இன்று, அழகான,ஒரு குட்டிக் கதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு காட்டு வழி, ஒரு செல்வந்தரும், ஒரு வயதான மூதாட்டியும் நடந்து செல்கின்றனர். செல்லும் வழியல், ஒரு முட்புதரின் இடுக்கில், ஏதோ பளபளவென மின்னுவது, மூதாட்டியின் கண்ணில் படுகிறது. அதன் அருகில் சென்று அதை எடுத்துப் பார்க்கிறார். அவருக்கு அது என்னதென்று தெரியவில்லை.
அதனை அந்தச் செல்வந்தரிடம் காட்டுகிறார். அவரோ பார்த்துவிட்டு 'ஐயோ! இது அழகிய வைரக்கல்லாய் உள்ளதே! இது எப்படி இந்த மூதாட்டியின் கண்ணில் பட்டது. என் கண்ணில் பட்டிருந்தால் எனக்குச் சொந்தமாகி இருக்கும். இதை எப்படியாவது நமதாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான்'.
அந்தப் பாட்டியிடம் 'இது வைரக்கல்' என்கிறான். பின்.. தொடர்ந்து 'இதை நான் வைத்துக் கொள்ளட்டுமா?' என்கிறான். அதற்கு அந்த மூதாட்டி 'சரி' என்கிறான்.
இருவரும் அவரவர் வீட்டிற்குச் செல்கின்றனர். அந்தச் செல்வந்தனுக்குத் தூக்கமே வரவில்லை. எப்படி இந்த மூதாட்டி இவ்வளவு விலை உயர்ந்த வைரக்கல்லை எனக்குக் கொடுத்துவிட்டார்? ஒருவேளை அவரிடம் இதைவிட விலைஉயர்ந்த ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமென்று எண்ணி, அடுத்த நாள் அந்த மூதாட்டியின் வீட்டைக் கண்டுபிடித்துச் செல்கிறான்..
அந்த மூதாட்டியிடம் 'வைரம் மிகவும் விலை உயர்ந்தது. அதை எப்படி எனக்குக் கொடுத்தீர்கள்? அப்படி என்றால், உங்களிடம் இதைவிட விலை உயர்ந்த ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்!' என்றான்.
அதற்கு அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே 'போதும் என்ற மனம் தான்' என்றார்.
ஞானம் பெற்றார் செல்வந்தர்...
நாம்?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக