வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கவிதையில் கலவரங்கள்...

கலவரம் உன்னில் மட்டும் இல்லை...
என்னை உருவாக்கக் கையாளும் வார்த்தைகள் தங்களுக்குள்
கலவரத்தில் ஈடுபடுகின்றன...
என் மெட்டு இசையில் கலவரத்தை உண்டாக்குகிறது...
என் வர்ணனைகள் அவளுக்குள்
கலவரத்தை ஏற்படுத்துகின்றன...
என் கோர்வைகள் அவனுக்குள்
கலவரத்தை ஏற்படுத்துகின்றன...
கலவரம் இல்லா
காதல் செய்ய
கவிதையை நேசிக்கிறேன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: