புதன், 14 நவம்பர், 2018

குழந்தையாய்....

எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற குழந்தைகளும் உண்டு...
எதையும் அனுபவிக்காத குழந்தைகளும் உண்டு...

பெற்றோர் உள்ள குழந்தைகளும் உண்டு...
பெற்றோர் இல்லாத குழந்தைகளும் உண்டு....

பள்ளி செல்லும் குழந்தைகளும் உண்டு...
பள்ளி செல்ல முடியாத குழந்தைகளும் உண்டு...

பத்திரமாக இருக்கும் குழந்தைகளும் உண்டு...
பாலியல் பலாத்காரம் செய்யப்படும் குழந்தைகளும் உண்டு....

இறைவா....

உன் படைப்பில் ஏன் இப்படி ஒரு அவலம்???

சமத்துவத்தைக் கொண்டுவர முடியாத
இந்தப் படைப்பில்
குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: