திங்கள், 24 டிசம்பர், 2018

கடமையை உணர்ந்து...

அன்பு செய்வதும்...

ஆதரவாய் இருப்பதும்...

இன்பத்தைப் பகிர்வதும்...

ஈகை புரிதலும்...

உறவுகளுடன் ஒன்றித்திருப்பதும்...

ஊரார்க்கு உதவுதலும்...

எளிமையைக் கடைபிடித்தலும்...

ஏற்ற சொல் பேசுதலும்...

ஐம்புலன்களை அடக்குதலும்...

ஒன்றுபட்டு வாழ்தலும்...

ஓசை இன்றி நடத்தலும்...

ஒளவை‌ வழி வாழ்தலும்...

நம் கடமை ஆகும்!!!

இனிய பாரதி.

கருத்துகள் இல்லை: