வியாழன், 1 மார்ச், 2018

நானும் அவளைத் தான்...

எனக்கு நேரும் ஒவ்வொன்றிற்கும்
அவளை மட்டுமே குறை சொல்கிறேன்...
என்னை என் வாழ்க்கையை
வாழ விடாமல் தடுக்கிறாள்...
என்னைப் பாட விடாமல்
என் குரல்வளையைப் பிடித்துக்
கொள்கிறாள்...
என்னை ஆட விடாமல்
என் கால்களை முடக்குகிறாள்...
என்னைப் பேச விடாமல்
என் வாயை மூடச் சொல்கிறாள்...
என்னைச் சிந்திக்க விடாமல்
என் எண்ணங்களைச்
சிதறச்  செய்கிறாள்...
என் விருப்பம் போல்
என்னை வாழ விடாமல்
கருத்தாய் காக்கிறாள்...
அவள்
என் ' பிரம்மையானவள்....'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: