செவ்வாய், 24 ஜனவரி, 2017

பெயரிட முடியவில்லை!

அனுதினமும் உன்னால் தான்
நான் விழிக்கிறேன்!

பல்லியைக் கண்டால்
வருகிறாய்!

குளிர்ந்த நீரில் குளிக்கும் போது
தெரிகிறாய்!

நேரம் ஆகும் போதும்...

என் வேலையைச் செய்யாத போதும்...

பிறர் என்னைப் பற்றிப் பேசும் போதும்...

நீ...

என் அருகில் இருப்பது போன்ற உணர்வு!

மதிய வேளைகளில்
உணவு மிச்சமானால்...

மாலைப் பொழுதில்
வீட்டிற்கு
நேரம் கழித்துச் சென்றால்....

இரவு நேரங்களில்
அலைபேசியின் ஒளியில்
இளைப்பாறிக் கொண்டிருக்கையில்!

தூங்கச் செல்லும் முன்
'நாளை எப்படி
இருக்கப் போகிறது?'
என எண்ணுகிற வேளையில்!

தூக்கத்தில் வருகிற
பேய் கனவில்!!!

என

எல்லாமுமாய் என்னில்

கலந்து விட்டது

நீ

மட்டுமே!!!

'பயம்'

எப்போது என்னை விட்டு விலகப் போகிறாய்?

'நான்'

அன்புடன்
இனியா.

கருத்துகள் இல்லை: