அழகாய் ஆரம்பித்த இந்த வருடம்... அழகாய் வழிநடத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது....
இன்றோடு எட்டு மாதங்களைக் கடந்துவிட்டோமென்றால் நம்ப இயலவில்லை...
சற்று திரும்பிப் பார்த்தோமென்றால் சொல்வதற்கென்று ஒன்றுமில்லாதது போல் தெரிகிறது...
எப்படி எட்டு மாதங்கள் கடந்ததென்பது பலரின் எண்ணமாகக் கூட இருக்கலாம்!
நாளை ஒன்பதாவது மாதத்தின் முதல் நாள்...
இந்த வருடம் முடிய இன்னும் நான்கே மாதங்கள் உள்ள நிலையில்...
நம்மைப் பற்றியும்...
நம் குடும்பத்தைப் பற்றியும்...
நம் சமூகத்தைப் பற்றியும்...
நம் ஊரைப் பற்றியும்....
நம் மாநிலத்தைப் பற்றியும்...
நம் நாட்டைப் பற்றியும்...
நம் உலகைப் பற்றியும்....
சற்று சிந்திப்போம்...
ஊரில் உள்ள அரசியல்வாதிகளும், தேசத்தலைவர்களும் நமக்குச் செய்கின்ற கொடுமை பத்தாது என்று இந்த நீலத்திமிங்கலம், கருப்புத் திமிங்கலம் என்று மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்க ஏராளமாக ஊடகங்கள் வந்து விட்டன...
இதை உருவாக்கியவர்களின் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது..
எங்கே இருக்கிறது என் சமுதாயம்?
எங்கே சென்றது இந்த மனித இனத்தின் அன்பு? பொறுமை? சகிப்புத்தன்மை?
புதிதாகத் தொடங்க இருக்கும் மாதத்தில் இருந்தாவது இந்த மூன்று குட்டி தேவதைகளை நம் வீட்டில் வரவேற்று நம்முடன் வைத்துக் கொள்வோம்...
வருகின்ற நாட்கள் நமக்கும், நம் சுற்றத்திற்கும் இனிதாய் அமைய வாழ்த்துகள்...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வியாழன், 31 ஆகஸ்ட், 2017
மூன்று குட்டித் தேவதைகள்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக