அன்பார்ந்த பெற்றோர்களே!
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசும் மாநில அரசும் கைவிரித்துவிட்டன. இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது என்று, இளைஞர்கள் கொதித்து எழுந்து கொண்டு இருக்கின்றனர். இன்றைய இந்த நிலையில் அப்துல் கலாம் ஜயா இருந்திருந்தால், இந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்துப் பெருமிதம் கொண்டிருப்பார்..
மத்திய அரசின் செயலைக் கண்டித்து, நாளை தமிழகத்தில் எதுவும் இயங்காது. அதனால், இளைஞர்கள் ஒவ்வொருவரும் நம் தமிழ்நாட்டின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்த சிறந்த தருணம். பெற்றோர்கள் தயவு செய்து இளைஞர்களையும், இளம்பெண்களையும் வீட்டிற்குள் அடைத்து விடாதீர்கள்!
நாளைய நல்ல சமுதாயத்தை உருவாக்க வழி செய்யுங்கள்!
நாளைய தினம் ஒவ்வொரு தமிழன் வாழ்க்கையிலும் மறக்க முடியாததாக இருக்கட்டும்!
இறைவன் அருள் என்றும் நம்மோடு!
அன்புடன்
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக