வியாழன், 16 மார்ச், 2017

பிரம்மை...

நீ வருவதாய் நினைத்து கதவைத் திறக்கிறேன்....

நீ அழைப்பதாய் நினைத்து ஓடி வருகிறேன்....

நீ கொஞ்சுவதாய் நினைத்து என் கண்களை மூடிக் கொள்கிறேன்....

நீ பார்ப்பதாய் நினைத்து என்னை அழகுபடுத்திக் கொள்கிறேன்...

நீ பேசுவதாய் நினைத்து நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...

நீ தருவதாய் நினைத்து நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்...

நீ படிப்பதாய் நினைத்து நான் கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

நீ திட்டுவதாய் நினைத்து நான் சோகமடைகிறேன்...

நீ அணைப்பதாய் நினைத்து நான் ஆறுதலடைகின்றேன்...

இனிய உன் இனியபாரதி.

கருத்துகள் இல்லை: