ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஆகையால் நான்!

வந்தேன்... பொறுத்திருந்தேன்...

கண்டேன்... திகைத்தேன்....

அமைதியாய் இரசித்தேன்...

சிந்தித்தேன்...

அந்தப் பேரின்ப நேரங்களை!

கண்கள் மூடத் தோன்றவில்லை!

உன்

பாவனைகளின் மிரட்டலால்!

கைகோர்க்கும் விதம்

மாறவில்லை!

கண் சிமிட்டும் அழகு

குறையவில்லை!

உனக்கே உரித்தான

அந்தத்

தோரணை!

சில நொடிகள் யோசித்தேன்!

ஏன் என்னைக்

கண்டுகொள்ளாமல்

நிற்கிறாய் என்று!

பின் தான் தெரிந்தது

நான்

உன்னைப் பார்க்கவில்லை!

உன் உள்ளம்

போன்ற

ஒரு சிறு குழந்தையைக்

கண்டேன்

என்று!

அன்புடன்

இனியா.

கருத்துகள் இல்லை: