சனி, 17 நவம்பர், 2018

ஏங்கும் எனது விழி...

கருவறையில் ஒரு வெளிச்சத்தை நோக்கிக் காத்திருந்தேன்...

மருத்துவமனையில் ஒரு அரவணைப்பைத் தேடிக் காத்திருந்தேன்...

வீட்டில் அன்னையின் அன்பை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்...

சிறுவயதில் தந்தையின் பாசத்தை
பார்க்கக் காத்திருந்தேன்...

பள்ளியில் நண்பர்களின்
நேசத்திற்க்காய்க் காத்திருந்தேன்...

கல்லூரியில் கனா காலங்கள்
கிடைக்கக் காத்திருந்தேன்....

இளமையில் நல்ல வேலையை
எதிர்நோக்கிக் காத்திருந்தேன்...

திருமணத்தில் அழகிய மனைவி
அமைய ஆசையாய்க் காத்திருந்தேன்...

தந்தை ஆகும் தருணத்தில்
தவித்துக் காத்திருந்தேன்...

முதுமையில் என் அழகிய வாழ்க்கையை எண்ணி
உன் சரணடி சேரக் காத்திருக்கிறேன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: