செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

கடைசித் தருணம்...

இன்று நான் கண்ட காணொளியில், என்னை மிகவும் பாதித்த விசயம்...
மலைக்கரடி ஒன்று காட்டிலிருந்து வெளிவந்த நிலையில், வெளியில் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை இழுத்துச் சென்று, ஒரு இடிந்த கட்டிடத்தின் அருகில் நின்று, அவனைச் சாப்பிட ஆரம்பித்தது. அதனருகில் செல்ல எவருக்கும் தைரியமில்லை... அதை விரட்ட வழியும் தெரியவில்லை... அவனைக் காப்பாற்றவும் முடியவில்லை....
அந்த இளைஞன் நடப்பதறியாது திகைத்துப்போய், அதன் பிடியில் மயங்கிய நிலையில் இருக்கிறான். அருகிலிருந்தவர்கள் அவனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள். யாராலும் முடியவில்லை.... அந்த இளைஞனைப் பற்றிய நிலையில், அந்தக் கரடி காட்டிற்குள் சென்று விட்டது.
இப்போது அங்கு நின்றிருந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
அந்த இளைஞனின் நிலை என்னவாயிருக்கும்?
அந்த இளைஞனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அந்த இளைஞனாக நான் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?
அந்தக் கரடியை எதிர்த்து சண்டையிட்டு, என்னால் தப்பித்திருக்க முடியுமா?
அந்தக் காணொளியைக் கண்டதும் எனக்கும் பயம் வந்து விட்டது... ஒரு நிமிடம் எதுவுமே செய்ய வேண்டுமென்றுத் தோன்றவில்லை...
அந்த இடத்தில் ஒருவேளை நான் இருந்திருந்தால்... அன்றோடு என் நிலை முடிந்திருக்கும்...
இதற்காகத் தான் இவ்வளவு படித்தேனா?
இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து வேலை செய்கிறேனா?
இவ்வளவு கஷ்;;டங்களை என் அன்பிற்குரியவர்களுக்குக் கொடுக்கிறேனா?
என் நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறேனா?
இப்படிப் பலவாறு எண்ணங்கள் தோன்றியது.
ஒருவேளை அந்த இடத்தில், என் அன்பிற்குரியவர் இருந்திருந்தால்....
அது... தன் இறப்பைவிடக் கொடுமையானது...
தன் அன்பரின் இறப்பைக் கண்முன் கண்டு உயிருடன் இருப்பது...
இந்தக் காணொளியை எடுத்தவர் யாரென்றுத் தெரியவில்லை... ஆனால், அந்த நேரத்தில் அவனைக் காப்பாற்ற முயற்சிக்காமல், இதை எடுத்த அந்த மனிதாபிமானமிக்க நம் நண்பருக்கு கட்டாயம் வாழ்த்துக் கூற வேண்டும்....
ஒரு நிமிடம் கூட நமக்குச் சொந்தமில்லாத உலகில் வாழ்கிறோம்..
இதில் வீண் பெருமை எதற்கு?
பிடிவாதம் எதற்கு?
கோபம் எதற்கு?
கண்ணீர் எதற்கு?
கவலை எதற்கு?
நம்மால் முடிந்தவரை அன்பைப் பொழிந்து, ஆறுதலடைந்து வாழ்வோம்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: