சத்துள்ள உணவுப் பொருள்
நீ மட்டுமே என்று
உன்னை நம்பி வரும்
அனைவரையும்
ஏமாற்றுவது மட்டுமே
உன் தொழிலா?
உன்னை என்னோடு சேர்த்து
இந்தக் குட்டிப் பிஞ்சுக் குழந்தைகளும் தான்
உண்கிறார்கள்!
தெரிகிறதா? தெரியவில்லையா!
உன்னால் இனி
வரப்போகும் பேரழிவுகள்
எத்தனை எத்தனையோ?
வுயதானவர்கள் மீது கூட
உனக்கு இரக்கமில்லை!
எங்களை சீக்கிரம் இந்த உலகத்தைவிட்டு
அனுப்புவதில் உனக்கு
ஏன் இவ்வளவு ஆர்வமோ!
உன்னைப் பற்றிக் கேள்விப்படும்
ஒவ்வொரு செய்தியும்
உன் மேல் எரிச்சல் கொள்ளச் செய்கிறது!
நீ எப்போது தான் தூய்மையாவாய்!
இல்லை!
நாங்கள் எப்போது தூய உணவு உண்போம்!
அந்த நாளுக்காய் காத்திருக்கிறோம்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக