றியுள்ள யாவருக்கும் ஆசீர்வாதமாய் அமையட்டும்...

இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களுடன்...

இனியபாரதி.

திங்கள், 24 டிசம்பர், 2018

கடமையை உணர்ந்து...

அன்பு செய்வதும்...

ஆதரவாய் இருப்பதும்...

இன்பத்தைப் பகிர்வதும்...

ஈகை புரிதலும்...

உறவுகளுடன் ஒன்றித்திருப்பதும்...

ஊரார்க்கு உதவுதலும்...

எளிமையைக் கடைபிடித்தலும்...

ஏற்ற சொல் பேசுதலும்...

ஐம்புலன்களை அடக்குதலும்...

ஒன்றுபட்டு வாழ்தலும்...

ஓசை இன்றி நடத்தலும்...

ஒளவை‌ வழி வாழ்தலும்...

நம் கடமை ஆகும்!!!

இனிய பாரதி.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

தேடி வந்த உறவு...

அநேக நேரங்களில் நம்மை மதித்து அன்பு செய்யும் உள்ளங்களை உதாசீனப்படுத்தி விடுவதுண்டு...

சில நேரங்களில் அவை எதிர்பாராமல் நடப்பதாக இருக்கலாம்...

மனதில் மகிழ்ச்சி இல்லாமல் ஒரு கனத்துடன் எப்போதும் இருப்பது போல் உணர்வோம்...

அப்படி நம்மைத் தேடி வந்து அன்பு செய்யும் உறவுகளை விடாமல் இறுகப் பற்றிக் கொள்வது நம் பொறுப்பு!!!

இனியபாரதி.

சனி, 22 டிசம்பர், 2018

இரசித்திருப்பேன்...

உன் அழகை ரசித்துக் கொண்டே இருந்திருப்பேன்...
உன் வீட்டு முகம் பார்க்கும் கண்ணாடியாய்...

உன் கூந்தலை அலங்கரிந்திருப்பேன்...
உன் நந்தவன மலராய்...

உன் நாவிற்கு சுவை அளித்திருப்பேன்..
உன் வீட்டுச் சர்க்கரையாய்...

இனியபாரதி.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

மேலோட்டமாக...

தனித்திருப்பதும்

தனிமையில் இருப்பதும்

தனித்து விடப்பட்டு இருப்பதும்

மேலோட்டமாகப் பார்க்க ஒன்றும் புரியாத விசயங்கள்....

உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!!!

இனியபாரதி.

வியாழன், 20 டிசம்பர், 2018

இதழ் தரும் இதம்...

அவள் இதழ் தரும் இதம் மட்டும்
எனக்கு எப்போதும் வேண்டும்...

அவளின் இதழ் மட்டுமே என் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது....

அவள் இதழ் மட்டுமே என் உள்ளத்தின் சோர்வுகளை வார்த்தைகளால் நீக்குகிறது...

அவள் இதழ் மட்டுமே என் மனத்திற்கு புத்துயிர் ஊட்டுகிறது...

அவள் இதழ் மட்டுமே எனக்கு உயிர் கொடுக்கின்றது...

இனியபாரதி.

புதன், 19 டிசம்பர், 2018

அவளை நம்பி...

அவளை மட்டுமே நம்பி நகர்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கை

அவளில்லாமல் என்ன ஆகுமோ என்ற பயம் மட்டும் அடிக்கடி வந்து போகின்றது!!!!

இனியபாரதி.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

தெரிந்து கொள்ளப்பட்ட..

அவளின் வார்த்தைகளும்
வாக்குகளும்
தெரிந்து கொள்ளப்பட்டவை தான்...
ஆனால்
அதை உபயோகிக்க வேண்டிய
நேரமும் இடமும்
அவளுக்குத் தெரியவில்லை!!!

இனியபாரதி.

திங்கள், 17 டிசம்பர், 2018

தேவதைக்கும் தேவை வரும்...

அவள் தேவை அறிந்து முன்னமே செய்து விடுவது
என் மனதில் ஒரு ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது!!!

அவள் கேட்கக் கூடியவை
சிறிய பொருட்கள் தான்...

அதை அவள் பெறும் போது
கிடைக்கும் ஆனந்தம்
அளவிட முடியாதது...

என் அழகு குட்டி தேவதையின்
ஒவ்வொரு தேவையையும்
தேவைப்படும் போது
பூர்த்தி செய்வதே இந்தத் தாயின் கடமை!!!

இனியபாரதி.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஆயிரம் யோசனை...

ஆயிரம் யோசித்தும்
விடை காண முடியவில்லை...

கேள்வியே குழப்புவதால்!!!

காலம் தான் விடை சொல்லும் அவளின் எல்லா கேள்விகளுக்கும்!

இனியபாரதி.

சனி, 15 டிசம்பர், 2018

இரசித்த நேரம்...

அந்தப் பிஞ்சு விரலைத் தடவிப்பார்த்த நேரம்...

நடுக்காட்டில் தனிமையில் பனியை உணர்ந்த நேரம்...

என் நெடும்பயணத்தில் இன்னிசை கேட்ட நேரம்...

வேலைப் பளுவில் தோழி தோள் கொடுத்த நேரம்...

அந்திமாலையில் அமைதி உலா வந்த நேரம்...

இனியபாரதி.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

கொடுக்க கொடுக்க...

நான் அன்பைப் பொழிய பொழிய
கிடைத்தது நல்ல நட்புகள்...

நான் கொடுக்க கொடுக்க
கிடைத்தது என் தேவைகள்...

நான் ஓட ஓட
துரத்தியது என் ஆசைகள்...

நான் மாற மாற
மாறியது என் உறவுகள்...

இனியபாரதி.

வியாழன், 13 டிசம்பர், 2018

ஏதேனும் உண்டோ?

அவள் கூறுவதைக் கேட்காமல்
நான் சென்ற பாதை என்று ஏதேனும் உண்டோ???

அவள் முகத்தைப் பார்க்காமல்
நான் எழுந்த நேரம் என்று ஏதேனும் உண்டோ???

அப்படி ஏதாவது உண்டென்றால்
அது என் மரணிப்பு தான்!!!

இனியபாரதி.

புதன், 12 டிசம்பர், 2018

குறைகூறும்...

குறைகளைக் கூறி விடுவதும் சுலபம்...
குறைகளைக் குறைகள் என்று உணர்வது கடினம்...

மற்றவரை குறை சொல்வது சுலபம்...
அந்தக் குறை நமக்கு இருந்தால்
அதைத் திருத்திக் கொள்வது கடினம்...

சுலபமும் கடினமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை!!!

இனியபாரதி.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

வழி தவறிச் செல்லா...

தீதொன்றும் யானறியேன் பரமனே...
நான் செய்த தவறெல்லாம்
வழிதவறிச் செல்லாமல் இருந்தது தான்...

அதற்காக நான் அனுபவிக்கும் தண்டனை
உயிரின் இழப்பை விடக் கொடியது!!!

இனியபாரதி.

திங்கள், 10 டிசம்பர், 2018

மன்னிப்புக் கோரி...

கேட்கப்படும் மன்னிப்பின் மதிப்பு
ஆட்களைப் பொறுத்தது அல்ல...

தவற்றை உணர்ந்து திருந்திய
மனதைப் பொறுத்தது...

இனியபாரதி.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

அப்படி இப்படி ...

கேட்டுத் தெரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன...

ஆனால் அவள் தெரிந்து கொள்ள நினைப்பது
யாருக்கும் தெரியக் கூடாது என்று நான் நினைக்கும் விசயங்களை!!!

சொல்ல நினைக்கவில்லை...
சொல்லாமல் இருக்கவும் வாய்ப்பில்லை...

அப்படி இப்படி பொய் கூறினாலும்
சரியாகக் கண்டுபிடித்து விடுகிறாள்...

அவள் மிகவும் புத்திசாலி...

இனியபாரதி.

சனி, 8 டிசம்பர், 2018

இராகங்கள் பதினாறு...

பதினாறு இராகங்களும் இணைந்து
ஒலிக்கும் ஓசை தான்
அவளின் குரல் என்று இன்று தான் உணர்ந்தேன்....

இனியபாரதி.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

சண்டைக்கோழி...

அடம்பிடிக்காமல் அவள் செய்யும்
ஒவ்வொரு செயலும்
அவளைச் சண்டை போடத் தூண்டும் போல ....

சரியான சண்டைக்கோழி!!!

இனியபாரதி.

வியாழன், 6 டிசம்பர், 2018

நண்பர்கள்....

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால்
நண்பர்கள் நம்மை அதிகம் அன்பு செய்பவர்கள்...

மற்ற எல்லாரையும் விட...
ஆனால் அதை வெளிப்படுத்துவதில் சில நேரம் தாமதம் ஏற்படலாம்...

இனியபாரதி.

புதன், 5 டிசம்பர், 2018

நூலிடை...

என் ஆடையின் நூலிடை கூட உணரும் உன் வாசத்தை...

நீ மனம் கமலும் மல்லிகை என்பதால்!!!

இனியபாரதி.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அன்பு உள்ளம்...

கரைந்து கொண்டிருப்பது நான் தான்...
உனக்கு ஒளி கொடுப்பதால்
என்னை நான் வருத்திக் கொள்வதில் வருத்தமில்லை....

மெழுகுவர்த்தி...

வாடி விடுவது நான் தான்...
உனக்கு மணம் தருவதால் நான் வாடுவதில் வருத்தமில்லை...

மலர்...

அழிந்து கொண்டிருப்பது நான் தான்...
உனக்கு நிழல் தருவதில் வருத்தமில்லை...

மரம்...

மனிதனைத் தவிர
மற்ற அனைத்தும்
மற்றவர் மேல் அக்கறையுடன் தான் வாழ்கின்றன...

இனியபாரதி.

திங்கள், 3 டிசம்பர், 2018

வாடி விட...

சீக்கிரம் வாடி விடத் துடிப்பது
நான் அல்ல...

என் அழகை ரசிக்கும் இறைவனுக்கு
நான் தேவைப்பட்டதால்
என்னை ஒரு நாளில் அவனுடன் எடுத்துக் கொண்டான்....

ரோஜா

இனியபாரதி.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

தெரியாமல்...

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவள் விட்டுச் சென்ற நேரம் மட்டும்
என் விழிகளில் அடிக்கடித் தோன்றி மறைகிறது...

ஆனால்...

என்ன காரணம் என்று மட்டும் இன்று வரைத் தெரியாமல் தவிக்கிறேன்...

அவள் இழப்பை ஏற்க முடியாமல்....

இனியபாரதி.

சனி, 1 டிசம்பர், 2018

காண முடியா...

அவளின் அன்பை என்னால் காண முடியவில்லை...

ஆனால்...
ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்...

என்னிடம் துடிப்பதும் அவள் இதயம் என்பதால்...

இருந்து அன்பைக் கொடுத்தாள்...
இறந்து இதயத்தை அன்பாய்க் கொடுத்தாள்...

அவள் 'என் தாய்'

இனியபாரதி.

வெள்ளி, 30 நவம்பர், 2018

நீ இருப்பதனால்...

ஒன்றாகச் சேர்ந்து சென்ற தூரங்கள் குறைவு...

ஒன்றாகச் சேர்ந்து உண்ட நேரங்கள் குறைவு...

எல்லாம் குறைவாக இருந்தாலும்
நீ இருப்பதனால்
எல்லாம் நிறைவாக உணர்கிறேன்...

இனியபாரதி.

வியாழன், 29 நவம்பர், 2018

கட்டித் தங்கம்...

ஒரு கிராம் தங்கம் நீ என்றால்
கட்டித் தங்கம் நான்...

ஒரு கிலோ தக்காளி நீ என்றால்
ஒன்பது கிலோ ஆப்பிள் நான்...

ஒரு லிட்டர் மாதுளை ஜூஸ் நீ என்றால்
பத்து லிட்டர் நாட்டுச் சரக்கு நான்...

விளம்பரத்திற்காக மட்டுமே...

வேறு எந்த எண்ணமும் இல்லை ...

இனியபாரதி.

புதன், 28 நவம்பர், 2018

மடை வெள்ளம்...

அவளுக்காக நான் கொட்டும் அன்பு
மடையில் திறந்து விடப்பட்ட
நீர் போல் பாய்கிறது...

இனியபாரதி.

செவ்வாய், 27 நவம்பர், 2018

பார்க்க வா...

உன் அழகில் மயங்கி
தடுமாறி விழுந்து
எழமுடியாமல் தவிக்கும்
என் உள்ளத்தைப்
பார்க்க வா...
என் அழகியே!

- மார்கழி மலர்

இனியபாரதி.

திங்கள், 26 நவம்பர், 2018

எதை நோக்கி...

அவள் எதை நோக்கிப் பயணம் செய்தாலும்
என் நிழல் என்றும் அவளைத்
தொடர்ந்து கொண்டு இருக்கும்...

தொந்தரவாக அல்ல... துணையாக!!!

இனியபாரதி.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

இரும்புக் கரம்...

அவளின் இரும்புக் கரம்
என்னைக் கை பிடித்து
வழிநடத்தாமல் இருந்திருந்தால்
நான் என்றோ
ஒன்றும் இல்லாமல் ஆகி இருப்பேன்...

இனியபாரதி.

சனி, 24 நவம்பர், 2018

சாலையோரம் பூக்கும்...

சாலையோரங்களில் பூக்கும்
காதலுக்குக்  கிடைக்கும் மரியாதை

மனதில் பூக்கும்
காதலுக்குக் கிடைப்பதில்லை...

இனியபாரதி.

வெள்ளி, 23 நவம்பர், 2018

உள்ளதைக் கொடுப்பதா? உள்ளத்தை கொடுப்பதா?

அவள் கேட்டது  என் உள்ளத்தை...
நான் கொடுக்க நினைத்தது
என்னிடம் உள்ளதை...

இப்போது உணர்கிறேன்
அவள் பிரிவை விட
அவள் கேட்டதைக் கொடுத்திருந்தால்
என்னுடன் சில நாட்கள்
இருந்து சென்றிருப்பாளோ என்று!!!

இனியபாரதி.

வியாழன், 22 நவம்பர், 2018

கேட்டதைக் கொடுக்காத...

நேரத்தைக் கேட்கும் போது
நினைவுகளைக் கொடுப்பதும்....

அன்பைக் கேட்கும் போது
அனுபவங்களைக் கொடுப்பதும்...

அறிவைக் கேட்கும் போது
அறிவுரைகளைக் கொடுப்பதும்...

அவளுக்கு மட்டுமே பொருந்தும்!!

இனிய பாரதி.

புதன், 21 நவம்பர், 2018

இனியும் நீ தான் அழகி..

அடிக்கடி உன்னைப் பார்த்து
இரசித்த கணங்கள் உண்டு...

அடிக்கடி உன்னைப் பார்க்காமல்
சென்ற நேரங்களும் உண்டு...

அடிக்கடி உன்னைப் பற்றி
யோசித்த காலங்களும் உண்டு...

அடிக்கடி உன்னிடம் வந்து
பேசிய தருணங்கள் உண்டு...

அடிக்கடி இப்படி அப்படி
உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன்
உன் அழகில்....

இனியபாரதி.

செவ்வாய், 20 நவம்பர், 2018

காட்டு வழியே...

பாலையைக் கடந்து
அவன் சென்ற பயணங்கள்

நந்தவனம் போல் இருக்கும் என்று அவன் நினைத்தது தவறு தான்...

கடைசியில்
அடர்ந்த காட்டின் வழியே
அவன் பயணம் தொடர வேண்டும் என்பது
இறைவன் சித்தம் போல்...

இனியபாரதி.

திங்கள், 19 நவம்பர், 2018

கணக்குப் பார்க்கத் தெரியாத...

கணக்குப் பார்க்கத் தெரியாத
அவளின் பிஞ்சு நெஞ்சம்
என்றும்  என் மனதை விட்டு நீங்கவில்லை...

இனியபாரதி.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

நேர மேலாண்மை...

காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்....

உங்கள் சோர்வு...
களைப்பு...
வருத்தம்...
பயம்...
ஏக்கம்...
கவலை...
காத்திருப்பு...

எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும்!!!

இனியபாரதி.

சனி, 17 நவம்பர், 2018

ஏங்கும் எனது விழி...

கருவறையில் ஒரு வெளிச்சத்தை நோக்கிக் காத்திருந்தேன்...

மருத்துவமனையில் ஒரு அரவணைப்பைத் தேடிக் காத்திருந்தேன்...

வீட்டில் அன்னையின் அன்பை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்...

சிறுவயதில் தந்தையின் பாசத்தை
பார்க்கக் காத்திருந்தேன்...

பள்ளியில் நண்பர்களின்
நேசத்திற்க்காய்க் காத்திருந்தேன்...

கல்லூரியில் கனா காலங்கள்
கிடைக்கக் காத்திருந்தேன்....

இளமையில் நல்ல வேலையை
எதிர்நோக்கிக் காத்திருந்தேன்...

திருமணத்தில் அழகிய மனைவி
அமைய ஆசையாய்க் காத்திருந்தேன்...

தந்தை ஆகும் தருணத்தில்
தவித்துக் காத்திருந்தேன்...

முதுமையில் என் அழகிய வாழ்க்கையை எண்ணி
உன் சரணடி சேரக் காத்திருக்கிறேன்...

இனியபாரதி.

வெள்ளி, 16 நவம்பர், 2018

தேடல் குறைய...

என் தேடல் குறைய குறைய
உன் மீது எனக்கிருந்த ஆசையும்
குறையத் தொடங்குகிறது...

அதனால் தான் என்னவோ
நீ வர மறுக்கிறாய்!!!!

"தூக்கம்"

இனியபாரதி.

தேடிக் கிடைப்பதில்லை....

தேடிக் கிடைப்பதில்லை என்று
தெரிந்த ஒரு பொருளைத்
தேடிப் பார்ப்பதென்று
மெய் தேடல் தொடங்கியதே...

அழகான வரிகள்....

வியாழன், 15 நவம்பர், 2018

காகிதக் காதல்...

தண்ணீரில் மிதக்கும் காகிதக் கப்பல் போல்
அவன் காதலும் மிதந்து கொண்டிருக்கிறது....

நீரினின்று எடுத்தாலும் பயனில்லை...
நீருக்குள் விட்டாலும் மூழ்கிவிடும்....

தவிப்பது அவன் காதல் மட்டும் அல்ல...
மனமும் தான்...

கப்பல் சேதமாகாமல் பார்த்துக் கொள்வது
அவள் கையில் தான் உள்ளது!!!

இனியபாரதி.

புதன், 14 நவம்பர், 2018

குழந்தையாய்....

எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற குழந்தைகளும் உண்டு...
எதையும் அனுபவிக்காத குழந்தைகளும் உண்டு...

பெற்றோர் உள்ள குழந்தைகளும் உண்டு...
பெற்றோர் இல்லாத குழந்தைகளும் உண்டு....

பள்ளி செல்லும் குழந்தைகளும் உண்டு...
பள்ளி செல்ல முடியாத குழந்தைகளும் உண்டு...

பத்திரமாக இருக்கும் குழந்தைகளும் உண்டு...
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் குழந்தைகளும் உண்டு....

இறைவா....

உன் படைப்பில் ஏன் இப்படி ஒரு அவலம்???

சமத்துவத்தைக் கொண்டுவர முடியாத
இந்தப் படைப்பில்
குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

இனியபாரதி.

செவ்வாய், 13 நவம்பர், 2018

பருவங்கள் மாறிவிட...

எப்பருவம் மாறினாலும்
உன் மீதுள்ள
என் காதற் பருவம் மட்டும்
என்றும் மாறாது!!!

இனியபாரதி.

திங்கள், 12 நவம்பர், 2018

தங்கத் தேர்...

உன் செம்பாதத் தடங்கள்
பாதையை அழகு செய்துவிடும்
என்ற பயத்தில்
நான் செய்தது தான்
இந்தத் 'தங்கத் தேர்'

இனிய பாரதி.

ஞாயிறு, 11 நவம்பர், 2018

கனவின் காட்சி...

அப்படி அவள் கண்ட கனவில்
நான் வரவில்லை என்றாலும்...

என் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பது அவள் முகம் மட்டுமே...

இனியபாரதி.

சனி, 10 நவம்பர், 2018

சிவந்த நிலவு...

உன் சிவந்த மேனியை
கட்டி அணைத்து
முத்தமிட ஆசை...

நீ எப்போதும்
நான் தொட முடியா
தூரத்தில் நின்று கொண்டு

என்னைப் பிடி... பார்க்கலாம்!!!

என்று என்னுடன் விளையாடுகிறாய்!

இனியபாரதி.

வெள்ளி, 9 நவம்பர், 2018

ஏணிப்படியாய்...

ஏணிப்படியாய் நான் மாறி
உன்னை உயர்த்தாவிட்டாலும்
துரும்பாய் இருந்து
உன் கால்களை அரித்துக்கொண்டிருக்க மாட்டேன்...

இனியபாரதி.

வியாழன், 8 நவம்பர், 2018

உழைக்காமல் கிடைத்த...

நான்
என் அறிவையோ...
என் உடல் பலத்தையோ
செலவிட்டு ஈட்டாத
எந்த ஒரு பொருளோ பணமோ
என்னிடம் அதிக நாட்கள் நிலைப்பதற்கான வாய்ப்பில்லை.

இனியபாரதி.

புதன், 7 நவம்பர், 2018

திரும்பிப் பார்க்க...

அவளின் முரட்டுத்தனமும்
பிடிவாதமும்
சில நேரங்களில்
எரிச்சலைத் தூண்டினால் கூட
பல நேரங்களில்
அவளை இரசிக்கத் தான் தூண்டுகின்றன....

இனிய பாரதி.

செவ்வாய், 6 நவம்பர், 2018

கேட்பது எல்லாம்...

நான் கேட்பது எல்லாம்
கிடைத்துவிட்டால்
உன்னை மறந்து விடுவேன்
என்பதால் தான் என்னவோ
எனக்கு எதையும் கொடுக்க முடியாமல்
நீயும் தவிக்கிறாய்!!!

இனியபாரதி.

திங்கள், 5 நவம்பர், 2018

தீப ஒளி...

இன்பங்கள்
இனிமைகள்
இஷ்டங்கள்
இனிப்புகள்
எல்லாம் நிறைந்த
அன்புத் தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

இனியபாரதி.

ஞாயிறு, 4 நவம்பர், 2018

பாதை காட்ட...

என்றும் அவள் செல்லும் வழி தான் என்னுடையது என்று நினைத்து

நானாகத் தனி வழியை உருவாக்கிக் கொள்ளவில்லை...

கடைசியில் என் பாதையை நானே தெரிவு செய்ய
தனியே விட்டுச் சென்றுவிட்டாள்....

இனியபாரதி.

சனி, 3 நவம்பர், 2018

என்றென்றும்....

காற்றில் கலந்துள்ள
சிலவற்றைப் பிரிக்க முடியாதது போல் தான்

நம் நட்பும் என்றென்றும் பிரிக்க முடியாதது....

இனியபாரதி.

வெள்ளி, 2 நவம்பர், 2018

தித்திக்குதே...

இனிய இரவுகளில்
அவளின் சிரிப்பொலி மட்டுமே
என்னைத் தூங்கச் செய்கின்றன....

இனியபாரதி.

வியாழன், 1 நவம்பர், 2018

என் எல்லாமும்...

என் முதலும் முடிவுமாய்
என்றும் என்னோடு இருந்து
என்னை வழிநடத்தும்
என் அன்பு இறைவா...

ந்த இனிய மாதத்திலும்
நீர் என்னோடு...
என் எல்லாமுமாய் இருந்து
என்னை வழிநடத்தும்....

இனியபாரதி.

புதன், 31 அக்டோபர், 2018

காதில் விழுந்தால்...

அவளைப் பற்றி
நான் பேசும் வார்த்தைகள்
அவள் காதை எட்டும் வரைப் பேசுவேன் என்று
நான்னினைத்தது தவறு என்பதே
இப்போது தான் புரிகிறது....

நான் பேசியது அவளைப் பற்றி அல்ல...
என்னுடைய வளர்ப்பைப் பற்றி என்று!!!

இனியபாரதி.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

எப்போதும் இரசிக்க...

ஐஸ்க்ரீம்...

சாக்லேட்...

ஆடைகள்...

ஆபரணங்கள்....

இப்படிப் பலவற்றை

பல்வேறு காலங்களில்

நாம் இரசித்ததுண்டு....

எப்போதும் இரசிக்க வைப்பது

மழலையின் சிரிப்பு மட்டுமே!!!

இனியபாரதி.

திங்கள், 29 அக்டோபர், 2018

காயத்திற்கு மருந்தாய்...

மற்றவரின் காயத்திற்கு
நான் மருந்தாய் இருக்க நினைப்பதில் என்ன தவறு?

மருந்தும்
மருத்துவமும்
காயத்தின் இரணத்தைப் பொறுத்தது!!!

இனியபாரதி.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ஆக்குதலும் அழித்தலும்...

உலகில் எதையும் அழித்து விடுவது சுலபம்...

ஆனால் ஆக்குவது கடினம்...

யோசிப்போம்....

நான் அநேக நேரங்களில்
ஆக்குதலுக்குத் துணையாய் இருந்திருக்கிறேனா?

அழித்தலுக்குத் துணையாய் இருந்திருக்கிறேனா?

ஆக்குதலுக்குத் துணையாய் இருந்தால் நலம்...

ஒருவேளை....
அழித்தலுக்குத் துணை போவதாகத் தெரிந்தால்
அதை நிறுத்திக் கொள்வது நல்லது!!!

நமக்கு ஆக்குதலுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது...

அழித்தலுக்கு அல்ல...

இனியபாரதி.

சனி, 27 அக்டோபர், 2018

வெறுப்பை...

உண்மையில் அவள் நினைப்பது
என்னவென்று எனக்குத் தெரியவில்லை ...

ஆனால்...

அவள் காட்டும் காரணங்கள்!!

எனக்குள் எழும்பும் கேள்விகள்!!

அவளின் வெறுப்பை
நான் உணரச் செய்கின்றன...

இனியபாரதி.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கிடைக்கும் பொழுது...

எதையும் கிடைக்கும் பொழுது
அனுபவிப்பதே புத்திசாலித்தனம்...

அன்பும் அப்படித் தான்...

ஒருமுறை நாம் அதை உதாசீனப்படுத்திவிட்டால்
மீண்டும்
அது நம்மை வந்தடைவது கடினம்!!!

இனியபாரதி.

வியாழன், 25 அக்டோபர், 2018

எதிர்க் காதல்...

எனக்குப் பிடித்த எதுவும்
உனக்குப் பிடிக்காததும்...

உனக்குப் பிடித்த எதையும்
நான் இரசிக்காததும்...

எதிர்மறையாய் இருந்தாலும்

நம் மீதான

நம் அன்பு

என்றும் நேர் மறையானது ....

இனியபாரதி.

புதன், 24 அக்டோபர், 2018

கனி கொடுக்கும்...

என்ன தான்
கனி தரக்கூடிய மரமாக இருந்தாலும்
கனி இனிக்காவிட்டால்
யாரும் அந்த மரத்தை இரசிக்க மாட்டார்கள் ...

இனிய பாரதி.

செவ்வாய், 23 அக்டோபர், 2018

அடிமையாய் இருக்க ..

பலமுறை ஆசைப்பட்டும்
அவளால்
உனக்கு அடிமையாய் இருக்க முடியவில்லை....

ஆனால்....

அவள்
என்றும் உன் அன்பிற்கு அடிமை.....

இனியபாரதி.

திங்கள், 22 அக்டோபர், 2018

என்னைக் காக்கும்...

அவளின் பிரார்த்தனை மட்டுமே
என்னைக் காக்கும் என்பது
என்
அசைக்க முடியாத நம்பிக்கை!!!

இனியபாரதி.

சனி, 20 அக்டோபர், 2018

மின்னல் ஒரு கோடி ...

அப்படியும் அன்பைப் பெறலாம் என்றால்
அது அவளுக்காகத் தான் போல...

அப்படியும் அன்பு செய்யலாம் என்றால்
அது அவனுக்குத் தான் போல...

இரண்டின் கலத்தலிலும்
ஒரு கோடி மின்னல் ஒளி!!

இனியபாரதி.

வெள்ளி, 19 அக்டோபர், 2018

குறிக்கோள்களுடன்...

ஒவ்வொருவர் வாழ்விலும்
ஏதாவது ஒரு குறிக்கோள்
கண்டிப்பாக இருக்க வேண்டும்!!!

குறிக்கோள் அற்ற வாழ்க்கை
"கண்ணை மூடிக் கொண்டு
எல்லாம் இருட்டாய் இருக்கிறது
என்பது போலாகும்..."

கண்களைத் திறந்தால் தான்
செல்வதற்கான வழி தெரியும்...

கண்களைத் திறப்பது என்பது
குறிக்கோள்களை கொண்டிருத்தல் ஆகும் ....

இனியபாரதி.

அப்படியும் இருக்கலாம்...

ஒரு வேளை இப்படி இருக்குமோ???
ஒரு வேளை அப்படி இருக்குமோ???

என்ற
இந்த இரண்டு கேள்விகளைத்
தனக்குள்ளாவது
கேட்டுக் கொள்ளாதவர்கள்
யாரும் இருக்க முடியாது!!!

எது எப்படி இருந்தால் என்ன???

நான் ஒழுங்காக இருக்கிறேனா
என்பது தான் கேள்வி!!!

இனியபாரதி.