புதன், 22 பிப்ரவரி, 2017

இரசிக்கும் விசயமா?

இன்றைய நாட்களில், அநேகம் மாணவர்கள் அலைபேசிக்கும், கம்ப்யூட்டருக்கும் அடிமைகளாகிவிட்டனர். குறிப்பாக, மூன்றாம் வகுப்பிலேயே அனைத்தையும் கற்றுக் கொள்கின்றனர். நான்காம் வகுப்பில் இருந்து, வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்களுடன் உரையாடும் போது, அவர்கள் கூறும் சில காரணங்கள் மனதை மிகவும் பாதித்தன.

பெற்றோர்கள் தங்களுடன் நேரம் செலவிடுவது இல்லை...

நாங்கள் எது செய்தாலும் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை...

எங்களை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பதில்லை...

என்று பல காரணங்களுடன் வந்தார்கள். கேட்கவே வேதனையாக இருந்தது. சரி...

இப்படிப்பட்ட காரணங்களைக் குழந்தைகள் கூறும் போது, இது குழந்தைகளிடம் பேச வேண்டிய விசயமல்ல. பெற்றோர்களிடம் பேச வேண்டியது தான்.

ஒவ்வொருவரும் தன் குழந்தைகளுக்கு அலைபேசி, கம்ப்யூட்டர் இவற்றின் அவசியத்தையும், அவைகளைப் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு தர வேண்டும்.

குழந்தைகள் பேச வந்தால்...உடனே.. நீ எப்போதும் எதையாவது உளரிக்கொண்டு தான் இருப்பாய்...போய்த் தூங்கு.. என்று சொல்லாதீர்கள்.. அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகத் தான் கேளுங்கள்.

இப்போது வழக்கத்தில் உள்ளது... பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எல்லாம், தங்கள் அம்மாவின் மொபைல் ஃபோன்களை உபயோகிப்பது. தயவுசெய்து இதுபோன்ற தவறுகளைச் செய்யாதீர்கள் பெற்றோர்களே!

அவர்கள் உபயோகிக்கும் போது, நன்றாகத் தான் இருக்கும். பெருமையாகத் தான் தோன்றும். ஆனால், அதன் பின்வரும் பின்விளைவுகளை நீங்களும், உங்கள் குழந்தைகளும் சேர்ந்து தான் அனுபவிக்க வேண்டும்.

நாம் கொஞ்சம் கவனமாக இருப்போம்!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: