புதன், 29 மார்ச், 2017

உறங்கையிலும்...

உன் அழகை இரசிக்க எனக்கு நேரமில்லையா?
இல்லை
நீ உறங்கும் போது தான் உன் அழகு
எனக்குத் தெரிகிறதா என்று தெரியவில்லை!
உறங்கையில் உன் கண் இமைகள்
துடிக்கும் அழகு...
உன் கைவிரல்களை வருடும் அழகு..
உன் தலைமுடிகளைக் கோதிவிடும் அழகு....
உன் உதடுகளைத் தடவும் அழகு...
இவ்வளவு அழகாய் உன்னைப் படைத்தவனுக்குத் தான் பெருமை!

உனக்காக... உன் அம்மா

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: