செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிறப்பின் மகிழ்ச்சி...

மழலையாய் மண்ணில் வந்த நாள் நாம் எல்லோரும் சிறப்பாய்க் கொண்டாடும் ஒரு நாள்...

சில நேரங்களில் அந்நாள் கூட கசப்பான அனுபவங்களைத் தரும்...

நாம் எந்த நோக்கத்திற்காய் இம்மண்ணில் வந்தோம் என்பது சில நேரங்களில் புரியாத புதிராகவே இருக்கிறது....

யாருக்கும் பயன்படாமல்...

எந்த வேலையும் செய்யாமல்...

ஏன் இருக்கிறேன் என்ற எண்ணம் கூட எழலாம்...

அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இப்போதே அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்!!!

நம் பிறப்பு நமக்கு மட்டும் அல்ல...

நம்மைச் சுற்றியுள்ள யாவருக்கும் ஆசீர்வாதமாய் அமையட்டும்...

இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களுடன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: