புதன், 22 மார்ச், 2017

இனிய நாள்...

தினமும் காலை எழுந்தவுடன், காலண்டர் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் ஏராளம். அதில் நானும் ஒருத்தி. அதுவும் இராசி பலன் பார்க்க மறக்க மாட்டேன். அதில் ஏதாவது விபரீதமாக இருந்தால், அதைப்பற்றியே அந்த நாள் முழுதும் யோசித்துக் கொண்டே இருப்பேன். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன். நல்ல நாள் என்பது, நாம் பார்க்கும் இராசி பலன்களை வைத்து வருவதில்லை. நம்மைச் சுற்றி எப்போதும் நல்ல நண்பர்கள், நம்முள் நல்ல எண்ணங்கள் இருக்கும் போது எல்லா நாளும் இனிய நாளே!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: