அருகிலேயே அமர்ந்து என்னை ஏங்க வைத்தாய்!
அழைத்தாலும் வராமல் என்னைத் தனிமையில் விட்டாய்!
உன்னைக் காண என் மனம் ஏங்கிற்று!
அனதினமும் நீ என்கண்முன் மிளிர்கிறாய்!
இரவின் ஜாமத்தில் உன்னைத் தேடி அலைகிறேன்!
விடியற்காலையில் என்னை எழுப்பி விடுகிறாய்!
உன்னைக் காணும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன்!
உன்னைப் பார்க்காத நாளில்லை!
உன்னை நினைக்கவே தேவையில்லை!
உன்னை இழக்கும் அந்தத்தருணங்களில்
அழ ஆரம்பித்துவிடுகிறேன்!
ஆறுதல் தர நீயும் இல்லை!
ஆறுதல் பெற நானும் முன்வரவில்லை!
வேடிக்கையான உன் செய்கைகள் தான்
என்னை இன்னும் வாழ வைக்கின்றன!
உன் அருளின்றி நானில்லை!
நானும் நீயும் இல்லாமல் என் நாளில்லை!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக