சிட்டுக் குருவி ஒன்று...
அந்தக் காட்டைச் சுற்றி வந்த பருந்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தது..
குருவிக்குத் தன்னை அறியாமல்
அந்தப் பருந்தின் மீது காதல் வந்தது...
அந்தப் பருந்திடம் சொல்ல முடியாமல்
தூர நின்று அதை இரசித்துக் கொண்டு வந்தது...
காலஓட்டத்தின் கடைசியில்
அந்தப் பருந்தைச் சந்தித்து விசயத்தைக் கூறிவிட
வேண்டுமென்று முடிவெடுத்தது...
ஒரு நாள்....
பருந்து ஆற்றங்கரையில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது...
அதனருகில் சென்ற குருவி அதைப் பார்த்து 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றது...
இதைக் கேட்;ட பருந்து, அந்தக் காடே அதிரும்அளவிற்கு வாய்விட்டு சிரித்தது...
சிரித்து விட்டு அந்தக் குருவியிடம்....
'உனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று வானைத் தொடுமளவு உயரப்பறக்கும் என்னை, நீ விரும்புவதாகக் கூறுவாய்? நான் அவ்வளவு சிறுமைப்பட்டவனா?' என்றது...
அதைக் கேட்ட சிட்டுக் குருவி துக்கம் தாளாமல் ஆற்றங்கரைக்குள் மூழ்கித் தன் உயிரை விட்டது..
அதைப் பார்;த்து அதிர்ந்துபோன பருந்து.... 'காதலுக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா? அதை அறியாமல் வீணாக ஒரு உயிரைக் கொன்று விட்டோமே! உயர்வு, தாழ்வு பார்த்து வருவதில்லை காதல்...' என்பதை உணர்ந்தது...
இருந்தும்... அந்தச் சிட்டுக்குருவியின் இழப்பு பருந்தை வெகுநாட்கள் வாழ விடவில்லை...
அதுவும் தன் உயிரை மாய்த்துக் கொண்டது...
இது தான் பருந்திற்கு சிட்டுக் குருவியின் மீது வந்த காதல்....
இருக்கும் போதே அன்பை அனுபவித்து விடுவது நல்லது.. பின் வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக