செவ்வாய், 4 டிசம்பர், 2018

அன்பு உள்ளம்...

கரைந்து கொண்டிருப்பது நான் தான்...
உனக்கு ஒளி கொடுப்பதால்
என்னை நான் வருத்திக் கொள்வதில் வருத்தமில்லை....

மெழுகுவர்த்தி...

வாடி விடுவது நான் தான்...
உனக்கு மணம் தருவதால் நான் வாடுவதில் வருத்தமில்லை...

மலர்...

அழிந்து கொண்டிருப்பது நான் தான்...
உனக்கு நிழல் தருவதில் வருத்தமில்லை...

மரம்...

மனிதனைத் தவிர
மற்ற அனைத்தும்
மற்றவர் மேல் அக்கறையுடன் தான் வாழ்கின்றன...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: