ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அனைத்தையும் அவளுக்காய்...

அவளுக்காய் நான் செய்த ஒவ்வொன்றையும்
அவள் அறிந்து கொண்டாலோ இல்லையோ
அவள் தோழிகள் அறிந்து கொண்டனர்....

இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களோ
என்று
வியந்து பார்க்கின்றனர்...

அது அவளுக்கும் தெரியும்...

இருந்தும் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும்
அவளது பிடிவாதம்
எங்களைச் சேர விடாமல்
நிரந்தரமாகப் பிரித்து விடுமோ
என்ற பயம் தான் எனக்கு!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: