உருவாக்கினாள்... உருக்கொடுத்தாள்...
வார்த்தெடுத்தாள்... வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தாள்...
இவள் இல்லாமல் நான் இல்லை
என்று உணரச் செய்தாள்!
இவளின் மூச்சுக் காற்று பட்டு தூங்கிய பொழுதுகள்
இன்னும் வேண்டும் போல் தோன்றுகின்றன!
இவளின் அரவணைப்பில் இன்னும்
இரண்டு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம்!
இவளின் காலடிகளில் அமரும் பொழுதுகள்
நம் கவலைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்!
இவள் தூக்கம் கெட்டாலும்
நம் தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்வாள்!
தன் உடல் நலனைக் கூட இரண்டாம் பட்சமாய் நினைத்து
நம்மைக் காப்பதிலேயே கருத்தாய் இருப்பாள்!
கருவறைக்குள் என்னைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்ட உன்னை
இப்போது வெளியில் நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்!
அன்புடன்
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக