ஒரு நிமிடம் கூட நான் வேலை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை...
சில நேரங்களில் நினைத்தபடி வாழ முடியவில்லை...
சில நேரங்களில் என் கடமையைச் செய்ய முடியவில்லை...
சில நேரங்களில் பிடித்ததைச் செய்ய முடியவில்லை...
சில நேரங்களில் நண்பர்களுடன் நேரம் செலவிட முடிவதில்லை...
சில நேரங்களில் என் வாழ்க்கையை வாழ முடியவில்லை...
சில நேரங்களில் பெற்றோரிடம் சரியாகப் பேச முடியவில்லை...
சில நேரங்களில் என் உறவுகளுடன் உரையாட முடிவதில்லை...
சில நேரங்களில் நான் நினைத்ததை சாப்பிட முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பியதை உடுத்த முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் படங்களை சுவர் ஒப்பனைத் தாளாகக்(Wall Paper)கூட வைக்க முடிவதில்லை....
சில நேரங்களில் நான் விரும்பும் படத்திற்குச் செல்ல முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் மழையை இரசிக்க முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் பெண்ணை மணக்க முடிவதில்லை...
சில நேரங்களில் நான் விரும்பும் நபரிடம் நட்பு வைத்துக் கொள்ள முடிவதில்லை...
இப்படி
எத்தனை சில நேரங்களை...
நான்
மற்றவருக்காகச் செலவிட்டேன்
என்று
என்னால்
நினைக்க இயலவில்லை....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக