நேற்று மாலை, எங்கள் ஊரில் உள்ள, ஒரு நர்ஸரி தோட்டத்திற்குச் சென்று, இரண்டு ரோஜாச் செடிகள் வாங்கி வந்தோம். அழகான சிவப்பு நிற ரோஜா அதில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அதற்கு மண் எடுத்து வந்து, இன்று தான் அதை ஒழுங்குபடுத்தி எடுத்து வைத்தேன்.
அதற்கு என்ன பெயரிடலாம் என்று யோசித்த போது, என் தங்கை 'பாரதி – செல்லம்மா' என்றாள். ஒரு செடிக்குப் பாரதி என்றும், இன்னொன்றிற்குச் செல்லம்மா என்றும் பெயரிட்டு இருவரையும் அருகருகே வைத்துள்ளேன்.
பார்க்கவே அழகாய் உள்ளன.
ஏதோ எங்கள் வீட்டு உறுப்பினர்களில் இருவர் கூடிவிட்டது போன்ற ஒரு உணர்வு.
மனதில் ஒருவிதமான மகிழ்ச்சி!
பாரதியும் செல்லம்மாவும் உறங்கச் சென்றுவிட்டனர்.
நானும் உறங்குகிறேன்!
இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக