திங்கள், 14 ஆகஸ்ட், 2017

எது சுதந்திரம்...

சுதந்திரம் பெற்று விட்டோம் என்று
வருடாவருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் நாளைச்
சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்..
என்னைப் பொறுத்தவரை நாம் பெற்றது
சுதந்திரமல்ல...
சுதந்திரம் என்பது...

என் சுயசிந்தனையைப் பயன்படுத்தி
பிறர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது...
மற்றவர்க்கு அடிமையாய் இருந்து தலையாட்டுவது அல்ல...

என் சொந்த விருப்பு வெறுப்புகளில் யாரும் தலையிடாமல்
பார்த்துக் கொள்வது..
மற்றவரின் விருப்பப்படி வாழ்வது அல்ல...

என் கடமையை நானே செய்வது..
மற்றவர் பார்க்கின்றனர் என்பதற்காகச் செய்வது அல்ல..

என்னிடம் உள்ளவற்றை வைத்து நான் வாழ்வது...
மற்றவர்க்காக ஊரெல்லாம் கடன் வாங்கி
பகட்டைக் காட்டுவதற்கு அல்ல...

பெரியவர்களை மதித்து வாழ்வது...
என் மீது உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று
அவர்களை இழிவுபடுத்துவது அல்ல...

தேவைகளில் உள்ளவர்களுக்குச் சரியான நேரத்தில்
சரியான உதவி கிடைக்கப் பெறுவது..
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இந்த நாடு என்பது அல்ல...

இப்படி...
நம் நாட்டு நடப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனால்
நாம் அந்நியர்களுக்கே அடிமைகளாய் இருந்திருக்கலாம்
என்ற எண்ணம் தான் தோன்றுகிறது!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: