நாளை முதல், நாற்பது நாட்களுக்கு, எந்த வகையான அசைவ உணவும் கிடையாது. மற்ற நாட்களில் இறைவனைத் தேடினோமோ இல்லையோ...இனிவரும் நாற்பது நாட்களும் மிகவும் ஆவலாய் நாடுவோம்...
அசைவ உணவு கிடையாது...
அதிக நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடையாது...
வீட்டில் சண்டை கிடையாது...
வெள்ளிக்கிழமைகளில் சமையல் கிடையாது...
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும்..
இதை எல்லாம் கேட்கும் போதும் நன்றாய் இருக்கும். இந்த நாற்பது நாட்கள் செயல்படுத்தும் போதும் நன்றாய்த் தான் இருக்கும்.. அதன் பின், இந்த நல்ல குணங்கள் தொடர்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான்!
மற்ற நாட்களில் இறைவனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் நாம், இந்த நாட்களில் அவரை அதிகமாய்த் தேடும் போதும், நாம் கேட்கும் அனைத்தையும் நமக்குச் செய்கிறார்.
இந்த வருடம் உயிர்ப்புத் திருநாள், எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும். அதற்கு என்னை நாளையிலிருந்து தயார்படுத்த வேண்டும்.
எனக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழக்கத்தை இந்த நாற்பது நாட்களும் ஒதுக்கி வைக்கலாம் என நினைத்துள்ளேன்...
கண்டிப்பாக நாற்பது நாட்கள் கழித்து அது பிடிக்காமல் போய் விடும்.
அதிகமாக மற்றவரைப் பற்றிப் பேசக் கூடாதென்றும்
இரவு நேரங்களில் அலைபேசியைப் பயன்படுத்தக் கூடாதென்றும்
அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டுமென்றும்
உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும்
நிறைய நினைத்துள்ளேன்!
இறைவன் தான் வழிநடத்திச் செல்ல வேண்டும்!
இனிய இரவு வணக்கங்களுடன்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக