ஒரு பெண் அனைவரிடமும் சகஜமாகவும், அன்பாகவும் பேசும் போது, அதைத் தவறென்று சொல்லும் சமூகமும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளும் பெண்களும் சத்தியமாக இந்த உலகில் இருக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை...
பேருந்தில் செல்லும் போது ஒரு ஆணைப் பார்த்து சிறு புன்னகை புரிய முடியவில்லை...
அடுத்த இரண்டு நிமிடங்களில் உன் அலைபேசி எண்ணைக் கேட்கிறான்!
வீட்டிற்கு நண்பர்கள் வந்தால்
அதைப் பார்த்துக் கொண்டே இருந்து
அவன் சென்ற பின்
அடுத்த நாள் பேச்சிற்கு ஒரு தலைப்பு கிடைத்துவிட்டதென்று
பெருமைப்படும் பக்கத்து வீட்டு அத்தைகள்!
அதைப் பார்த்துக் கொண்டே இருந்து
அவன் சென்ற பின்
அடுத்த நாள் பேச்சிற்கு ஒரு தலைப்பு கிடைத்துவிட்டதென்று
பெருமைப்படும் பக்கத்து வீட்டு அத்தைகள்!
உறவினர்களுடன் மோட்டார் வாகனத்தில் சென்று வருவதைப்
பார்த்துக் கொண்டே இருக்கும்
அண்டை வீட்டு அரைவேக்காடுகள்!
பார்த்துக் கொண்டே இருக்கும்
அண்டை வீட்டு அரைவேக்காடுகள்!
தெருவில் வரும்போது ஃபோனில் ஏதாவது
ஒரு முக்கிய நபருடன்
பேசிக் கொண்டு வந்திருப்போம்!
ஒரு முக்கிய நபருடன்
பேசிக் கொண்டு வந்திருப்போம்!
நமது ஃபோன் பில்லை
தாங்கள் கட்டுவது போல்
அலட்டிக் கொள்ளும் தெருக் கூட்டங்கள்!
தாங்கள் கட்டுவது போல்
அலட்டிக் கொள்ளும் தெருக் கூட்டங்கள்!
பெண்களை எந்தவிதப் பொதுக் கூட்டங்களிலும்
அனுமதிக்காத
அகம்பாவம் பிடித்த ஆண் கூட்டங்கள்!
அனுமதிக்காத
அகம்பாவம் பிடித்த ஆண் கூட்டங்கள்!
நான் இல்லை என்றால்
நீ இல்லவே இல்லை....
நீ இல்லவே இல்லை....
என்று எண்ணியே தன் வாழ்க்கையை இழக்கிறது
இந்தக் கூட்டம் தான்!
இந்தக் கூட்டம் தான்!
இவற்றை எல்லாம் மீறி
யாரிடமாவது நன்றாகப் பேசினால்
தவறாகப் புரிந்து கொண்டு
காதல் சொல்லத் துடிக்கும்
ஆண்கள் கூட்டம் மறுபக்கம்!
யாரிடமாவது நன்றாகப் பேசினால்
தவறாகப் புரிந்து கொண்டு
காதல் சொல்லத் துடிக்கும்
ஆண்கள் கூட்டம் மறுபக்கம்!
நான் இந்த உடை உடுத்தினால்
என்னில் ஏற்படும் ஆனந்தத்தை விட
மற்றவர் பார்வைக்கு எப்படி இருக்கும்
என்பதை உணர்ந்து
உடை உடுத்த வேண்டிய கட்டாயம்!
என்னில் ஏற்படும் ஆனந்தத்தை விட
மற்றவர் பார்வைக்கு எப்படி இருக்கும்
என்பதை உணர்ந்து
உடை உடுத்த வேண்டிய கட்டாயம்!
வேலைக்குச் செல்லுமிடத்தில்
மேலிருந்து கீழ் வரை
நோட்டமிடும் மேனேஜர்!
மேலிருந்து கீழ் வரை
நோட்டமிடும் மேனேஜர்!
எங்கு தான் என்னை நிம்மதியாக
வாழ விடுவீர்கள்!
வாழ விடுவீர்கள்!
என் பாரதி மட்டும் இப்போதிருந்தால்
'நீ அடுப்பறைக்குள்ளேயே பத்திரமாக இரு கண்ணம்மா!'
என்றிருப்பான்!
'நீ அடுப்பறைக்குள்ளேயே பத்திரமாக இரு கண்ணம்மா!'
என்றிருப்பான்!
கவலை வாட்டுகிறது. பொறுப்பை உணர்ந்து அனைவரும் வாழ்வோம்.
ஏதோ படிப்பதற்காக அல்ல...
பெண்களின் இன்றைய நிலைமை ஒவ்வொருவராலும் உணரப்பட வேண்டும்.
இனிய இறைவா! என்னைப் போல், என் அடுத்திருப்பவரையும் பார்க்கும் மனம் தா!
அன்பை ஆண், பெண் பாராமல் அனைவருக்கும் தர எனக்குப் பரந்த மனம் தா!
அன்புடன்
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக