புதன், 28 பிப்ரவரி, 2018

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்...

காலை முதல் வேலை செய்கிறேன்...
குடும்பத்தைப் பற்றி...
நண்பர்களைப் பற்றி...
உறவுகளைப் பற்றி...
ஊரைப் பற்றி...
நாட்டைப் பற்றி...
இப்படி எதையும் சிந்திக்கக்
கூட நேரம் கொடுக்காமல்
என் முழு சக்தியையும்
சுரண்டிக் கொள்கிறார்கள்...
மாலை வீடு கிளம்பும்
நேரத்தில் தான்
அடுத்த வேலை காத்திருக்கும்...
முடியாது என்று சொல்வதற்குக் கூட
முழு சுதந்திரம் கிடையாது!!!
வேறு வழியின்றி அதையும்
முடித்து விட்டுக் கிளம்ப
எப்படியும் ஐந்தாகி விடும்...
இப்படி தினமும் என்னை
நன்றாய் பயன்படுத்தும்
என் அலுவலகம்
என் உழைப்பிற்கு ஏற்ற
ஊதியம் மட்டும்
கொடுக்கத் தவறுகிறது...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: