ஞாயிறு, 26 மார்ச், 2017

கலைகள்...

நம் நாட்டை எடுத்துக் கொண்டேமென்றால், பழைய கலைகள் எல்லாம், இப்போது அழியத்துவங்கி விட்டன. உதாரணத்திற்கு தெருக்கூத்து, நாடகம்... இப்படிப் பல கலைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். கலைகள் அழியக் காரணம் என்ன? நம் தாய்நாட்டின், தாய்மொழியின் மீது பற்றின்மை. கலாச்சாரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். எதையும் கற்றுக் கொள்ள நேரம் போதாமை. பொருளாதார வசதி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நம் நாட்டின் கலைகள் அழிந்து போகாமல் காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதற்கு என்ன செய்வது? நம் குழந்தைகளுக்குப் பிடித்த ஏதாவது ஒரு கலையை அவர்கள் கற்றுக் கொள்ளும்படிச் செய்வது. இவ்வாறு செய்வதால், நமக்குப் பின் வரும் சந்ததிகளாகவது, கலைகளைப் பாதுகாக்கிறவர்களாக மாறுவார்கள்.

இனிய இரவு வணக்கங்களுடன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: