இன்று மாலை எங்கள் வீட்டில் எல்லோரும் கூடி ஜெபித்தோம். எங்கள் பங்கின் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரையும் சேர்த்து ஒரு நாற்பது பேர் இருந்திருப்போம். வீடு பார்க்கவே அழகாக இருந்தது. பங்குத் தந்தை நிறைய விசயங்களைப் பற்றி எங்களுடன் கலந்தாலோசித்தார். இதற்கு முன்பிருந்த பங்குத்தந்தையர் யாரும் செய்யாத ஒரு காரியம் தான் இது. உண்மையில் இவரைப் பாராட்ட வேண்டும் போல் தோன்றியது. ஜெபித்து முடித்து மக்களுடன் மக்களாக உண்டு, எங்களுடன் சேர்ந்து இரவுணவு உண்டார்.
இன்று நாங்கள் சிந்தித்த ஒரு சிந்தனைப்பகுதி இது தான்... 'நம்முடன் யார் யார் எப்படிப் பழக வேண்டுமென்று எண்ணுகிறோமே தவிர, அவர்களுடன் நாம் எப்படிப் பழக வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை யோசிக்க மறந்து விடுகிறோம்'. சிம்பிள். நான் என்னை எப்படி பார்க்கிறேனோ.. அப்படியே மற்றவரையும் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எம்பதி. (Empathy).
இன்றைய மாலை வேளை நன்றாகவே சென்றது. ஜெபத்திற்கு பின் அனைவரும் சேர்ந்து உண்டோம். கலகலவென்று அனைவரும் சேர்ந்து உறவுகள், அயலார் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து இருந்த அந்தத் தருணமே நன்றாய்த் தான் இருந்தது.
களைப்பையும் மீறி ஏதோ ஒரு உந்து சக்தி தான் என்னை எழுதத் தூண்டியது.
இந்த நேரத்தில் என் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும்.
அன்புடன்
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக