திங்கள், 27 மார்ச், 2017

இயேசுவின் வார்த்தைகள்...

சென்ற வாரம் (19-3-17) ஞாயிறன்று, கோட்டூர் பங்கில் நடந்த தியானத்தின் சுருக்கம்.
'இயேசுவின் வார்த்தைகள்' என்ற தலைப்பில் இன்றைய கால இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வார்த்தையின் வலிமை பற்றி எடுத்துச் சொல்ல, கருமாத்தூரிலிருந்து அருட்தந்தை ஜெரோன் அவர்கள் வந்திருந்தார்.
முதலாவது ஒரு உண்மைச் சம்பவத்துடன் ஆரம்பித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன். அவன் பெயர் விஜய். அவனை இவருக்கு நன்கு தெரியும். பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களுள் இவனும் ஒருவன். ஒருநாள் ஏற்பட்ட சண்டையில் இவன் அப்பாவும் அம்மாவும் தீக்குளித்து, அவனது முழு ஆண்டுத் தேர்வு சமயத்தில் இறந்து விடுகின்றனர். தந்தை – அவன் தேர்விற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இறக்கிறார். தாய் - இரண்டு நாட்களுக்கு முன்பு இறக்கிறார். இவன் எப்படித் தேர்வு எழுதப் போகிறான் என்று எல்லோரும் பதைபதைத்த நேரம்.
அவன் ஆசிரியர்களுடன் சேர்ந்து இவரும், அவனைக் காணச் செல்கிறார். அவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றுத் தெரியாமல் தவிக்கிறார். அவன் இந்த அருட்தந்தையைப் பார்த்து சொன்னது இதுதான் 'என் தம்பிக்காகவாவது நான் படிக்க வேண்டும்'.
அந்த வார்த்தை தான் அவரை மிகவும் பாதித்ததாம்.
தாய், தந்தையை இழந்த அந்த பொழுது கூட, தன் தம்பிக்காக நன்றாய் படிக்க வேண்டும் என்று அவன் கூறிய வார்த்தைகள்.

வார்த்தைகள் - மிகவும் மதிப்பானவை.

'தூய வார்த்தைகளை உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் வேறுபெற்றோர்' என்பார் நம் திருத்தந்தை.

கெட்ட வார்த்தைகளை வரையறை செய்ய வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்...
'கேட்ட வார்த்தைகள்... கெட்ட வார்த்தைகள்'

திருக்குறளில் கூறியிருப்பது போல், 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு'.

கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்ற இளைஞர், இளம்பெண்களுக்கு வார்த்தை முக்கியம். இந்தக் காலம் தான் எதிர்காலம் அழிவதற்கு மிகப்பெரிய சவாலான காலம்...

'Watch your words'
அடுத்த பாகத்தை நான் நாளை எழுதுகிறேன்...

இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: