சில நேரங்களில், தோழிகளுக்குள், சகோதரிகளுக்குள் கொஞ்சம் போட்டி, பொறாமை வருவதுண்டு. அவள் அழகாக இருக்கிறாள்... இவள் இந்த வகையான உடைகள் எல்லாம் வைத்திருக்கிறாள்.... என்று நமக்கு நாமே மற்றவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வோம்.
திருமண வயதை நெருங்கும் போது, எல்லா ஆண்களும் 'எனக்கு அழகான, படித்த, வேலை பார்க்கும் பெண் வேண்டும்' என்றும், எல்லா பெண்களும் 'எனக்கு அழகான, அறிவான, நிறைய சம்பாதிக்கும் ஆண் வேண்டும்' என்றும் நினைப்பது சகஜம் தான்.
ஆனால், எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை... அப்படி அமைந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை செவ்வனே வாழ்ந்தால் நலமே!
நிறம், பணம் இவைகளை விட குணம் முக்கியமே... நான் அதிகமாக என்னுடன் பழகுபவர்களிடம் பார்ப்பது இதுதான்.. கொஞ்சம் சிவப்பாக இருந்தால் இருக்கும் மரியாதை, கொஞ்சம் நிறம் குறைவாக இருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை...
இதை நிறைய மாணவர்களும் என்னிடம் சொல்லிப் பார்த்திருக்கிறேன்.
ஒருவேளை நாம் அழகானவர்களாக இருக்கலாம்.. அதற்காக நம்முடன் பழகும் அனைவரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எண்ணுவதெல்லாம் தவறு தான்..
இப்போதெல்லாம் ஒரு பழக்கம் வந்துவிட்டது... பையன்கள், தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகும் பெண் கலராக இருக்க வேண்டும் என்று முக்கிய கண்டிஷன் போடுகிறார்கள். ஏனென்றால், அப்போது தான் தன் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியுமென்று!
எப்போது தான் இந்தக் கலாச்சாரம் மாறும் என்று தெரியவில்லை!
ஆனால், தன் நிறத்தை வைத்து யாரும் கர்வப்படக் கூடாது என்பதே நான் சொல்ல வருவது!
இனிய இரவு வணக்கங்களுடன்...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக