ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

நின்னை...

உன்னைக் கண்டதும்
செல்வச் செழிப்பில்
திளைத்தவள் என்றே
நினைத்தேன்....
ஆனால் அவளிடம்
இருந்தது என்னவோ
அன்புச் செல்வம்
மட்டும் தான்...
கண்டான்...
கண் நோக்கினான்...
உணர்ந்தான்....
அவள் மட்டுமே எல்லாம்
என்றானான்...
யாருக்கும் அவளை
விட்டுக் கொடுக்கும்
மனமும் இல்லை...
சூழலும் அப்படி
அமையக் கூடாதென்று
எண்ணிக் கொண்டு இருக்கிறான்....
அவனது நேரமும் வரவில்லை...
அவளுக்கும் அதே நிலை தான்...
என்று தான் மாறும்
நம் வாழ்க்கை நிலை
என்று நொந்து கொண்டு
இருக்கிறார்கள்!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: