ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

நான் செய்கிறேனா?

இன்று, எங்கள் ஆலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு, எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது, எதார்த்தமாக நான் எழுதிய ஒரு குறிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு ஃபாதர், 'நாம் சொல்வதற்கு முன் அதைச் செய்கிறோமா என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்' என்றார். என் குறிப்பைப்பற்றிச் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னார்.

ஆனால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்தேன்.

நான் அதிக நேரம் உறங்குகிறேன்!
என் தங்கையைத் தூங்காதே என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை!

நான் காதலிக்கிறேன்!
மற்றவரைக் காதலிக்காதே என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை!

நான் நேரத்திற்குச் செல்வதில்லை!
மற்றவரை நேரத்திற்கு வரவேண்டுமென்று கட்டளையிட எனக்கு உரிமை இல்லை!

நான் நன்றாகப் படிப்பதில்லை!
மற்றவரைப் படி படி என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை!

நான் வேலை செய்வதே இல்லை!
மற்றவரை வேலை செய் என்று கட்டாயப்படுத்த எனக்கு உரிமை இல்லை!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இனி... மற்றவரைச் சொல்லும் முன், நான் அதைச் செய்கிறேனா என்று யோசித்த பின்னே சொல்ல வேண்டும்!

நன்றி தந்தையே!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: