சனி, 28 ஜனவரி, 2017

மக்களால் மக்களுக்காக....

இன்று எங்கள் பள்ளியில் நடந்த அழகான குட்டி குட்டி அனுபவங்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்தல் பற்றியும், எப்படி வாக்களிப்பது, தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியும் படிக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு அனுபவ முறைக் கல்வியைத் தர வேண்டுமென்று நினைத்து, பள்ளியில் மாதிரித் தேர்தல் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.

அதற்காக வகுப்பிலுள்ள மாணவர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் என்று தேர்ந்தெடுத்தோம்.

இன்று அந்தத் தலைவர்கள், தங்கள் கட்சிகளைப் பற்றி மக்களிடம்(மற்ற மாணவர்களிடம்) எடுத்துக் கூறினார்கள்.

அரசியல் தலைவர்கள் கூட பேச முடியாத அளவிற்கு அவர்கள் பேசினார்கள். மாணவர்களின் தேவைகள் என்னென்னவாக இருக்கும் என்று உணர்ந்து, அதற்கேற்றார் போலப் பேசினார்கள். கேட்கவே ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது.

இந்தக் காலத்துப் பிள்ளைகளிடமிருந்து நாம் தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

வாழ்க நம் பாரதம்!

இனியா.

கருத்துகள் இல்லை: