சென்ற வாரம் (19-3-17) ஞாயிறன்று, கோட்டூர் பங்கில் நடந்த தியானத்தின் சுருக்கம் - பாகம் - 2
பள்ளியில் சமூகவியில் பாடவேளை நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்து, பாடத்தை வாசிக்கச் சொன்னார். அவனும் எழுந்து 'ஆசிரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர்' என்றான். ஆசிரியர் அவனை மறுபடியும் வாசிக்கச் சொன்னார். மறுமுறையும் அப்படியே வாசித்தான். அந்த ஆசிரியரைப் பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். ஆக, ஒரு எழுத்து மாறும் போதே எவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது.
'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என்கிறார் இயேசு.
அவ்வாறு, அவர் வழி செல்வதற்கு, நாம் முதலில் நம்மைத் தயாரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:
1. உடல்
'உடல் ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்' – 1கொரி 6:13
டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். ஒருநாள் அவர் வெளிநாடு சென்றிருந்தபோது, அங்கிருந்த ஒருவர், இவரது நிறத்தைக் குறித்துக் கேவலமாகப் பேசினாராம். 'You dirty'. அதற்கு இராதாகிருஷ்ணன் சிறிதும் கோபப்படாமல், அவருக்கு ஒரு கதையைச் சொன்னாராம். கேக் கடை ஒன்று இருந்தது. அந்தக் கடைக்காரர் மாவைப்பிசைந்து எடுத்து கனலுக்குள் வைத்தாராம். சரியாக வேகாத நிலையில் வெளியில் எடுக்கப்பட்ட அந்த கேக் வெள்ளையாக இருந்ததே தவிர, அதில் சுவையில்லை. அடுத்து ஒரு தட்டை எடுத்து, அதிலும் மாவைப்பிசைந்து சூடேற்றினார். அதிக சூட்டினால் கறுகிப்போனது. யாராலும் சாப்பிட இயலவில்லை. இறுதியாக, மீதமிருந்த மாவைப் பிசைந்து, மிதமான வெப்பத்தில் சூடேற்றினார். அந்த கேக் ருசியாக இருந்தது. இந்தக் கதை, கேட்டுக் கொண்டிருந்தவரை வெட்கப்பட வைத்ததாம்.
வாழ்வின் மிகப்பெரிய சவால், உடலால் ஏற்படக்கூடிய சவால்.
பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. பெற்றோர் கல்லூரியில் பேராசியர்களாகப் பணிபுரிகின்றனர். சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு, தன் நிர்வாணப்படத்தை அவருக்கு அனுப்பும் அளவிற்கு நட்பாகிவிட்டது. கடைசியில் இந்த விசயம் வீட்டிற்குத் தெரியவர, அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு வருகின்றனர். அந்த சமயத்தில், அருட்தந்தையின் உதவியால், அந்த நபரைக் கண்டுபிடிக்கின்றனர். அந்த 21 வயது நபரின் உண்மையான வயது 40. அந்த மாணவி அவனைப் பார்க்கும் வரையில் நம்பவே இல்லை.
எசாயா 54: 5 ல் சொல்லப்பட்டது போல்,'உன்னை உருவாக்கியவரே உன் கணவர். 'படைகளின் ஆண்டவர்' என்பது அவர் பெயராம்.
நீ கடவுள் வாழும் ஆலயம்.
2. மனம்
'நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப்பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்' – திருப்பாடல்கள் 63: 3
நம்முடைய இரவு உரையாடல்களும், சிந்தனைகளும் யாரைப் பற்றி இருக்கின்றன.
மனம் போல் வாழ்வு – என்ற சொற்றொடர் உண்டு.
'நல்ல குடும்பங்கள் நல்ல மனிதர்களை உருவாக்குவார்கள்.
நல்ல மனிதர்கள் நல்ல மனங்களை உருவாக்குவார்கள்'
3. ஆன்மா
நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்;. எனினும் பாவம் செய்யாதவர். – எபி 4:15
நீதிமான் கூட ஒருநாளைக்கு ஏழு முறை தவறுகிறான் என்கிறது பழமொழி நூல்.
4. உணர்வுகள்
காண்க – மத்தேயு 26: 37 முதல் 39
நம் வாழ்வில் கஷ்டங்கள் வரும் போது, கடவுள் எங்கே இருக்கிறார் என்ற போராட்டம் நமக்குள் நடக்கிறது.
உதாரணமாக.
ஒரு சிறு கதை.
ஒரு குழந்தை, தன் அப்பாவிடம் 'கடவுள் எவ்ளோ பெரிசா இருப்பார்?' என்று கேட்டதாம். அதற்கு அந்த அப்பா 'பிளைட் மாதிரி இருப்பார். அதாவது தூரத்தில் பார்க்கும் போது சிறயதாய் தெரிவார். அருகில் வைத்துப் பார்க்கும் போது பெரிதாய் தெரிவார்' என்றாராம்.
நும் தாய், தந்தையின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
'உயிரும் மெய்யுமாக இருப்பதால் தான், நம் உயிரோடு இருக்கிறோம்'
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
உலகத்தையே சிரிக்க வைக்கத் தெரிந்த சார்லி சாப்ளினுக்கு, தன் சொந்த வாழ்க்கையில் சிரிப்பு என்பதே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதைத் தொடர்ந்து மன்னிப்பைக் குறித்து சிந்தித்தோம்.
1. மன்னிப்பு ஒரு நிபந்தனை
மத்தேயு 6: 14-15
2. மன்னிப்பு ஒரு இறைச்செயல்
கொலோ 3:13
3. மன்னித்தல் ஒரு அழைப்பு
லூக்கா 6:37
4. மன்னிப்பு ஓர் அன்புச்செயல்
லூக்கா 17:3. மாற்கு 11:25
5. மன்னிப்பு ஓர் பழக்கம்
மத்தேயு 18:22
இறுதியாக, நாம் அனைவரும் கடவுளின் கொடை, நம்மிடம் உள்ளவற்றைக் கொண்டு நிறைவு கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும், எதிர்காலத்தைக் குறித்துப் பயம் கொள்ளக் கூடாது, துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவனிடம் வேண்ட வேண்டும் என்ற சிந்தனையோடு அன்றைய தியானம் இனிதே நிறைவுற்றது.
அன்புடன்
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக